Friday 6 March 2015

நாத்திகமும்,ஆத்திகமும்

கடவுளைப் பற்றிய கோட்பாடுகளில் மூன்று வகையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று கடவுள் இருப்பதை ஏற்கும் ஆத்திகம். இன்னொன்று அவர் இல்லை எனச் சொல்லும் நாத்திகம்.
மூன்றாவது கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் எனக்கில்லை என்று சொல்லும் கருத்தற்ற நிலை.
கடவுள் இல்லை என்பவரை நாத்திகர் என்று சொல்ல வேண்டுமே அன்றிப் பகுத்தறிவாளர் என்பது சரியல்ல.

 பகுத்துப் பகுத்து ஒருவன் ஆராயும்போது கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ எந்த முடிவுக்கும் வரக்கூடும்.


ஆத்திகம் நாத்திகம் என்கிற இரு கோட்பாடுகளும் பன்னெடுங் காலமாகவே நம்மிடையே இருக்கின்றன. நாத்திகம் ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது.


ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகனாகவோ ஆத்திகனாகவோதான் இருப்பான் என்று சொல்ல இயலாது. இந்தக் கருத்து நிலைகளில் அவன் மாற்றமடைவதும் உண்டு.

கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகரானவர். தாம் ஒரு காலத்தில் நாத்திகராக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன என்று பின்னாளில் கேட்டவர்.
பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து பிறகு நாத்திகரானவர் (பாரதி சொல்லி, பாரதிதாசன் பாடிய "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடல் உயர்தரமான சக்தி வணக்கப் பாடல்).

தனது நாத்திக நிலைக்காக "அக்கிரகாரத்து அதிசயப் பிறவி' என்று கொண்டாடப் பட்டவர் வ.ரா. என்கிற வ. ராமசாமி. ஆனால் அவர் தம் இறுதிக் காலத்தில் முருகன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்ததாக கு. அழகிரிசாமி ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு தனிமனிதனே தன் வாழ்நாளில் இருவேறு நிலைப்பாடுகளை எடுக்கும்போது, ஒரு சமுதாயத்தில் எல்லாக் காலத்திலும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் கலந்தே இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
உயர்தர ஆத்திகர்களிடையே போலிச் சாமியார்கள் கலந்திருப்பது மாதிரி, உயர்தர நாத்திகர்களிடையே வெறும் நாத்திக வியாபாரிகளும் கலந்தே இருப்பார்கள்.

நாத்திகக் கொள்கையை வைத்துக் கொண்டு ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்தி நாத்திக வணிகம் செய்பவர்களைக் கண்டறிந்து ஒதுக்க வேண்டியது மொத்த சமுதாயத்தின் பொறுப்பு. ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்தாமல் நாத்திகத்தை ஒரு கோட்பாடாகக் கொண்டு பிரசாரம் செய்பவர்களை சமுதாயம் ஒதுக்க வேண்டியதில்லை. நாத்திகக் கோட்பாட்டுக்கும் சமுதாயத்தில் இடமிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது.

மறைந்த எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஒரு நாத்திகர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த உயர்நிலை நாத்திகர். அவரது இயல்பால் கவரப்பட்ட எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, தமது "துளசிமாடம்' நாவலில் சின்னக்குத்தூசியின் சாயல் கொண்ட ஒரு நாத்திகப் பாத்திரத்தை "இறைமுடி மணி' என்ற பெயரில் உலவவிட்டிருக்கிறார்.

மாபெரும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் கடவுள் சக்தியை நம்பும் ஆத்திகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

மத நல்லிணக்கம் தேவை என்பதை இப்போது எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தவரிடையே இணக்கமான போக்கு நிலவ வேண்டுமானால் ஒருவரின் மதக் கோட்பாடுகளை மற்றவர் விமர்சிக்காமல் இருப்பதே நல்லது. அது அவரவர் மத நெறி என்றுணர்ந்து இணக்கமாக வாழ்ந்தால் இந்தியா தழைக்கும்.
மத நல்லிணக்கம் போலவே ஆத்திக, நாத்திக நல்லிணக்கமும் இன்று அவசியத் தேவை.

ஒருவரையொருவர் மனம் புண்படும்படிப் பேசுவதோ எழுதுவதோ சரியல்ல. இது சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைக்கும்.
"கடவுளை நம்புகிறவன் முட்டாள்', "கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி' என்றெல்லாம் எழுதப்படும்போதும் பேசப்படும்போதும் கல்வெட்டில் பொறிக்கப்படும்போதும் ஆத்திகன் திகைக்கிறான். "நான் கடவுளை நம்பவில்லை என்று எழுதலாம்.

