Friday 12 December 2014

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் மெல்லத் தொட்டுவிட்டு முழுவதுமாக பின்பு தனியே எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன்.

உள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நான் சொல்லிவிட வேண்டும். இந்த 'இறையுதிர் காலம்' என்ற சொல்லை முதன் முதலில்
தன்னுடைய எழுத்தில் பயன்படுத்தியது சக தமிழ் எழுத்தாளரும், இறையியல் ஆய்வாளருமான திரு. அரவிந்தன் நீலகண்டன். இப்பதத்தை உருவாக்கியதற்கு அவருக்கு எனது நன்றிகள், இதை சுட்டிக் காட்டிய கால்கரி சிவா அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.



***

முதலில் இந்த ஆய்வின் அவசியம் என்ன என்பது குறித்த கேள்வி இயல்பாகவே எழும். காபாவின் உள்ளே என்ன இருக்கிறது, இல்லை, இதன் ஆரம்பம் என்ன, இது உருமாறியது எவ்வாறு, மதங்கள் குறித்த ஆய்வு அவசியமா என்ற ஏராளமான கேள்விகள் எழுவதும் இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது, நம்மை மனிதர்களாக மாற்றும். இயல்பான வரலாற்று நிகழ்வுகளை, விபத்துகளை, இயற்கையான விஷயங்களை அமானுஷ்யமாக கருதுவதும், அது நமது கண்ணுக்கு தெரியாத நல்ல/தீய சக்திகளால் நிகழ்கிறது என்று நம்புவதும், மனிதர்களை மிருகங்களாக மாற்றிவிடுகின்றன. இன்றும் சூனியக்காரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு மத்திய பிரதேச வனாந்திரங்களில், மலைவாழ் குழுக்களிடையே கொல்லப்படும் பெண்மணிகள் இருக்கின்றனர். மத்திய காலத்திலோ, இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் கூட தெருவுக்கு தெரு சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அறியாத விஷயங்களைப் பற்றிய பயம், அறியாமையே இந்த குற்றச்செயல்களில் ஈடுபட மனிதர்களைத் தூண்டுகின்றன. இதற்கும் இன்று நடக்கும் குண்டு வெடிப்பு - கொலை - கலவர ஜிஹாதுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

இதுவும் தமது மதமென்று நம்புவது அமானுஷ்ய சக்தி ஒன்றால் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் ஒவ்வொன்றும் பலம் கொண்ட ஒரு சக்தியின் செயல். மதமென்று கருதுவதை மீறுவது, அது மானுடத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், கடவுளுக்கு எதிரானது என்ற கருத்து வலுவாக பிடித்துக் கொண்டு மனிதர்களை ஆட்டுவிக்கின்றது. கண்ணுக்கு முன்னே இருக்கும் இந்த வாழ்க்கையை சுகமானதாக, வளமானதாக, நாலு பேருக்கு நல்லது செய்வதாக ஆக்கி, நிம்மதியாய் இருப்பதை விட்டுவிட்டு எப்போதோ இறந்தபின்பு கிட்டப்போகும் சொர்க்க வாழ்க்கையைப் பற்றிய கனவில் வன்முறைக்கு வாழ்க்கையை தொலைத்துவிட்டு தங்களையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துகிறார்கள் மதவாத நோயால் பீடிக்கப்பட்ட மனிதர்கள்.


***


காபாவின் உள்ளே தற்போதும் மூன்று தூண்கள் உள்ளன. அவை உத்திரத்தை தொடுவதில்லை. முஹமது அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பாகன்களின் பல வழக்கங்களை அங்கீகரித்தார். அவற்றுள் இந்த காபாவின் தன்மையுடன் இணைந்த கம்ப தெய்வ வழிபாடு, ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் (ஹூபல் கடவுள்) வழிபாடும் அடங்கும். மற்ற இடங்களில் இவை நீக்கப்பட்டுவிட்டாலும், முஹமது அங்கீகரித்தபடியால் அவை காபாவில் இன்றும் இருக்கின்றன.


***

கம்ப தெய்வ வழிபாடு என்பது யூத மதத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. இஸ்லாத்தில் நிகழ்ந்த அனைத்தும் யூதமதத்தை பின்பற்றி ஏற்படுத்தப்பட்டவையே.

