Tuesday 24 February 2015

பசுக்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது

இன்று அடியேன் எடுத்து கொண்டுள்ள தலைப்பு சற்று சர்ச்சைக்கு உரிய தலைப்புதான். ஆனால்? இந்த தகவல்கள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை. ஒரு மாதத்திற்கு முன் பசு பாதுகாப்பு படை என்கிற ஒரு முகநூல் பக்கத்தில் இந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டாலும் பல முஸ்லிம் பெரியவர்களிடம் இதுபற்றி ஆலோசனை பெற்றே இதை பதிவு செய்கிறேன். அவர்கள் தங்களது பெயர்களை எக்காரணத்தை கொண்டும் பிறரிடம் கூறக்கூடாது என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அடியேனும் அவர்களுக்கு என் அம்மா, அப்பாவிடம் கூட கூறமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன். இதற்க்கு comment செய்ய நினைக்கும் மாற்று மத நண்பர்கள் முழுமையாக படித்து விட்டு பின்னர் comment செய்யவும்.

உலகில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட முதல் பசுப் பாதுகாப்பு மாநாடு இந்தியாவில்தான். 27/3/2014 அன்று மதியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்பூரில் நடந்தது. அம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட செய்திகளில் சில.


“..புனித குரானில் முதல் அத்யாயம் “சுரா பக்ரா” பசுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவூட்டினர். மேலும் இறைதூதர், நோய்கள ஏற்ப்படுத்தும் என்பதால் பசுமாமிசம் உண்பதை தடை செய்ததையும் அதே நேரம் பசுவின் பால் நெய் போன்றவை ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பியவை எனவே அவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உத்தரவிட்டதை குறிப்பிடப்பட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக புனித மெக்காவில் பசுக்கள் பலியிடப்படவே இல்லை. எனவே பசுக்கொலை பிரச்னை அரசியல் பிரச்னை தான் எனவும், மனித சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் தான் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பாரதத்தின் முதல் இஸ்லாமிய பள்ளியான “தாருல் உலூம் தேவ்பந்” பல்வேறு காலகட்டங்களில் பசுக்கொலைக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்..”

அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள்,
“பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”

ஹக்கீம் அஜ்மல் கான், இஸ்லாமிய தேசியவாதியும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், யுனானி மருத்துவத்தை மீட்ட மிக பெரும் மருத்துவ நிபுணரும் ஆவார்,

குரானோ, அரேபிய மரபுகளோ பசுக்கொலையை அனுமதிக்கவில்லை“

புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் [Revival of Religoious Science] என்னும் புத்தகத்தில்,

“மாட்டின் இறைச்சி ஒரு நோய் (மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான். அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொல்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்”

மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரும், இந்தியாவுக்குள் இஸ்லாமிய அரசை நிறுவியவரும், தீவிர இறை பற்றாளருமான மாமன்னர் பாபர் (தனது ‘துசுக்-இ-பாபரி’ புத்தகத்தில் ஏட்டில்),

“மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் பசுக்கள் பலியிடபடுவத்தை/கொல்லப்படுவதை அனுமதிக்க கூடாது. இதை மீறும் எனது வழிவந்தவர்கள் யாராயினும் குடிமையாலும், சாமானிய மக்களாலும் தூக்கி எறியபடவேண்டும்” அதுமட்டும் அல்ல. பாபர் வெளியூர் செல்லும் பொழுது எல்லாம் தனது மகனுக்கு எழுதிய கடிதங்களில் பசுக்கறி உன்ணாதே அவ்வாறு செய்தால் இந்தியர்களின் மனம் புண்படும். அதுமட்டும் அல்லாது அது ஒரு பெரும் பாவம் என்று தனது மகனுக்கு கடிதங்கள் எழுதிய பாபர் எவ்வாறு? ராமர் கோவிலை இடித்து இருப்பார். இன்று பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்பு ராமர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்து இருக்கலாம். ஆனால்? அந்த மசூதிக்கு பாபர் மசூதி எனும் பெயர் இருப்பதாலேயே அவர்தான் அங்கு உள்ள ராமர் கோவிலை இடித்தார் என்று சொல்லி விட முடியாது. பாபரின் ,மகன் ஹிமாயுன் பாபர் போல் நல்லவர் அல்ல. அவன் கூட ராமர் கோவிலை இடித்து தனது தந்தை பெயரை அந்த மசூதிக்கு வெய்த்து இருக்கலாம்.

மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் 28.07.1857 அன்று வெளியிட்ட அரச கட்டளை,

“இறைவனின் படைப்பில் (கல்க் குதா கா), பேரரசரின் சாம்ராஜ்யத்தில், தலைமை தளபதின் உத்தரவினால், யாரெல்லாம் பசுக்களையோ, காளைகளையோ, கன்றுகளையோ – பொது இடத்திலோ/வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ரகசியமாகவோ- வெட்டினாலோ/பலியிட்டாலோ, பேரரசரின் விரோதியாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கபடுவார்கள்”

மைசூர் சுல்தான்கள் சாம்ராஜ்ஜியம்:

பசுக்களும் மாடுகளும் கன்றுகளும் கொல்லப்படுவதும், பலியிடப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றம். மீறுபவர்கள் கைகள் துண்டிக்கப்படும்.

பத்மஸ்ரீ முஜாபர் ஹுசைன், 13 தேசிய விருதுகள் பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்,

“புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை”

பசு கறி மற்றும் பன்றி கறி. இரண்டுமே ஹிந்து, இஸ்லாம் ஆகிய இறு மதங்களில் அனுமதிக்கப்படாததன் காரணம். அதன் மாமிசத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு இருப்பதால்.

பசு கறி மற்றும் பன்றி கறி. இரண்டுமே ஹிந்து, இஸ்லாம் ஆகிய இறு மதங்களில் அனுமதிக்கப்படாததன் காரணம். அதன் மாமிசத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு இருப்பதால்.

பணம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கிறது. தயவுசெய்து பசுக்கொலை எனும் மிக பெரும் பாவத்தை செய்ய வேண்டாம் என்று தாழ்மையோடு அனைத்து மதத்து சகோதரர்களையும் கைகூப்பி கேட்டு கொள்கிறேன்.

வறுமையின் நிறம் சிவப்பு. பசுவின் நிறம். பசு எனும் சொல் நமது மனம், ஆத்மா, உயிர் முதலானவற்றையும் குறிக்கும். சிவனது பல பெயர்களில் பசுபதியும் ஒன்று. உயிரின் நிறம் என்ன? அதை நாளை பார்ப்போம்.


ok

No comments:

Post a Comment