ஆனால் கடவுளை நம்புகிறவனை முட்டாள் என்றும் காட்டுமிராண்டி என்றும் சொல்வது எப்படி நாகரிகமாகும்? கடவுளை நம்பிய விவேகானந்தரும் வள்ளலாரும் முட்டாள்களா? காட்டுமிராண்டிகளா?' இதற்கு பதிலாக, "கடவுளை நம்பாதவன் முட்டாள்; நம்பாதவன் காட்டுமிராண்டி' என்று எழுதினால் சமுதாயத்தில் சிக்கல்தான் எழும்.

கல் வன்முறையை விட மோசமானது சொல் வன்முறை. சொல் வன்முறையை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். நாத்திக ஆத்திக நல்லிணக்கம் தேவை என்பதை இருதரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் நாடு தழைக்கும். 



95 comments :

  1. super , but. kadvul irukkirar enpatharku entha atharamum illaye?
    Reply

    Replies






    1. கடவுள் இல்லை என்றும் இதுவரை எந்த கொம்பனாலும் நிரூபிக்க முடியவில்லையே.
    2. Current (power) ithai kannal parka mudiyathu but ithan payanpadu athigam. Athai polave GOD.
    3. Athanalathan avar kadavul.
    4. அனைவருக்கும் அனைவருக்காக மரித்து 3 ம் நாள் உயிர்த் தெழுந்த கடவுளின் ஒரே சொந்த குமாரனாகிய இ ர ட் ச க ர் இ யே சு வினை நினைவு கூரும் பண்டிகையில் நினைவு கூர் ந் து மகிழ்ந் து அனைவருக்கும் இ ர ட் ச க ர் இ யே சு வின் பெயரால் டெட் எக்ஸாம் 2013 ல் 90 & ABOVE எடுத்து பாஸ் ஆனாவர்க்கள் , நண்பர்கள் , உறவினர்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என கர்த்தருடைய பெயரை பயபக்தியுடன் உரிமையாய் எடுத்து வாழ்த்துகிறேன்
    5. கு. அழகிரிசாமி ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார் - நூலின் பெயரை கூற முடியுமா???

  2. ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்தாமல் நாத்திகத்தை ஒரு கோட்பாடாகக் கொண்டு பிரசாரம் செய்பவர்களை சமுதாயம் ஒதுக்க வேண்டியதில்லை. நாத்திகக் கோட்பாட்டுக்கும் சமுதாயத்தில் இடமிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது.
    Reply
  3. ஆத்தீகம் (ஆன்மீகம்) கற்றுதருவதைவிட பகுத்தறிவு கற்றுத்தருபவரே சிறந்த ஆசிரியர்
    Reply

    Replies






    1. உண்மையில் ஆன்மீகம் என்பது நீங்கள் நினைப்பது போல் வெறும் கல்லையோ அல்லது உருவத்தையோ வழிபடுவது அல்ல.

      அது மனிதர்களை நல்வழி படுத்தும் செயல்முறை.

      அந்த செயல்பாடு தமிழில் "கடவுளை வணங்குதல்" என்ற பெயரில் என்ற பெயரில் நடைபெறுகிறது.

      இந்து மதம் அர்த்தமற்ற செயல்களை செய்கிறது என்று அறியாமையால் சிலர் பிதற்றுகின்றனர்.ஆனால் திருமணமான இந்து பெண் காலில் மெட்டி அணிவது முதல் தலையில் குங்குமம் வைப்பது வரை அர்த்தமுள்ளதே.

      2500 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடியாக வாழ்ந்து கொண்டும் விலங்குகளுக்கு பயந்து நடுங்கி கொண்டு இருந்த மனிதன் இன்று அனைத்து விலங்குகளையும் சிறையில்(zoo) தள்ளிவிட்டு செவ்வாய் கிரகம் வரை சென்று உள்ளான் என்றால் அதில் கடவுள் வழிபாடு என்ற செயல் மிக அதிக பங்கு வகிக்கிறது.