யூத மதத்தில், ஆரம்ப கால கட்டத்தில் ஜெஹோவா என்ற ஆண் கடவுளுக்கு இணையான கடவுளான அஷெரா என்ற பெண் தெய்வம் இருந்தது. இந்த பெண் தெய்வம் மத்திய கிழக்கில் பல பெயர்களில் வழிபடப்பட்டது. அல்லாத் என்ற பெயரும் அதில் ஒன்று. அரேபியாவில் முழுவதும் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்ட அல்லாத்தின் படங்கள் எகிப்தில், பிற பிரதேசங்களில் அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த அல்லாத் தேவியை மூன்று தேவிகளுள் ஒருவராக வழங்குவதும் யூத மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த முறையே. அதுவே, அரேபியாவில் அல்லாத் - மனாத் - உஸ்ஸா வழிபாடாக இருந்தது. இந்த அல்லாத் தேவி எழுச்சியை காட்டக் கூடிய ஒரு கம்பமாக, கனிகள் தரக்கூடிய மரமாக உருவகப்படுத்தப் பட்டாள்.


***

காபா என்பதும் இஸ்லாத்தில் தோன்றியதல்ல. மத்திய கிழக்கில் வழிபடப்பட்ட இறையில்லங்களின் பெயர்கள் காபாக்கள். ஜோர்டானில் இருக்கும் பெத்ரா காபாவின் பல படங்களை இணையத்தில், ஜோர்டான் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே காண முடியும். அவை மெக்கா நகரின் காபாவைப் போன்ற சதுர வடிவிலேயே அமைந்திருப்பதையும் காண முடியும்.

இஸ்லாமை முகமது தோற்றுவிப்பதற்கு முன்பான காலகட்டத்தில் காபா எனும் சதுரவடிவ ஆலயங்கள் அரேபியாவில் பல இடங்களில், குறிப்பாக அரபி பாலைவனத்தில் நீர்நிலை இருக்கும் வியாபாரத்தலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஜோர்டான் (பெத்ரா) காபாவில், மெக்காவின் காபாவில் இருப்பதைப் போன்றே ஹூபல்/அல்லாஹ் கடவுளை நீள் வடிவ உருவமாக சித்தரித்து சிற்பமாக செதுக்கியுள்ளதையும் காண முடிகிறது.

இந்த காபாக்களுள் என்ன இருந்திருக்கும் என்பது குறித்த யூத கற்பனைகள் பல இருந்தன. இன்று தொல்பொருள் ஆய்வில் அதற்குள் இருந்தவற்றை கண்டுபிடித்துள்ளனர். அநேகமாக எல்லா இடங்களிலும் (பெத்ரா, கெஸல் இன்னபிற), காபாவில் பெண் தெய்வமாக வணங்கப்பட்ட கம்பங்கள் இருந்ததை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்துள்ளனர். இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்புவரை இந்த காபாவின் நகலான பெட்டகம் யூதர்களின் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பிடித்தது. இதை உடன்படிக்கை அடங்கிய பெட்டி என்று யூதமதம் குறிப்பிடுகிறது(Ark of Covenant). ஆனால், இந்த பெட்டியில் இருந்தவற்றுள் முக்கியமான ஒன்று இந்த பெண் தெய்வ வழிபாட்டு உருவகமான கம்பம்/மரத்தின் வடிவு.

இந்த பெட்டி-காபாவின் மீது கடவுள் அமர்ந்திருப்பதாக கருதப்பட்டது (தற்போதைய இஸ்லாத்திலும் அந்த நம்பிக்கையே திரிந்து, காபாவிற்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் கடவுள் அமர்ந்து உலகை பரிபாலிப்பதாக சித்தரிக்கப்படுகிறது).

மெக்காவின் காபாவிற்கு (அதாவது பாகன் அரபிகளின் ஆலயத்திற்கு) யூதர்கள் எப்படி பாகன்களிடமிருந்து கடன் வாங்கியதற்கு ஏகத்துவ சாயல் கொடுத்தார்களோ அதே போன்றதொரு புராண கதையை முஹமதுவும் கொடுத்தார்.

"Moses was directed to consecrate the Ark, when completed, with the oil of holy ointment (Ex. 30:23-26); he was also directed to have the Ark made by Bezalel, son of Uri of the tribe of Judah, and by Aholiab, the son of Ahisamach of the tribe of Dan (Ex. 31:2-7). These instructions Moses carried out, calling upon every "wisehearted" one among the people to assist in the work (Ex. 35:10-12). Bezalel the artist made the Ark (Ex. 37:1); and Moses approved the work, put the testimony in the Ark, and installed it."

http://en.wikipedia.org/wiki/Ark_of_the_Covenant

இந்த காபாவை/பெட்டியை மோஸஸ் ஸ்தாபித்ததாக யூதர்களிடையே இருக்கும் புராணக்கதைபோல, இபுறாகீம் நபி மெக்காவின் காபாவை கட்டியதாக இஸ்லாமியர்களிடையேயும் நம்பிக்கை எழுந்தது.

யூதர்கள் தாக்குதலுக்குள்ளான சமயத்தில் தமது சமய வழிபாட்டு அம்சமான காபாவை பெட்டியாக தூக்கிச் சென்றது எங்கோ யூத சமய வழிபாட்டு அம்சமாக மாறி பெட்டியாக சுருங்கியுள்ளது. இது ஆயுவுக்குரியது.

