Thursday 19 February 2015

இஸ்லாத்தில் பெண்களின் நிலை

சகோதரர் அருண், 
//இப்பதிவு எவ்வகையில் கடவுளின் விளம்பரம் என தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்//

தொலை காட்சி சேனல்களில் பார்த்திருப்பீர்களே. உலக மஹா மருத்துவர்கள், தங்கள் பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு தங்கள் திறமைகளை பக்கம் பக்கமாக கூறுவார்கள். இவருக்கு வருடக்கணக்கில் கை கால்களில் குடைச்சல் இருந்தது, என்னுடைய ஒரு வேளை மருந்தில் எல்லாம் சரியாகி விட்டது. என்னுடைய மருந்து தான் உலகத்திலேயே சிறந்தது என்கிற அளவுக்கு அளந்து கட்டுவார்கள். பக்கத்தில் இருப்பவரும் நன்றாக ஜால்ரா போடுவார். அது போன்று தான் இதுவும். பார்த்தீர்களா இவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறி கொண்டு இறக்கிறார்கள். நீங்கள் எப்போது மாறப்போகிறீர்கள் என்பது மாதிரி. திடீர் திடீர் என்று ஒரு செய்தியை
பரப்புவார்கள். மைக்கேல் ஜாக்சன் இஸ்லாமியராகிவிட்டார். மைக் டைசன் இஸ்லாமியராகிவிட்டார், அவர் மாறி விட்டார் இவர் மாறி விட்டார் என்று. ஆனால் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. மைகேல் ஜாக்சன் இஸ்லாமியரகிவிட்டார் என்று செய்தி பரப்பி கொண்டு இருந்தார்கள். ஆனால் இறந்த பிறகு அவர் கிறிஸ்த முறைப்படி தான் அடக்கப்பட்டதாக செய்திகள் கூறின. அந்த நேரத்தில் இவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை.இதுவும் விளம்பரத்தில் ஒரு வகை தான் , 
தரமான பொருளுக்கு என்றைக்குமே விளம்பரம் தேவை இல்லை.




சகோதரர் அருண், 
நங்கள் அமைதியாகத்தான் தெளிந்த மனதுடன் தான் இருக்கிறோம் ஆஷிக் அவர்களே, இந்த அமைதி உலகெங்கிலும் உள்ள உங்கள் அமைதி மர்க்கதினற்கு தான் முதலில் தேவை. டைம்ஸ் ஆன்லைனில் வந்த செய்தியை தமிழில் வாந்தி எடுத்தவர் நீங்கள் தானே. இஸ்லாமிய மார்க்கத்தின் நிறுவனரான அல்லா குரான் முழுக்க தன்னுடைய கொள்கை பரப்பு செயலாளரான முகமது மூலமாக இந்த விளம்பரத்தை தானே செய்து கொண்டிருக்கிறார். என்னை நம்புங்கள் நாந்தான் ஒரே கடவுள். முகமது தான் என்னுடைய தூதர் என்று. பெற்ற தாயை ஒரு பிள்ளை பிறர் கூற தெரிய வேண்டியது இல்லை. இந்த குரானை நீங்கள் சிந்திக்க வேண்டாமா நான்தான் கடவுள் என்று சிந்திக்க வேண்டாமா என்று ரொம்பவே கடவுள் வேதனையுடன் கேட்கிறார். பாவம் கடவுளுக்கு கூட தன்னை வெளிப்படுத்த ஒரு புத்தகமும் அத்துடன் ஒரு கொள்கை பரப்பு செயலாளரும் தேவைப்படுகிறார்.
எல்லாம் வல்ல அன்பும் கருணையும் உள்ள உங்கள் அல்லா பெண்களை பற்றி தான் ரிலீஸ் செய்த புத்தகத்தில் (குரான்: 4:34 ) அவர்களை அடிக்க சொல்கிறார். அதுவும் லேசாக அடிக்க சொல்கிறார். ஏன் என்றால் அவர் கருணை கடல் அல்லவா அதனால் தான் அந்த லேசான அடி. இதிலும் மேலாக உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் (2:223) என்ன அற்புத கடவுளின் வார்த்தைகள். குரான் 3:14 கூறுகிறது " தங்கம், வெள்ளி, குதிரைகள், கால்நடைகள், நிலம் போல பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்தரும் பொருள்தான்" என்று. என்ன பரவசமூட்டும் வார்த்தைகள் இவை. இன்னும் நிறய இது போல பெண்களை பற்றி மிக உயர்ந்த வார்த்தைகளை குர்ஆனில் காணலாம்.