      எனவே இந்த செயல்பாட்டையும்(ஆன்மீகம்) ஆசிரியர் போதிக்க வேண்டும்.
    2. கடவுள் இல்லேவே இல்வை.பெண்களை இழிவாக சித்தறிக்கும், தன் மதத்தினரையே கீழ் சாதி, மேல்சாதி எனப்பிரிக்கும் கவுடள் சொன்ன மதம் தேவைதானா.நமது மனித சக்கித்திக்கு மேலான சக்கி உண்டு அதை மறுக்கயாராலும் இயலாது ஆனால் அந்த சக்கி மனிதனையோ மற்றஉயிர்களையோ எதுவும் செய்ய போதில்லை.எப்பொழுஎல்லாம் மனிதன் இந்த இயற்கைனின்று விலகுகின்றானோஅப்பொழுஎல்லாம் ஒட்டுமொத்த ஊயிர் கோளத்திற்கே பாதிப்பு ஏற்படூகிறது இயற்கை என்பது வழிபடுவதற்கன்று மாறாக ரசிப்பதற்க்கும், மகிழ்வதற்கும் தான்.கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் எந்த செயலை எந்த மதம் செய்தாலும் அதை கடுமையாக எதிர்பவன் தான் பகுத்தறிவாளன்.என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
    3. "கடவுள் இல்லை, கடவுள் இல்லை
      கடவுள் இல்லவே இல்லை
      கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
      கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
      கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
      இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்"

      தந்தை பெரியார். இந்த எழுதிய இந்த வாசகம் சென்னையின் இதயத் துடிப்பான T.நகர் பேருந்து நிலையத்தில் பெரியாரின் சிலைக்கு கீழ் பொறிக்கப் பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?

      தந்தை பெரியார் இது போன்ற வார்த்தைகளை உதிப்பதற்கு காரானாய் அமைந்த பின்புல நிகழ்வு அவரின் காசி பயணம் தான்.

      மாதம் மட்டுமல்ல நிறமும் பிரித்தாளும் கொள்கையை தீவிரமாக முன்னிருத்த்தியது என்பதை உணருங்கள்.

      இந்தியா சுதந்திரம் அடைந்த போது கூட நாம் மகாத்மா என புகழும் காந்திக்கு இங்கிலாந்து இளவரசி கைகுலுக்க மறுத்ததின் காரணம் மதம் அல்ல நிறம்.

      கருப்பினத்தவர்களை பன்றி நிகராக மதித்து பன்றியோடு உணவு,இருப்பிடம் வாழ்கங்கிய அமெரிக்க வெள்ளையர்களின் செயலுக்கு காரணம் மாதம் அல்ல நிறம்.

      பின்பு அதே கருப்பினத்தவர்கள்(negro) வெள்ளையர்களுக்கு சரி சமமான உறைமை பெற காரணமாய் இருந்தது ஆபிரகாம் லிங்கணும்,மதமும்தான். உங்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல.

      நீங்கள் பகுத்தறிவாளிகள் என்றால் ஏதேனும் ஒரு செய்தியை, பொருளை,புதிரை பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

      அப்படி பார்த்தால் நீங்கள் எந்த அணுவை, பொருளை பகுத்து ஆராய்ந்து ஒரு அணுவின் உட்கருவில் புரோட்டானும்,நியூட்ரானும்,உள்ளது,அதன் வெளிவட்டத்தில் எலக்ட்ரான் உள்ளது.அதற்கிடைய ஒரு விதமான ஈர்ப்பு விசை உள்ளது அதுவே பொருளின் நிலைப்புத்தன்மைக்கு காரணம் என கண்டறிந்தீர்கள்? அல்லது விண் அறிவியலின் மிகப் பெரிய கண்டு பிடிப்பான E=MC2 என்ற சூத்திரத்தைதான் கண்டு பிடித்தீர்களா? இல்லை போஸான் துகள்கள்(god particle) விஷயத்தில் ஐன்ஸ்டீனின் இந்த சமன்பாடு தவறு கூறி பின் பல மாதங்களுக்கு பிறகு எங்கள் இயந்திரம் பிழை,சமன்பாடு சரி என ஏற்று கொண்டீர்களா? இவைகளை கண்டறிந்தது அறிவியலாளர்கள். உண்மையில் அவர்களின் பெயர்கள் தான் பகுத்து அறிவாளிகள்.உங்களின் பெயர் கடவுள் மறுப்பாளர்கள்.

      பெண்களை யாரும் இழிவாக சித்தரிக்கவில்லை. இந்து மதத்தில் ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்களே அதிகம்.மனிதன் உட்பட இத்தனை கோடி உயிர்களை உயிர்ப்புடன் வைக்கும் பூமியை கூட இந்து மதம் பூமாதேவி என சொல்கிறதே தவிர பூமாதேவன் என அழைப்பதில்லை.

      கங்கையையும்,காவிரியையும் பெண் தெய்வமாகவே நினைத்து வழிபடுவது மதம் தானே தவிர நீங்கள் அல்ல.

      ஆனால் பகுத்தறிவாளிகள் என சொல்லிக்கொண்டு தன் 60 வயதில் 20 வயது பெண்ணை தன் சுலநலத்துக்காக பெண்ணை மணந்து கொண்டவர் பெரியார்.