***
இந்த பெட்டியினுள் நின்ற நிலையில் கம்பம் இருந்தது என்பதை யூத நூல்களில் காண முடிகிறது.

In Numbers 17, Korah's rebellion against Moses' proclamation of the tribe of Levi as the priesthood has been quashed and the entire congregation's ensuing rebellion has resulted in a plague, ended only by the intercession of Moses and Aaron. In order to "stop the complaints" of the Israelites, God commands that each of the Twelve Tribes provide a rod; and only that of the tribe chosen to become priests will miraculously sprout overnight. Aaron provides his rod to represent the tribe of Levi, and "it put forth buds, produced blossoms, and bore ripe almonds" (Numbers 17:8), as an evidence of the exclusive right to the priesthood of the tribe of Levi. In commemoration of this decision it was commanded that the rod be put again "before the testimony" (Numbers 17:10). According to tradition, the rod of Aaron bore sweet almonds on one side and bitter on the other; if the Israelites followed the Lord, the sweet almonds would be ripe and edible, but if they were to forsake the path of the Lord, the bitter almonds would predominate. A later tradition asserts (Hebrews 9:4) that the rod was kept in the Ark of the Covenant. The main fact, however, is thus confirmed, that a rod was preserved in the Tabernacle as a relic of the institution of the Aaronic priesthood.

http://en.wikipedia.org/wiki/Rod_of_Aaron



யூத மதத்தில் தோன்றிய முக்கியமான ஒரு அம்சத்தை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது, எதோ ஒரு காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனை தோன்றி, ஒன்றைத் தவிர மற்றதெயெல்லாம் அழிப்பது - ஒரு கடவுள், ஒரு நபியைத் தவிர மற்றவர்களையெல்லாம் கொன்று அழிப்பது (பெண்கள், குழந்தைகள் உட்பட) கடவுளின் ஆணையாக ஆனது. அப்படி ஏற்கப்படும் அந்த ஒன்று, அந்த நபி தோன்றும் பகுதியில் அல்லது மதம் பரவும் பகுதியில் இருந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறையாக ஆனால், அந்த மதம் விடுவிடுவென்று பரவுவதற்கு ஏதுவாக அந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறை செயல்பட்டது.

இதற்கு நல்ல உதாரணம், கிறிஸ்துவத்தில் இருக்கும் கன்னிமேரி கடவுள். கிறிஸ்துவ அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லையென்றாலும், பரவிய இடங்களில் இருந்த பாகன் கருத்துகள் ஊடுறுவியதால் ஏற்பட்ட இந்த வழிபாட்டு முறையே கிறிஸ்துவம் பெருமளவில் பரவுவதற்கு உறுதுணை புரிந்தது. அதே போன்றே சூஃபியிஸம் என்ற பாகன் வழிபாட்டு முறையே துரதிர்ஷ்டவசமாக பலரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தது. வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் அன்பர், திலீப்குமார் ரஹ்மானானதை குறிப்பிட்டு ஜெய்ஹோ என்று முழங்குகிறார் திண்ணையில். ஆனால், திலீப்குமார் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்தது இஸ்லாத்தால் இல்லை. தன் வீட்டில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில், அந்த சூனியத்தை நீக்கிய சூஃபி ஒருவரின் ஆளுமையால் இஸ்லாத்திற்குள் வந்தார். சூனியம்/சூஃபியிஸம் இரண்டையுமே வஹ்ஹாபிகள் இஸ்லாத்தால் ஏற்கப்பட்டது என்று ஏற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

***

இதே போன்றே ஆபிரகாமிய மதங்கள், பாகன் வழிபாட்டு முறைகளில் சிலதை ஏற்று, அதை ஒரு இடத்தில் மட்டும் ஏற்பதும், மீதமுள்ள இடங்களில் நிராகரித்து அதே வழிபாட்டு முறையை தூற்றி கடவுளுக்கு எதிரானது என்று அழிப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை அடியொற்றியே யூத பாரம்பரியத்தை எல்லா வகையிலும் ஏற்ற முஹமது, பாகன் அரபிகள் புனிதமாக வழிபட்ட கம்பங்கள், ஹஜருல் அஸ்வத் லிங்கம் ஆகியவற்றை மெக்காவில் இருக்கும் காபாவில் அனுமதித்து, மற்ற இடங்களில் அதே விஷயங்களை சைத்தானாக, கடவுளுக்கு எதிரானதாக விவரித்து அழிக்கச் சொன்னார்.