//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.//

அப்படியா !

//இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து,//

எங்கயோ இடிக்குதே











சகோதரர் அருண்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அமைதி..அமைதி....தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.மேலும் மேலும் உணர்ச்சிவசப்படுவதால் ஒரு உபயோகமும் இருக்க போவதில்லை.நீங்கள் மெனக்கெட்டு சேகரித்த 4:34 வசனத்தின் முழு அர்த்தம் இதோ.

//(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.//

கொடுத்தது இஸ்லாம்

//பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். 4:7//
SOURCE ; http://www.tamililquran.com/qurandisp.php?start=4

அப்புறம் இன்னொரு விஷயம் . குரான் முழுவதும் நீங்கள் தேடி பார்த்தாலும் எங்கேயும் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்ற சொல்லியோ,மொட்டை அடிக்க சொல்லியோ,அல்லது வெள்ளை சேலையை மட்டும் கட்ட சொல்லியோ வசனங்கள் இருக்காது என ஆணித்தரமாக கூற முடியும்,

<-Arun said...
//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.//

அப்படியா !->

அப்புடிதேன்

/எங்கயோ இடிக்குதே/
நீங்கள் சுட்டிகாட்டியவைகள் இஸ்லாத்தில் உள்ளதா? அல்லது சில முஸ்லிம்கள் செய்வதா??








திரு shanawazkhan.......

வசனத்தின் முழு அர்த்தமும் ஒரே கருத்தை தானே சொல்கிறது ஆணுக்கு கீழ்தான் பெண் என்பது தானே அது. இதில் விசேசமாக எதையும் சொல்ல வில்லையே.

///எங்கயோ இடிக்குதே/
நீங்கள் சுட்டிகாட்டியவைகள் இஸ்லாத்தில் உள்ளதா? அல்லது சில முஸ்லிம்கள் செய்வதா??//

அந்த சில முஸ்லிம்களும் குரானிலும் ஹதீஸிலும் சொல்லி இருப்பதை தானே தாங்கள் செய்வதாக சொல்லிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தில் சொல்லாததை சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று ஒதுக்கி வைத்து விடுவீர்களா. அப்படி எங்கேயும் பார்க்கவில்லையே. இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா? உங்களுக்குள்ளேயே ஒத்த கருத்து இல்லையே நீங்கள் ஏன் பிறரை குறை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். பிறருக்கு அறிவுரை சொல்பவன், தான் முதலில் யோக்கியனாக இருக்க வேண்டும். உங்கள் மார்க்க அறிஞர்களுக்கு இடையிலேயே எந்த விசயத்திலும் ஒத்த கருத்து இல்லை. முதலில் உங்களுக்கு உள்ளில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து விட்டு பிற மதத்தினரை பார்த்து கூச்சல் போடுங்கள்.
இஸ்லாமியர்கள் தவறு செய்தால் 'ஐயோ அது இஸ்லாமில் கூறவில்லை, அது அவனுடைய தவறு' என்று தப்பித்து கொள்வீர்கள். பெண்களை மொட்டை அடிக்க சொல்லியும் உடன்கட்டை ஏற சொல்லியும் கடவுள் சொல்லவில்லை.

shanawazkhan.
உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0

நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.





//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது //
////இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி மேலே போய்
அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது.இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?//

1400 வருடக் கேள்விகள் ..
இந்தக் கேள்விகளுக்கு நானும் கூட ஒரு பதில் சொன்னேன். வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாரேனும் இருந்தால் அவர்களிடமும் அதை வாசிக்க வைத்து அவர்கள் மதிப்பீட்டையும் கேட்டுப் பாருங்களேன்.






//ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)//

இதிலும் ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்ன கிடைக்கும் என்று உள்ளதே .. அதே போல் பெண்ணுக்கு என்னென்ன கிடைக்கும் என்றும் ஏற்கெனவே கேட்டிருக்கிறேனே... யாரும் பதில் தரவேயில்லையே ...