      முதல் மனைவி இருக்க அதன் பிறகு பல மனைவிகளை மணந்தவர் கலை(ளை)ஞர்.

      இப்பொழுது சொல்லுங்கள் யார் பெண்ணை அடிமை படுத்டுபவர்கள்
      ?
      கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மனிதன் இழிவு படுத்தும்ஸ் செயல் என்பதை விட நல்வழி படுத்தும் செயலே அதிகம்-காட்டில் வாழ்ந்தவனை வீட்டில் வாழ வைத்து கொண்டிருப்பது மதம்.

      தன் மதத்தினரை கீழ் சாதி,மேல் சாதி என பிரித்தது உலக சமயம் அனைத்திலும் நிகழ்ந்துள்ளது. இது கால ஓட்டத்தில் காணாமல் போய்கொண்டிருக்கிறது,போய்விடும்.
    4. காலத்தின் ஓட்டத்தில் காணமல் போகின்றது...உண்மைதான் மற்ற நாடுகளில் ....இப்போது நிற வேற்றுமை என்பது இல்லை என்ற நிலையில் தான் உள்ளது ...கண்ணுக்கு தெரியாமல் ஒரு சில இடங்களில் உள்ளது...ஆனால் அதுவும் ஒருநாள் காணமல் போகும் நம்நாட்டில் எப்போது என்று தான் தெரியவில்லை...ஒரு சந்தோஷம் எங்கள் பகுதியில் எனக்கு தெரிந்து இந்த பாகுபாடு இல்லை....

      ஆனால் ஒரு சந்தேகம் வேறு மதத்திலும் உள்ளது என்கிறீர்களே அது என்ன என்ன மதங்கள்....
    5. உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் பாகுபாடு உண்டு. முஸ்லிமில் சன்னி,ஷியா என்று எனக்குத் தெரிந்து இரண்டு பிரிவுகள் உண்டு. முஸ்லிம் நாடுகளில் தங்கள் நாட்டுக்குள்ளேயே வெடிகுண்டு வைத்து கொள்வது இந்த காரணத்தினால் தான்.

      உலகில் பல நாடுகள் அறிவியல்,வானியல் கண்டுபிடிப்புகளினால் உலக கவனத்தை தான் பக்கம் இழுத்து கொண்டு இருக்க சோமாலியா என்ற ஒரு நாடும் உலக கவனத்தை பெறுகின்றது.

      அதற்கு காரணம் அங்கு நடைபெறும் கடல் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல.சாதி பிரிவினால் உண்டாகும் வறுமையும்,பிரிவினைகளும் மிக முக்கிய காரணம்.

      கிறித்துவத்திலும் RC,CSI,PROTESTANT என பல பிரிவுகளும் சாதிகளும் உண்டு.

      இந்தியாவில் இந்த எண்ணிக்கை சற்று அதிகம்.
    6. இதில் என்ன புரிதல் உள்ளது ..இந்து சமயத்தில் உள்ள சைவம்..வைணவம்..போன்று நீங்கள் சொன்னதும் கடவுள் வழிபாட்டு முறையில் உள்ள ஒரு பிரிவு...
    7. இல்லை சாதி பிரிவே உள்ளது.இதற்கு மேலும் என்ன விளக்கம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

      சோமாலியா மலேய்சியாவில்லுள்ள சாதி பெயர்கள் எனக்குத் தெரியாது. தெரிந்து கொண்டு சொல்கிறேன்.இந்தியாவில் உள்ள சாதி பெயர்களே முழுமையாக தெரியாத் பொழுது இதில் ஒன்றும் வியப்பில்லை.
      ஆரிய சம்பிரதாயம் தற்போது அதிகமாக தலை தூக்கி உள்ளது. என நீங்கள் எழுதி உள்ளீர்கள். அது உண்மையா?

      வெறுமனே அவர்களை குறை கூற முடியாது.

      உண்மையில் ஆரியர்கள் யார்? எங்கிருந்து எப்போது வந்தனர்? தமிழ் அல்லது இந்தியா சமுதாயத்தில் அவர்களின் பங்கு என்ன?

      ஆரியர்களின் வருகைக்கு முன்பு இந்தியா,தமிழகத்தின் நிலை எ
      என்பது போன்ற பல வினாவிற்கு பதில் தெரிந்து கொண்டு வாருங்கள்.