யூத மதத்தில் ஏகத்துவம் நுழைந்த போது ஜெஹோவா என்ற குழுத்தேவன் உயர்த்தப்பட்டு, அஷெரா விரட்டியடிக்கப் பட்டாள். கம்பம்/கனிகள் தோன்றும் மரமான fertility goddess ஒழித்துக் கட்டப்பட்டது. இதே போன்றதொரு நிகழ்வு இஸ்லாத்திலும் நிகழ்ந்தது. அரபிகளின் தெய்வங்களுள் தலையான தெய்வமான லா(ஹ்) கடவுள், ஏகத்துவ இறைவனாக ஏற்கப்பட்டு, அத்தெய்வத்தின் இணையாக அல்லது அத்தெய்வத்திடமிருந்து வெளிப்படும்(மகள்) சக்தியான அல்லாத் வழிபாடு ஒழிக்கப் பட்டது.

ஆனால், யூத மதத்தில் ஏனைய கம்பங்கள் அழிக்கப்பட்டு ஏகத்துவம் நிலைநாட்டப்பட்ட பின்பும், Ark of Covenant என்ற பெயரில் அழைக்கப்பட்ட பெட்டக காபாவில் இருந்த கம்பம் பாதுகாக்கப் பட்டது போலவே முஹமதாலேயும், பாகன் அரபிகளின் காபாவில் இருந்த கம்பத்தெய்வங்கள், ஹஜருல் அஸ்வத்(கறுப்புக் கல்) பாதுகாக்கப் பட்டது. முஹமதின் காலத்திற்குப் பின்பு வந்தவர்களுக்கு, இதற்குப் பின்னால் இருக்கும் இறையியல் புரியாவிட்டாலும், கடவுளின் தூதர் செய்யாத ஒன்றை தாம் செய்ய அஞ்சி அதை விட்டு வைத்தனர்.

***

இஸ்லாமியர்கள் ஏன் சாத்தானை கல்லால் அடிக்கின்றார்கள், ஏன் காபாவில் உள்ள அந்தக்கால சிவலிங்கத்தை இன்றும் முத்தமிடுகிறார்கள் என்றெல்லாம் கேட்டால் அதற்கு வெளியில் உள்ள முஸ்லீமல்லாதவர்களுக்கு உயர் விளக்கங்களை இட்டுக்கட்டி இஸ்லாமிஸ்டுகள் சொல்கிறார்களே தவிர, உள்ளே நிகழும் குத்பா பிரசங்கங்களில் உண்மையான அடிப்படையை பகிர்ந்து கொள்கிறார்கள். இதோ இந்த பிரசங்கம் அதை தெளிவுபடுத்துகிறது:

“You don’t need your scientific reasoning to tell you why you stone the devil, or kiss the black stone. The Prophet(s) did it, so just do it.”

http://issu1.stanford.edu/?q=node/45

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கே இந்த அறிவுரை என்றால், எது உண்மை, எது அடிப்படை என்பது பற்றி எந்தக் குழப்பமும் வேண்டியதில்லை. எதை வணங்கவேண்டும் என்று தீர்மானிப்பது எங்கோ இருக்கும் லாஹ் கடவுள் அல்ல, அவரது தூதராக தம்மை சொல்லிக்கொண்ட முகமதுதான். முகமதின் சீடரும், தோழரும், மாமனாரும், இரண்டாவது காலிஃபுமான உமர் இப்படி சொல்கிறார்.

Volume 2, Book 26, Number 679: Narrated Zaid bin Aslam that his father said:
"I saw 'Umar bin Al-Khattab kissing the Black Stone and he then said, (to it) 'Had I not seen Allah's Apostle kissing you, (stone) I would not have kissed you.'

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/026.sbt.html#002.026.679

முகமது வணங்கினார் என்றால், உமரும் வணங்குகிறார். ஆயிஷாவிடம் சஃபா மர்வா குன்றுகளை கிரிவலம் வரலாமா என்று முகமதின் மறைவுக்கு பின்பு சந்தேகம் கேட்டபோது, செய்யலாம் ஏனென்றால் முகமது அப்படி செய்தார் என்று அவர் பதிலளிக்கிறார். அதாவது முகமது செய்த உருவ வழிபாடுகளெல்லாம், ஏற்கப்படுபவையாகவும், அவர் செய்யாத ஒரு விஷயம் கடவுளுக்கு பிடிக்காததாகவும், கடவுள் அந்த வழிபாடுகளள ஏற்காததாகவும் இஸ்லாத்தில் கருதப்படுகின்றது. முகமது கடவுள் சொல்லியதாக சொன்னால், அது கடவுளின் சொல்லாகிறது. முகமதின் நண்பர்கள் இது தவறு என்று சுட்டிக்காட்டினால், அதை முகமது ஏற்று குரானின் வசனங்களை மாற்றினால் அது சாத்தானின் வேத வசனங்களாகிறது(லாத் தேவி வழிபாட்டை அபுபக்கர் தடுத்து நிறுத்தியதைப் போல). குரான் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, பல வசனங்கள் முகமதாலேயே திருத்தப்பட்டன. இதை நியாயப்படுத்த முன்பிருந்ததைவிட இன்னும் நல்ல குரான் வசனங்களை கொண்டு வருவோம் என்று குரானே சொல்கிறது. இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையான ஹதீஸ்களே கடவுளின் குணத்தை, கட்டளைகளை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஹதீஸ்களில் பெரும்பாலானவை ஆயிஷா, அலி போன்று எதிரெதிராக சண்டையிட்டுக் கொண்ட முகமதின் குடும்பத்தார், தோழர்கள், பின்பு ஆட்சிக்கு வந்த கலீபாக்களால் தீர்மானிக்கப்படுபவை. ஆகவே, எது கடவுள் என்பதை தீர்மானிப்பது முகமதுவின் செயல்பாடுகள் தாம், பகுத்தறிவெல்லாம் அங்கே கிடையாது. ஆனால், ஒரு நம்பிக்கையை பகுத்தறிவு என்று முன்வைத்து, மற்றவர்களின் நம்பிக்கையை ஏளனம் செய்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