நபிகளின் திருமணத்தைப் பற்றிக் கூட வேண்டாம். எல்லோருக்கு நாலு என்றவர் தனக்கு மட்டும் கணக்கைத் தாண்டி விட்டு அதனை அல்லா சொன்னார் என்பது குற்றவாளியே சாட்சி சொல்வது போல்தானே என்றும் கேட்டிருந்தேனே!!

குலாம்
நானும் பல இஸ்லாமியப் பதிவுகளைப் படித்து விட்டேன் - பலதார மணத்தைப் பற்றி. இதற்கும் ஒரே ஒரு வேண்டுகோள். இஸ்லாமில் இல்லாத நண்பர் யாரும் உங்களுக்கிருந்தால் அவரிடம் இதைச் சொல்லிப் பார்த்து உரைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


குலாம்
//ஒரே நேரத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போல அதே நிலையை அல்லது குறைந்த பட்சம் இரண்டு திருமணாமவது செய்து வைக்க முன்வர வேண்டும் வருவீர்களா? //

நல்ல ஜோக்கு சார்!

ஆண்களும் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நியதி உங்கள் மனதில் தோன்றவில்லையே. திருகலான யோசனை உங்களுடையது!




//உலகத்தில் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள் என்று எந்த மதமும் சொன்னதில்லை.//

4 + உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு)போதுமாக்கிக் கொள்ளுங்கள் 

இப்படியும் எந்த மதமும் சொல்லவில்லை! ஏன்?



//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?//
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.

//பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்//

shanawazkhan, கேட்ட கேள்விக்கான பதிலாகதான் அதை கூறினேன். ஒரு பொருளை பற்றிய விவாதம் என்றால் அது நான்கு பக்கமும் திரும்பத்தான் செய்யும்.

//இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு//

சுவனத்தில் ஆண்களுக்கு அலலா பலவற்றையும் தருவதாக சொல்கிறார். மேலும் பூவுலகில் தடை செய்யப்பட்ட டாஸ்மாக் ஐட்டத்தை சொர்க்கத்தில் குடம் குடமாக வழங்குகிறார். ஆனால் பெண்களுக்கு என்ன தருவார் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லையே. தருமி என்பவரும் இத கேள்வியை கேட்டிருக்கிறார்.
மேலும் உங்கள் இறைதூதரின் வாழ்கை முறையை பின்பற்றி வாழும் நீங்கள் அவர் ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா?

//பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்//
அலங்காரம் செய்யப்பட்ட வெளித்தோற்றம் எப்போதும் பிறரை கவர்வது இயற்கை தான். உள்ளே போய் பார்த்தால் தானே வண்டவாளம் தெரியும்.

//நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?//

ஓ, ஒரு முஸ்லிமுக்கே உங்களால் விளக்க முடியாதா? அப்படிஎன்றால் ஏன் பதிவு போட்டு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்கள் ஆட்களுக்கு விளக்க முயற்சி செய்யலாமே.

//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//
நிச்சயமாக... //
முதலில் உங்களுக்கு உள்ளேயே குரானை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக பிறரை பார்த்து சொல்வீர்களே 'குரானை முழுசா படிங்க, புரிஞ்சு படிங்க என்று' அதை சொல்லலாம்.

//அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா, எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள்//
ஜவ்ஹீத் ஜமா அத், ஜாக் ஜமா அத் , த.மு.மு.க, இவர்கள் ஊர் ஊராக மேடை போட்டு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்களே. உங்களுக்கு தெரியாதா. இவர்கள் போடுவது குடும்ப சண்டையோ பங்காளி சண்டையோ அல்ல. மாறாக குரான் மற்றும் ஹதீஸில் உள்ள ஒரு விசயத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறி தங்களுக்குள் போட்டுக்கொளும் சண்டை தான் அது.



//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?//
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.

//பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்//

shanawazkhan கேட்ட கேள்விக்கான பதிலாகதான் அதை கூறினேன். ஒரு பொருளை பற்றிய விவாதம் என்றால் அது நான்கு பக்கமும் திரும்பத்தான் செய்யும்.

//இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு//

சுவனத்தில் ஆண்களுக்கு அலலா பலவற்றையும் தருவதாக சொல்கிறார். மேலும் பூவுலகில் தடை செய்யப்பட்ட டாஸ்மாக் ஐட்டத்தை சொர்க்கத்தில் குடம் குடமாக வழங்குகிறார். ஆனால் பெண்களுக்கு என்ன தருவார் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லையே. தருமி என்பவரும் இத கேள்வியை கேட்டிருக்கிறார்.
மேலும் உங்கள் இறைதூதரின் வாழ்கை முறையை பின்பற்றி வாழும் நீங்கள் அவர் ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா?

//பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்//

அலங்காரம் செய்யப்பட்ட வெளித்தோற்றம் எப்போதும் பிறரை கவர்வது இயற்கை தான். உள்ளே போய் பார்த்தால் தானே வண்டவாளம் தெரியும்.

//நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?//

ஓ, ஒரு முஸ்லிமுக்கே உங்களால் விளக்க முடியாதா? அப்படிஎன்றால் ஏன் பதிவு போட்டு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்கள் ஆட்களுக்கு விளக்க முயற்சி செய்யலாமே.

//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//
நிச்சயமாக... //

முதலில் உங்களுக்கு உள்ளேயே குரானை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக பிறரை பார்த்து சொல்வீர்களே 'குரானை முழுசா படிங்க, புரிஞ்சு படிங்க என்று' அதை சொல்லலாம்.

//அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா, எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள்//

ஜவ்ஹீத் ஜமா அத், ஜாக் ஜமா அத் , த.மு.மு.க, இவர்கள் ஊர் ஊராக மேடை போட்டு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்களே. உங்களுக்கு தெரியாதா. இவர்கள் போடுவது குடும்ப சண்டையோ பங்காளி சண்டையோ அல்ல. மாறாக குரான் மற்றும் ஹதீஸில் உள்ள ஒரு விசயத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறி தங்களுக்குள் போட்டுக்கொளும் சண்டை தான் அது.

//மற்ற மத கடவுள்களை திட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று//

அப்படியா!
'மார்க்க விளக்க பொது கூட்டம்' என்ற பெயரில் ஊரில் உள்ள சந்து பொந்துகளில் உங்கள் அறிஞர் பெருமக்கள் கூட்டம் நடத்துவார்கள். அவற்றில் போய் அவர்கள் பேசுவதை கேட்டு பாருங்கள். அங்கே பிற மதங்களை திட்டுகிறார்களா அல்லது ஆராதிக்கிரார்களா என்பது தெரியும்.
மேலும் இஸ்லாமியர்களின் இணைய தளங்களை பார்த்தால் அங்கே ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள் பிற மதங்களை குறை கூற, 'பார்த்தீர்களா இந்த மதங்களில் எல்லாம் நொட்டை இருக்கிறது நாங்கள் தான் ஒழுங்காக இருக்கிறோம்' என்று வியாக்கியானம் கொடுப்பார்கள்.

//எல்லா மதத்தை விடவும், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருகிறதினால்//
உலக அளவில் இஸ்லாமிய பெண்களின் கல்வி விகிதம் தான் மிக குறைவாக இருக்கிறது என பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். இது உங்கள் முழு சுதந்திரத்தின் விளைவா?

//எந்த ஒரு வேதத்திலும் வெளிகொணராத ஒரு அரிய செய்தியை குர்ஆன் நம்மிடையே முன்வைக்கிறது, நீங்கள் தயாராக இருந்தால், குர்ஆன் உங்களுடன் விவாதம் பன்ன தயாராக இருக்கிறது.
"மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?" (47:24)//

எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்றல் உள்ள கடவுள் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, ரொம்ப கஷ்டம்!




திரு வாஞ்சூர் என்பவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்லி இருக்கிறார். அமைதி மார்க்கத்தை பின்பற்றும் அவர் அமைதியை கடை பிடிக்க கடவுளை வேண்டுகிறேன். அவருக்காக கடவுள் சொர்க்கத்தில் வைத்திருப்பவற்றை இந்த தளத்தில் சென்று பார்த்து அமைதிஅடையட்டும்.

http://www.flex.com/~jai/satyamevajayate/heaven.html

This comment has been removed by the author.
(தருமி ஐயாவினால் எழுதப்பட்ட கருத்துக்கள் http://www.ethirkkural.com/2010/11/blog-post.html என்ற வலைத்தின் ADMINயினால் REMOVED பண்ணப்பட்டுள்ளது
இதில் இருந்து புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்
உண்மையான மதம் இந்து மதம் என்று)



G u l a m, Haja

//இந்த பதிவு குறித்த கேள்விக்கும் பதில் இல்லை... //

இந்த பதிவுக்குத்தான் so what என்று ஒரு பதில் கொடுத்து விட்டேனே. இன்னும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் உங்கள் மதத்திற்குப் பாய்ந்து வந்து விட்டார்கள் என்கிறீர்கள்; அதனால் என்ன என்று கேட்டேன். எனக்குத் தெரிந்து கிறித்துவ மதத்திற்கு நித்தம் நிறைய பேர் சேர்வதைப் பார்த்திருக்கிறேன்.