      யாரையும் வெறுமனே குறை கூறுவது தவறு.
    8. ஆரிய சமுதாயம் பற்றிய தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும்....அதற்க்கு முன்பு தமிழர் என்ற ஒரு பண்பாட்டு முறை சிறந்திருந்தது...சாதிய அடிப்படையிலான பிரிவு என்ற ஒன்று இல்லவே இல்லை....அதிலும் தமிழ் வழிபாட்டு முறை என்ற குல தெய்வ வழிபாடு , இயற்க்கை வழிபாடு மட்டுமே இருந்தது என்ற தகவலும் தெரியும்....இதற்க்கு மேல் அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா...
    9. கிமு 5000 வாக்கிலே ஆரியர்கள் இந்தியாவில் கால்நடைகளுடன் குடியேறிவிட்டனர்.

      நமக்கு எழுத்து பூர்வமான வரலாறே 2000 ஆண்டுகளாகத்தான் தெரிகிறது.

      நீங்கள் சொல்லும் அத்தனை மத சடங்குகளும் குல தெய்வ வழிபாட்டில் தான் உள்ளது.

      ஆடு பளியியிடுதல்,கோழி பளியிடுதல்,பேயோட்டுதல்,மான்ரீகம் செய்தல் என்ப்வை சிறு தெய்வ வழிபாட்டில்(குல தெய்வ வழிபாடு) உள்ளதேயன்றி திருப்பதியிலும்.காசியிலும் நடைபெறவில்லை.
    10. இந்திய வரலாற்று கால கோட்டை பார்த்தல் தெளிவாக தெரியும் ஆரியர் இந்தியா வருகை கி மு 1000 என்பது....ஆரிய சமுதாயம் 3500 ஆண்டுகள் பழமையானது தோன்றாத போதே அது இந்தியாவில் காலூன்ற முடியாது இந்தியவிற்க்குள் வந்த பிறகும் தமிழகத்திற்கு வர இன்னும் கொஞ்சம் கால ஆனது என்பது அனைவரும் அறிந்ததே...

      ஆடு பலியியிடுதல்,கோழி பலியிடுதல் இவற்றை நான் ஒருபோதும் தவறா சித்தரிக்கவில்லை...
      ஆடை பலியிடு , மாட்டை பலியிடு ஆனால் கடவுளின் பெயர்கொண்டு மனிதனை பலியிடாதீர்கள் ...ஜாதி என்ற பெயரை கொண்டு வருணாசிரமம் என்ற கொள்கைகளை கொண்டு மனிதனை ஏமாற்றி பிளைக்காதீர்கள் ....அவ்வளவு தான்

      அப்பறம் ஒரு தகவல் பலியிடும் பழக்கம் தமிழ் பண்பாட்டில் அப்போது இல்லை...இதுவும் (பலி கொடுத்தல்) வேத காலத்தில் ஒரு முக்கிய சடங்காக இருந்தது...
      தமிழ் பண்பாட்டில் இப்போது ஊடுருவியுள்ளது அவ்வளவு தான்...


      ஆடு பலியிடுதல் , கோழி பலியிடுதல் இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை... அவர்கள் நம்பிக்கை என்றால் மன திருப்பதிக்காக என்றால் அது அவர்கள் இஷ்டம் ..அவர்கள் உரிமை...

      ஆனால் எங்கள் தமிழ் பண்பாட்டு முறையும் வழிபாட்டு முறையுமே இங்கே மிக சிறந்தது...வள்ளுவன் வாக்கை கொண்டும் வயதில் மூத்த மக்களின் அனுபவங்களை கொண்டும் நல்ல முறையில் கட்டமைக்கப்பட்டது....
    11. ஆரியர்கள் வருகை கிமு 1000 அல்ல வரலாற்றில் எந்த இடத்தில் அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

      ஆடு பலியிடுதல் கோழி பலியிடுதலை நீங்கள் தவறாக நினைக்காவிளை என்றால் அது சரி என ஆகிவிடுமா?

      நீங்கள் ஒருவர் ஏற்றுக்கொண்டால் அது சரி ஆகி விடாது.இந்து மதத்தில் மூடநம்பிக்கை என கருதப் படும் விஷயமே இந்த ஆடு பலியிடுதல் கோழி பலியிடுதல், மாந்த்ரீக வேலைகள் தான். அதைத்தான் நாத்திவாதிகள் மிக முக்கியமாக எதிர்க்கிறார்கள்.

      இங்கு ராஜா என்பவர் நாத்திகவாதியாக அவரது கருத்தை பதிவு செய்கிறார். ஆனால் நீங்கள் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் எழுதுகிறீர்கள்.

      ஆடு பலியிடுதல் , கோழி பலியிடுதல் இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை... அவர்கள் நம்பிக்கை என்றால் மன திருப்பதிக்காக என்றால் அது அவர்கள் இஷ்டம் ..அவர்கள் உரிமை...
      என எழுதி உள்ளீர்கள்.