***

ஆனால், இந்தியர்கள் தம் கண்முன் காணும் பல உன்னத ஆன்மீகவாதிகள் சொன்னதை ஏற்றார்கள், செய்ததை ஏற்றார்கள். முஹமது சொன்னதால் கல்லை மதிப்பது, முத்தமிடுவது ஏற்புடையதாகிறது என்றால், இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற அப்பழுக்கற்ற ஆன்மீகவாதிகள் சுட்டிக்காட்டிய கடவுளை கல்லில் வழிபட்டு கடவுளை அடைவது, மலையை சுற்றி வந்து அகமுன்னேற்றம் அடைவது ஆகியவையும் ஏற்கத்தக்கவைதானே என்று இந்துக்கள் கேட்கிறார்கள். இஸ்லாமியர்களோ தங்களது உருவ வழிபாடுகள் உருவ வழிபாடுகளே இல்லை என்றும், மற்றவர்களின் உருவகங்கள் உருவ வழிபாடு என்றும் நம்பி வருகின்றனர்.

***

கல்லில் கடவுள் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிப்பதில்லை, சொல்வதில்லை. அது, கல்லில் சாத்தான் வசிக்கிறது, பெண் தெய்வங்கள், ஜின்கள் வசிக்கின்றன என்ற இஸ்லாமிய நம்பிக்கை. முஹமதின் தோழர்கள் அவரது உத்தரவின் போது பெண் தெய்வச்சிலைகளை உடைத்தபோது அந்த சிலைகளிலிருந்து கறுப்பாக, தலைவிரி கோலமாக பெண் தெய்வங்கள் ஓடியதை கண்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன. முஹமதே கடவுள் சிலைகளை காபாவில் உடைத்தபோது, அவற்றின் கண்ணை குத்தினார் - ஏனெனில் அதில் இருந்த சாத்தானின் கண்கள் குருடாகிப் போகுமென்று! கல்லில் கடவுள் இல்லை என்றால், கல்லில் சாத்தான் மட்டும் எப்படி வசிக்க முடியும்?

தற்போதும் கம்பத் தெய்வத்தை சைத்தான் என்று கருதி கல்லால் அடிக்கும் வழக்கம் ஹஜ்ஜுக்கு செல்லும் இஸ்லாமியரிடையே இருக்கிறது. யூத மதத்தில் இந்த கம்பங்களை எரிப்பதும், மரங்களை வெட்டி வீழ்த்துவதும் சைத்தானை ஒழித்துக் கட்டும் உன்னத செயலாக கருதப்பட்டது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஹமதின் கட்டளையின் பேரில் அவரது சஹாபிகள் இப்படி தெய்வங்களாக க்ருதப்பட்ட மரங்களை வெட்டினர்.
பிற்காலத்தில் வஹ்ஹாபிகள் தலையெடுத்த போது அவர்களும் மரங்களை சைத்தானின் குறியீடு என்று குற்றம் சாட்டி வெட்டிச் சாய்த்தனர்.


***

இஸ்லாமியர்கள் ஏன் கடவுளை அல்லாஹ் என்று குறிப்பிடவேண்டும், ஏன் வேறு பெயர்களில் குறிப்பிடக் கூடாது என்று கேட்டால், பலவித சால்ஜாப்புகளை சொல்வார்கள். அதிலொன்று அல்லாஹ் என்பதற்கு பெண் பால் அரபியில் கிடையாது என்று. அது தவறு. மேலே குறிப்பிட்டுள்ளது போன்று அல்லாத் என்ற பெண் தெய்வம் அல்லாஹ்வைப் போலவே அன்றைய அரேபியாவில் இருந்திருக்கிறது. அத்தெய்வங்களுள் ஆண் தெய்வத்தை மற்றும் ஏற்று, பெண் தெய்வத்தை ஷைத்தானாக விரட்டியது இஸ்லாம். அடிப்படையில் ஆணை மயக்கி சொர்க்கத்திலிருந்து தள்ளியது பெண்ணே என்ற யூத கருத்தாக்கமே இது போன்று பெண்களை தெய்வங்களாகவோ, நபிகளாகவோ ஏற்க ஆபிரகாமிய மதங்கள் மறுப்பதன் அடிப்படை.