அவங்கவங்களுக்கு அம்புட்டுதான் ...



உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அந்த அளவு மோசமான ஒரு பின்னூட்டம்.

ஆமாம்,,, நீங்கள் சொல்லும் மதங்கள் மோசம்தான்; இப்படியா இருக்கும்?

ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது? 4 மனைவி + போனசாக அடிமைகள் ... கேட்டால் கடவுளே கொடுத்த 'நல்ல விஷயம்' என்கிறீர்கள். என்ன சொல்ல...? இதில் 'இது ஆடை அணிந்து மானத்தை மறைக்கும்' மதம் என்ற தற்புகழ்ச்சி வேறு. ம்ம்.. முகமதுவின் sexual ability பற்றிகூட வாசிக்க நிறைய விஷயம் இருக்கிறது. அதையும் நினச்சி பாருங்க.

உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடு,... பைபிள்



//ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தானே தன்னை நிரூபித்தார்கள். ஆனந்தம் பரமானந்தம் தானே?//
உண்மைதான், ஆனால் அந்த கடவுள்கள் எல்லாம் என்னை வணங்கினால் உனக்கு சொர்க்கத்தில் டாஸ்மாக் பாரும் இன்ன பிற சமாச்சாரங்களும் தருவேன் என்று சொர்க்கத்தில் கூத்தடிக்க ஆள் சேர்க்கவில்லை.

//இது எப்படியிருக்கு?//
ரொம்ப கேவலமா இருக்கு. 'ஓடி வாங்க எங்ககிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு' என்று அழைக்கிறீர்கள், ஆனால் சில கேள்விகளை கேட்டால் 'ஏன் அங்கே அப்படி இல்லையா, இங்கே இப்படி இல்லையா' என்று பிறரை கை காட்டுகிறீர்கள். பிறகு ஏன் நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள். எங்களுக்கு அல்லாவே இந்த மார்க்கத்தை தந்திருக்கிறார் என்று ஓவராக சவுண்ட் விடுகிறீர்கள். சரியான பதில் சொல்ல இயலாத போது இப்படித்தான் அல்லா செய்ய சொல்லி இருக்கிறாரா. மது அருந்துவது சரியா? தவறா? என்று கேட்டால் சரி அல்லது தவறு என்பது தான் நேரிடையான பதிலே அன்றி 'ஏன் அங்கே அவன் குடிக்கவில்லையா, இங்கே இவன் குடிக்கவில்லையா, என்கிற ரீதியில் பதில் சொல்வது முட்டாள் மட்டுமே. உங்கள் பதிலும் அப்படித்தானே இருக்கிறது வாஞ்சூர் சார்.
தாத்தாச்சாரி என்பவர் சொல்லி இருப்பது மனு என்பவர் எழுதி இருப்பதாக சொல்லி இருக்கின்ற புத்தகத்தில் சொல்லி இருப்பதாக குறிப்பிடப்படுவது. ஆனால் 'மனுவோ' அல்லது தாத்தாச்சாரியோ எங்களுக்கு கடவுள் அல்ல.

//இக்காலத்தில் பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், அதனாலேயே, தான் கல்யாணம் செய்துக்கொண்ட மனைவியை மறந்து, அப்பெண்ணை விட்டுவிட்டு போய் விடுகிறார்கள்.//

எது எதுக்கோ திடீர் திடீர் என்று வசனத்தை இறக்கும் அல்லா. ஒரே ஒரு வசனத்தை இறக்கி பிற பெண்களுடன் ஆண்கள் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்திருக்கலாமே. அல்லாவின் எல்லா வசனத்தையும் கடை பிடிக்கும் நீங்கள் அதை கடை பிடிக்க மாட்டீர்களா? ஏன் அல்லாவிற்கு இஸ்லாமியர்கள் மீது நம்பிக்கை இல்லையா அல்லது தனது வார்த்தைகளின் மேல் நம்பிக்கை இல்லையா? நன்கு பெண்களை திருமணம் செய்து தான் ஒருவன் யோக்கியனாக இருக்க முடியுமா. அல்லா வெறுத்து போய் 'உங்கள் அந்த ஆசையை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை அதனால் ஒருவன் நாலு பேரை மனைவியாக்கி கொள்ளலாம்' என்று சொன்னது போல் உள்ளது இது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை விட இது எவ்வகையில் உயர்ந்தது? திரு தருமி அவர்கள் இதை விளக்கமாக கூறி இருக்கிறார். கொஞ்சம் படித்து தெளிவு பெறுங்கள்.

"அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார்". (அல் குர்ஆன் 33:36).
இது தனது மருமகளை முகமது திருமணம் செய்து கொள்ள அல்லா இறக்கிய வசனம். நல்ல இருக்குது உங்க அல்லாவோட சம உரிமை.





யார் மீதும் எனக்கு கோபம் இல்லை குலாம் அவர்களே,
இங்கே கொஞ்சம் திசை மாறி வேறுவிதமாக விவாதத்தை தொடங்கியது வாஞ்சூர் என்பவர். அவருக்கே முதலில் அமைதி தேவை.
//தருமி ஐயா விடுத்த வினாக்களை தான் நீங்கள் சற்று கோபத்துடன் கூறீயிருக்கிறீர்கள்//
ஆனால் எந்த வினாவுக்குமே உங்களிடம் இருந்து தெளிவான பதில் இல்லையே,

//இந்த தமிழர் பண்பாட்டை எந்த பரிணாம மூலத்திலிருந்து எடுத்தீர்கள் ஐயா., கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா...?//
ஒருவருக்கு நான்கு மனைவி என்ற அரபி பண்பாட்டை தூக்கி பிடித்து பேசும் உங்களிடம், தமிழ் பண்பாட்டை கூறியது தவறுதான். நீங்கள் தமிழர் என்று தான் நான் நினைக்கிறேன். அது எந்த பரிணாம மூலத்தில் இருந்து வந்தால் என்ன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது சிறந்ததா அல்லது ஒருவனுக்கு நான்கு பேர் என்பது சிறந்ததா என்பதை நேரடியாக கூறுங்களேன்.

//அதற்கு அவசியமில்லை. அனைத்தையும் அறிந்தவன் தான் அல்லாஹ்//
புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள். அனைத்தையும் அறிந்த அல்லா முகமது அவர்களின் மருமகள் தனது திருமணம் குறித்து சுயமாக முடிவு எடுக்க கூட விடாமல் அதற்கும் ஒரு வசனத்தை இறக்குகிறார். இப்படி எது எதற்கோ வசனத்தை இறக்குபவருக்கு இந்த முக்கியமான விசயத்திற்கு ஒரு வசனத்தை இறக்க என்ன கஷ்டம்.
//பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே? //
எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று நூறு சதம் உறுதியாக கூறுகிறீர்களா.





//இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் //
நல்ல இருக்கே கதை, உலகத்தில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா. ஒருவர் தன்னுடைய நலனுக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்றை ஒட்டுமொத்த உலகத்தின் தலையிலும் திணிக்க பார்ப்பது ரொம்ப டூ மச்...

//அதன் சட்டங்கள், உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.//
யார் சொன்னது. நீங்கள் சொன்னால் போதுமா? மதம் மாறினால் கொலை செய்ய சொல்லும் உங்கள் ஒரு சட்டம் போதுமே உங்கள் மார்க்கத்தின் மொத்த சட்டங்களும் எப்படி இருக்கும் என்பதை சொல்ல. இப்படிபட்ட சட்டங்கள் உலகம் மொத்தத்திற்கும் பொதுவாகஇருந்தால் .....
அம்மாடி நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

//
கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?

இவ்வாறெல்லாம் மனிதர்க‌ள் க‌டைபிடிக்க‌ வ‌ழிமுறை உதார‌ண‌ங்க‌ள் அருள‌ப்ப‌ட்டிருக்கும் பொழுது //
உங்களுக்கும் பங்கு வேண்டுமென்றால் கேளுங்கள் வாஞ்சூர் சார், கண்டிப்பா கிடைக்கும். ஆனாலும் உங்களுக்கு இந்த பொறாமை ஆகாது.





No comments:

Post a Comment