      பின்பு கீழே


      ஆரிய சமுதாய சடங்குகள் தான் இப்போது அதிகம் தலை தூக்கி உள்ளது ...அதிகம் செலவு பிடிக்கும் சம்ப்ரதாயமாகவும் இது உள்ளது...

      என எழுதி உள்ளீர்கள்.

      இதுவும் அப்படிதான் அவர்கள் மன திருப்திக்காக செய்கிறார்கள்.ஏன் இப்படி முரண்பட்ட கருத்தை முன் வைக்கிறீர்கள்?

      உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும் பார்த்தால் தெரியும். அது சீனவாக இருக்கட்டும் அல்லது உகாண்டா வாக இருக்கட்டும் ஒன்று கருப்பாக இருப்பார்கள் அல்லது வெள்ளையாக இருப்பார்கள்.

      தமிழனின் நிறம் கருப்பு. ஆரியர்களின் நிறம் சிவப்பு. இந்த இரண்டும் கலந்ததால்தான் நாம் மாநிறமாக உள்ளோம்.நம்மை போல் உள்ள இன்னொரு நாடு பிரேசில்.

      இதை போல்தான் இந்து மதமும் தமிழ் பண்பாடும் ஒன்றாக கலந்துள்ளது.இதை பிரிக்க முடியாது.

      இந்து மதத்தை உருவாக்கியவர்கள்,வழி நடத்தியவர்கள் ஆரியர்கள் என்ற முறையில் இந்து மதத்தோடு ஆரியர்களும் உயர்நிலை பெற்றனர்.

      நான் விவாதிக்க நினைப்பது தற்போதைய நிலையில் மதம் மனிதனுக்கு தேவை எனபதை வலியுறுத்தவே.
    12. ஆத்திகம் ,நாத்திகம் பற்றி நீங்க சொல்லுன்பூது நான் எந்த மறுப்பும் சொல்லியிருகின்றேனா என்று முழுமையாக பார்த்தல் தெரிந்திருக்கும்... அட அது இருக்கட்டும் நான் ஆத்திகம் நாத்திகம் என்ற தலைப்பை கையில் எடுத்துள்ளேனா என்பதையாவது பார்த்திருக்க வேண்டும் ...இதையெல்லாம் பார்க்கவே இல்லை எனபது உங்கள் பதிவிலே உள்ளது....

      ### ஆடு பலியிடுதல் கோழி பலியிடுதலை நீங்கள் தவறாக நினைக்காவிளை என்றால் அது சரி என ஆகிவிடுமா?###

      என்றீர்கள் அப்படியென்றால் மாமிசம் உண்பது கூட தவறானது என்றாகிவிடும்....அதை நான் எங்கும் பழித்தோ இழித்தோ இது வரை சொல்லவில்லை....

      ##### ஆரிய சமுதாய சடங்குகள் தான் இப்போது அதிகம் தலை தூக்கி உள்ளது ...அதிகம் செலவு பிடிக்கும் சம்ப்ரதாயமாகவும் இது உள்ளது...

      என எழுதி உள்ளீர்கள். ####

      இது உண்மைதான் ஆரிய சம்பரதாய சடங்குகள் அதிகம் செலவு பிடிக்கும் என்று மட்டும் எழுதவில்லை அதை ஒப்பீடும் செய்திருந்த்ர்ன் அந்த ஒப்பீட்டிர்க்காக தான் நான் அதை எழுதி இருந்தேன்...

      அடுத்து ..நீங்கள் எனக்கு பதிலாக சொன்ன கருத்து..தான் நான் இங்கு சொன்னதாக நீங்கள் கருதுவது...

      ##### maniyarasan ranganathanApril 20, 2014 at 7:01 PM
      நான் ஒரு செய்தியை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

      நாம் தமிழன் என்ற முறையில் கரிகால் பெருவளத்தானை மிக புகழ்ந்து பேசுகிறோம்.

      ஆனால் அவனும் போர்க்களத்தில் பல கொலைகளை செய்தவன் தான். அதற்காக கரிகாலன் குற்றவாளியா?
      ஒரு மாதம், செயல்முறை, வாழ்க்கை முறை என்றால் நிறைகளோடு குறைகளும் இருக்கத்தான் செய்யும். அது உலக நியதி.

      அதுபோல்தான் இந்து மத வழிபாடு முறையில் சில செயல்கள்(பலியிடுதல்) இருக்கலாம். அதற்காக அதனை குறை சொல்லுதல் கூடாது.######

      இதை தான் நீங்கள் சொன்னதுபோல .......... மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் வேலை என்றேன்....

      அடுத்து நான் இதுவரை நாத்திகன் என்று சொன்னதில்லையே நீங்கள் அவ்வாறு எடுத்துகொண்டால் அது என் தவறல்ல...