பெண் தன்மையை அடக்கும்போது, இயல்பாகவே அத்தன்மையுடன் கூடிய மனிதத்தன்மை, இரக்க மனோபாவம் ஆகியவை பின்னுக்குப் போய் ஆன்மீகவெளியிலும், அகவெளியிலும் சமச்சீர்தன்மை கெடுகிறது.


***


லாத் - ராத் எனும் பெண் தெய்வம் பற்றிய குறிப்புகள், சித்திரங்கள் எதுவும் இன்றைய சவுதியில் இல்லை - அவை முகமது காபாவைக் கைப்பற்றிய பின்பு முகமதாலும், அபுபக்கர் போன்ற முகமதின் தோழர்களாலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எகிப்து போன்ற இடங்களில் அல்லாத் தலைக்குமேல் சூரியனுடன் இருக்கிறது, மனிதர்களை பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கும் சக்தியாக இந்த அல்லாத் தேவி உருவகப்படுத்தப்படுகின்றார். சந்திரன் ஆணாகவும் (ஆண் கடவுள்) சூரியன் பெண்ணாகவும் கருதும் வழக்கு அக்கால அரேபியாவிலும் எகிப்திலும் இருந்தது. சிற்சில இடங்களில் இப்பெண் கடவுள் உயர் கடவுளின் பெண் வாரிசாகவும் கருதப்பட்டது, இந்த அல்-லாஹ் மற்றும் அவரின் மகள்களான அல்-லாத், அல்-உஷா, அல்-மனாத் போன்ற பெண் தெய்வங்களை குரானின் அத்தியாயம் 53(53:19) குறிப்பிடுகிறது. "உங்களுக்கெல்லாம் மட்டும் ஆண் பையன் ஆனால் (லாஹ்) கடவுளுக்கு மட்டும் பெண் பிள்ளைகள் " என்று முகமது குரானில் சொல்கிறார்(அவருக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் இருந்தது இங்கே பிரதிபலிப்பதைக் காணலாம்):

Quran 053.019-22
"Have you then considered the Lat and the Uzza, and Manat, the third, the last?
What! for you the males and for Him the females!
This indeed is an unjust division! "

http://www.usc.edu/dept/MSA/quran/053.qmt.html#053.019

ஒரு அசைவற்ற பரம்பொருளில் இருந்து, அதில் அசைவேற்பட்டு உத்வேகத்துடன் கூடிய, பிரபஞ்சத்தை வெளிப்படுத்தக் கூடிய தாய்த்தன்மையுடன் வெளிவரும் இறைத்தத்துவத்தை வெளிப்படுத்த பாகன்கள் இந்த அமைதியான ஆண்கடவுளிடமிருந்து பிறக்கும் மகளாக பெண் தெய்வத்தை உருவகப்படுத்தியிருக்கலாம்.

இதில் சில சமயங்களில் அல் - லா(ஹ்) கடவுள் இரவிற்கான கடவுளாகவும், அந்த இரவோடு இணைந்த மூன்று காலகட்டங்களை இந்த மூன்று பெண் தெய்வங்களும் குறிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. Al-Uzza என்ற அதிகாலையின் கடவுள், உஷை என்ற ரிக்வேத கால பெண் தெய்வத்தின் பெயரையொத்திருப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ரிக் வேதத்திலும் இது அதிகாலையின் கடவுளாக, இரவு நீங்கி பகல் வருவதைப் போல மனதின் இருள் நீங்கி ஆன்மீக ஒளி நம்முள் தோன்றுவதை கட்டியம் கூறும் பெண் தெய்வமாக இந்த உஷை ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப் படுகின்றார்.


***

குரான் வசனம் 113:4. இதில் சூனியம் செய்வதை எதிர்த்து சொல்லப்படும் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்கள் உஷை தேவியிடம் சூனியத்திலிருந்து எங்களைக் காப்பாற்று என்று சொல்வதாக அமைந்துள்ளன. இந்த வசனங்கள் குரானே இல்லை என்று கருதிய பல ஆரம்பகால முஸ்லீம்களும் இருந்தனர் (அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் – இவர் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீதும் இருக்கிறது – இந்த வசனங்கள் குரானா இல்லையா என்ற சந்தேகத்தினாலேயே குரானின் கடைசியில் அவற்றை கலீபாக்கள் தொகுத்திருக்க வேண்டும்) – ஆனால், இன்றைய இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுதூதி, இதுவும் குரானின் அங்கமே என்று அடித்தம் திருத்தமாக சொல்கிறார். பார்க்க:
http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau113.html

(அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீது இருக்கிறது – ஆனால் சரித்திர விபத்தாக இந்த குரான் வசனம் அப்போதிருந்த கலீபாக்களால் குரானாக திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டுவிட்ட நிலையில், மவுதூதி அதை ஏற்பதே சரி என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்).

இப்படி தனது ஆன்மீக வாழ்வை துவக்கிய முகமது, இதற்கடுத்த நிலையில் கிறித்துவத்தின் பால் /ஏகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட பாகன் அரபிகளாலும்(நஃபால், கதீஜா, அரபி ஹனஃபிக்கள்), யூதர்களிடம் நபியின் வருகை பற்றி கேட்டிருந்த மதீனாவின் பாகன் அரபிகளாலும் நபியாக ஏற்கப்பட்டார். முதலில் தமது ஆதரவாளர்களை கிறித்துவ நாடொன்றிற்கே அனுப்பி ஆதரவு தேடினார். அவர்களும் அங்கிருந்த மன்னரிடம் தமது தலைவர் இயேசு கிறித்துவை ஏற்பவர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். குரானில் சில வசனங்கள், கிறித்துவர்களே இஸ்லாம் பற்றி பரிவு காட்டுபவர்கள் என்று சொல்கின்றன. ஆனால், கிறித்துவர்களில் பெரும்பாலோர் தம்மை ஒரு தேவதூதனாக ஏற்கவில்லை என்றவுடன், யூதர்களிடம் போய் அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் மெஸய்யா(நபி) தாம் தான் என்றார். தற்போதைய ஹாகரிஸ ஆய்வாளர்கள், முகமது தன்னை யூத மதத்தை பரப்பும் பிரச்சாரகாரகவே முதலில் அடையாளம் காட்டிக் கொண்டார் என்கிறார்கள்.( யூத நபிமார்கள் பலரும் ஆரம்பத்தில் இந்த மந்திர-தந்திர உச்சாடனர்களாக இருந்ததும் கவனிக்கத் தக்கது, எனவே இது கூட நபித்துவத்தின் பகுதியாக இருந்திருக்கலாம்).

ஆனால், யூதர்களும் தம்மை ஏற்கவில்லை என்றவுடன் – அதுவரை கடவுளின் இருப்பிடமாக தாம் அடையாளம் காட்டிய ஜெருசலேம் நகரின் காபாவிலிருந்து (இந்த காபாவிற்கு மேலேதான் கடவுளை புராக் பயணத்தின் போது முகமது கண்டார் – முகமதியர்கள் இன்றும் பின்பற்றும் பல இஸ்லாமிய நம்பிக்கைகள், ஐவேளை தொழுகை உட்பட இந்த விண்வெளிப்பயணத்தின் போதுதான் முகமதுவால் அருளப்பட்டது) கடவுளை இடம் மாற்றி, பாகன் அரபிகளின் காபாவையே, அங்கிருந்த கடவுளையே தமது கடவுளாக தேர்ந்தெடுத்தார். இதை ஏற்காதவர்களை ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை புரிந்து கொள்ளாத முட்டாள்கள்’ என்று குரான் திட்டுகிறது:
Quran 002.142
"The fools among the people will say: What has turned them from their qiblah which they had? Say: The East and the West belong only to Allah; He guides whom He likes to the right path."

http://www.usc.edu/dept/MSA/quran/002.qmt.html

***

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றால், காசியை கிப்லாவாக ஏன் ஏற்கக்கூடாது? சிரீரங்கத்தை ஏன் காபாவாக ஏற்கக்கூடாது? குரானில் விடை இருக்கிறது:

"(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் 'கிப்லா' (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதுல் ஹராமி'ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!...." (குரான் 2: 144)

மற்ற மதத்தவர்கள் தம்மை ஏற்க மறுத்த நிலையில், முஹமது தீர்மானித்தார் தமது குலதெய்வக்கோவிலையே கடவுளின் இருப்பிடமாக ஏற்பது என்று. இப்படியாக முகமதுவின் உள்மன உந்துதலே அப்போதிருந்த அரபி பாகன், யூத, கிறித்துவ நம்பிக்கைகளில் சிற்சில பகுதிகளை ஏற்று அப்படி ஒன்று திரட்டியதையெல்லாம் கடவுளாக, மதமாக முன்னிறுத்தியது. இல்லையென்றால், முஹமது விரும்புவதால் தமது இருப்பிடத்தை கடவுள் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அப்படி மாற்றிக்கொள்வது, முஹமதுவுக்கு பாகன் அரபிகளை தம் பக்கம் இழுத்து தனது அடிமைகளாக மாற்றுவதற்கு வழி செய்தது.