      மதத்தின் பெயரால் மனிதரில் பாகுபாடு காட்டும் இழிந்த பழக்கம் வேண்டாம் என்று தான் சொல்லியுள்ளேன்....

      நீங்கள் நான் எந்த இடத்தில் கேள்வி எழுப்பியுள்ளேனோ அங்கு உங்கள் பதிலை கொடுத்திருந்தால் இன்னும் சுலபமாக விவரங்களை அறிய முடியும்....
    13. ####ஆரியர்கள் வருகை கிமு 1000 அல்ல வரலாற்றில் எந்த இடத்தில் அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.####

      இதற்க்கு நான் ஏற்கனவே (நேற்றே) பதில் சொல்லிவிட்டேன் ...இந்திய கால கோட்டை பாருங்கள் என்று....
    14. தயவு செய்து எந்த தலைப்பின் கீழ் விவாதிக்க விரும்புகிறீர்களோ அங்கேயே உங்கள் பதிவை கொடுங்கள்....சற்று சுலபமாக இருக்கும்...
    15. நீங்கள் எழுதுவது எனக்கு எனக்கு புரியவே இல்லை ஸ்ரீ. ஏதோ சொல்ல வருகிறீர்கள்.பின்பு அதை முடிக்கும் முன்பே அட அதை விடுங்கள் என முடித்து விடுகிறீர்கள். அப்புறம் எப்படி புரியும்.

      இந்தியா காலக்கோடு என்பது எந்த வரலாற்றாரால் பதியப் பட்டது.

      தயவு செய்து எந்த தலைப்பின் கீழ் விவாதிக்க விரும்புகிறீர்களோ அங்கேயே உங்கள் பதிவை கொடுங்கள்....சற்று சுலபமாக இருக்கும்...

      என எழுதி உள்ளீர்கள் இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதும் புரியவில்லை.
    16. காலகோடு என்பதாவது உங்களுக்கு புரிகிறதா?
      இந்திய கால கோட்டில் வரலாற்று பதிவுகள் வரிசைகிரமமாக கொடுக்கப்பட்டுள்ளது...அதை பாருங்கள் என்று தான் சொல்லியிருகிறேன்...
    17. நீங்கள் குறிக்கும் காலக்கோடு பாட புத்தகத்தில் பின்புறமாக உள்ளதை குறிபிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      வரலாற்றை பாட புத்தகத்தோடு நிறுத்தி விடாதீர்கள். நூலகத்திற்கு சென்று வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்களை படியுங்கள்

      அப்போது புரியும் ஆரியர்களின் வருகை 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்று.ஆரியர்கள் யார் என்ற வினாவிற்கே நீங்கள் இதுவற்கை பதிலளிக்க வில்லை.பின்பு ஆரியர்களின் வருகை உங்களுக்கு எப்படி தெரியும்?

      நீங்கள் விகடனில் வெளியாகும் வராற்றில் இன்று என்ற பகுதியை மறு பதிவு செய்வதை தவிர எதையும் விளக்கமாக, முழுமையாக எழுதவில்லை.

      ஒரு ஆசிரியருக்கு பிறருக்கு விளங்கும் வண்ணம் புரிய வைத்தால் மிக அதிகம் தேவை.பழகி கொள்ளுங்கள்.
    18. திரு. மணியரசன் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாம வளர்ச்சியே வெறும் 3 லட்சம் ஆண்டுகளே. இதில் நாகரிகமடைந்தது அதிகபட்சம் 10,000 ஆண்டுகளே. இதில் அறிவுக்கு பொறுந்தாத இராமாயணமும், மகாபாரதமும் நடந்த கதைகள் சுமார் 70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சொல்வதை எப்படி நம்ப வேண்டும் என்கீறிர்கள். இராமாயணத்திலும், மகாபாரத்திலும் சொல்லப்பட்ட பெரும்பாலான கதாபாத்திரங்களே ஆத்திகவாதிகள் பிராதானமாக வணங்கிவரும் தெய்வங்கள்.
      தற்பொழுது உள்ள மதங்களில் உள்ள கடவுள்கள் அனைத்துமே ஒருகாலத்தில் வாழ்ந்து இறந்துபோன நம்முடைய மனித முன்னோடிகளே… அவர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த இனக்குழுக்களின் தலைவனாகவோ, ஊர்காவலாளியாகவோ தான் இருக்க முடியும் என்று பல்வேறு ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நமது தொன்மையான நூல் தொல்காப்பியம்கூட போரில் இறந்தவர்களுக்கு நடுகல் வணக்கம் பற்றி விரிவாக பேசுகிறது.
      இங்கே மதத்தின் பெயரால், கடவுளில் பெயரால், நடைபெற்ற போர்களால் இறந்தவர்களே அதிகம். மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு மனிதர்களை பிளவுபடுத்துவது தேவையற்ற ஒன்று என்றே கருதுகிறேன். மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும். எனவே தான் மதம் என்பது ஒரு அபீன் என்று சொன்னார் கார்ல் மார்க்ஸ். மதம் அறிவைக் கெடுக்கும்.
      கடவுள் உண்டு என்றும் இதுவரை எந்த கொம்பனும் நிருபிக்கவில்லை. கடவுள் இல்லை என்று நிறுபிக்கவேண்டிய அவசியமே இல்லை. இருக்கின்ற ஒன்றைத்தான் உள்ளது என நிருபிக்க முடியுமே தவிர, அதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு ஆத்திகம் பேசும் நபர்களுக்கே உள்ளது.
      ஒரு கொலை நடப்பதாக வைத்துக்கொள்வோம், இங்கே குத்தியவனும் கடவுள், செத்தவனும் கடவுள். தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள் மனிதருக்குள் மட்டும் இல்லாமல் போன மாயம் என்னவோ. இருப்பாரே ஆனால் ஒரு கடவுள் கொலை செய்கிறார். ஒரு கடவுள் செத்துப்போகிறார். சம்பவம் நடந்தபிறகு தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்குபவர் கடவுளா….. சம்பவமே நடக்காமல் தடுப்பவர் கடவுளா….