இப்படி முகமதுவின் விருப்ப வெறுப்புகள் எல்லாம் லாஹ் கடவுளின் விருப்ப வெறுப்புகளாக இஸ்லாத்தால் முன்னிறுத்தப்படும் நிலை. ஆபிரகாமிய மதங்களில் கடவுள் என்பது கட்டளைகளைப் பிறப்பிப்பதாகவும், சமூக நெறிகளை வகுத்துத் தருவதாகவும் இருக்கிறது. முகமது மட்டுமல்ல, அவரது மனைவியான ஆயிஷா, நண்பர்கள், கலீஃபாக்கள் எல்லோரும் இதுதான் கடவுள், இதுதான் கடவுளின் கட்டளை என்று தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை இஸ்லாமிய வரலாற்றில் பார்க்க முடிகிறது.


***

இவற்றை கடவுளின் வார்த்தைகள், கடவுளின் அங்கீகாரம் பெற்றவை என்று முகமதியர்கள் கருதுவதில் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், தனது நம்பிக்கை மட்டுமே உண்மையானது, மற்றவையெல்லாம் இழிவானது, பொய்யானது என்று சொல்லி வன்முறையில் ஈடுபடுவது தவறானது. அதனாலேயே இதன் பின்னால் இருக்கும் வரலாற்றை, கண் முன்னே இருந்தும் காண மறுக்கும் உண்மையை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கின்றது.

மதத்தின் பெரிய சக்தி இதுதான், எல்லாவிதமான ஆய்வுகளும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப இருக்க வேண்டும் என்று நம்புவது, முடிவுகளை முன்பே மனதினுள் அமைத்துக்கொண்டு அதற்கேற்ற விடைகளை மட்டும் தேடுவது என்பது மதவாதிகளின்/நம்பிக்கையாளர்களின் இயல்பான குணம். அதை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது அது மனதை புண்படுத்துவதாக அமைகிறது, ஆனால் உருவ வழிபாடு சைத்தானின் செயல் என்பதே இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக இருக்கும்போது, அதையே அடிப்படைக் கோட்பாடாக ஏற்போர், தமது நம்பிக்கையை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது மட்டும் கொதித்து எழுகிறார்கள், அவதூறு என்று குற்றம் சாட்டுகின்றார்கள். இன்றைய இந்துக்கள், படித்தவர்கள், ஆய்வாளர்கள் பல பாகன் கடவுள்கள் எப்படி பெரிய கடவுளாக மாற்றம் பெறுகின்றன என்பதை ஆய்ந்துள்ளார்கள், தமது நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும் ஏற்கிறார்கள், குறைந்த பட்சம் வன்முறையில் ஈடுபடாமலாவது இருக்கின்றார்கள். கிறிஸ்துவர்களும் அப்படியே, கன்னிமேரி கடவுள் பாகன் கடவுள் என்று நான் எழுதிவிட்டு அஞ்சத் தேவையில்லை. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒரே போன்று மூடநம்பிக்கை கொண்டனதான், எல்லா மதங்களுமே மனதை குழப்பியும், மூளைச்சலவை செய்துமே பிழைக்கின்றன. படிநிலைகள் தான் வெவ்வேறு என்றாலும், இஸ்லாத்தை தவிர பிற மதங்களில் இந்த அளவுக்கு வன்முறை இல்லை, அச்சுறுத்தல் இல்லை.

நான் சொல்வது சாதாரண, மூளைச்சலவை செய்யப்பட்ட, சிறு வயதிலிருந்து அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று கற்பித்து பயத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சற்றே படித்த, படித்தவர்களுடன் பழகக் கூடிய, மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பவர்களாவது பெற்றோர் பயிற்றுவித்தவைகளை மீறி ஆய்வுப்பார்வையை மேற்கொள்ள வேண்டும். நாகூர் ரூமி, ஹமீது ஜாஃபர், அப்துல் கையும் மற்றும் பல சக எழுத்தாள இஸ்லாமிய சகோதரர்களுக்கான எனது வேண்டுகோள் இதுதான். வன்முறை தவிர்ப்போம், மதங்களை ஆய்வுக்குட்படுத்தி மூளைச்சலவையிலிருந்து வெளிவருவோம், அன்பும் அமைதியும் தழைக்கும் வையகத்தை உருவாக்குவோம். நமது காலத்தில் இது நடக்காவிட்டால் கூட, இதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் செல்வோம். நாம் இதற்கு முயற்சி செய்யவில்லை என்றால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிந்திக்கும்.

No comments:

Post a Comment