      பகுத்தறிவாளர்கள் மதத்தை மட்டும் எதிர்க்கவில்லை. ஏனெனில் அது கட்டிடத்தின் தூண் போன்றது, அஸ்திவாரமான பிரிவினைவாதம், மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயத்தையும் எதிர்க்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வது ஆன்மீகம், இருக்கின்ற ஒன்றை இப்படித்தான் இருக்கிறது, இப்படித்தான் இயங்குகிறது என்று சொல்வது அறிவியல். நாங்கள் அறிவியலை நம்புகிறோம், பலர் ஆன்மீகத்தை நம்புகிறார்கள், உங்களைவிட நாங்கள் அறிவில், பகுத்தறிவில் சிறந்தவர்களே….. 
    19. வரவேற்க வேண்டிய கருத்து.

      முதலில் நாங்கள் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறோம்.நாங்கள் வெறும் ஆன்மீகத்தை மட்டும் நம்பவில்லை. அறிவியலோடு கூடிய ஆன்மீகம் மனிதனுக்கு மிக முக்கியம்.

      இந்து மாதம் எந்த மதத்திலும் உள்ள மூட நம்பிக்கைகள் வேரறுக்க பட வேண்டியதே.மதம் என்பது மனிதனை நல்வழி படுத்தவே.அது சக மனிதனை ஏமாற்றும் செயலாக மாறினால் அது களையெடுக்கப் பட வேண்டிய விஷயமே.

      ஆனால் எந்த ஒரு மதத்தை பின்பற்றுபவர்களிடமும் படிக்காத பாமர மக்களிடம் சில மூட நம்பிக்கைகள் காணப்படுவது உண்மைதான்.அதற்கு மதத்தை குறை சொல்ல கூடாது.

      மார்டின் லூதர் கிங் ஐ பற்றி உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.அவர் பாவ மன்னிப்பு சீட்டு விற்றதை மிக சிறிய இடத்தில் இருந்து கொண்டு மிகப் பெரிய அரசையே,மதத்தையே எதிர்த்தார். அதனால் அவரை நாத்திகன் என்று சொல்ல முடியுமா?

      அப்படி ஒரு செயல் அனைத்து மதத்திலும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.இந்து மாதத்தில் பாரதி செய்தான்.இப்படி ஒரு செயலை செய்ய நாத்திகன் என்ற போர்வை தேவையில்லை.ஆத்திகனாகவே செய்யலாம்.

      மனிதன் மனிதனாக வாழவே மதம் தேவை படுகிறது என்றுதான் நான் சொல்கிறேன்.கிளியோபட்ரா முதலில் மணந்தது தான் உடன் பிறந்த சகோதரனை.அப்படி மூட நம்பிக்கை கொண்ட தவறான வழக்கம் கொண்ட சமுதாயத்தை மதம் தான் மனிதனாக மாற்றியது.உங்கள் நாத்திகம் அல்ல.

      உண்மையில் நீங்கள் இப்பொழுது நாத்திகம் பேசுவதற்கும் மதமே அடிப்படை.ஆம் மதத்தின் மூலமே குருகுல கல்வி நடைபெற்றது.எந்த நாத்திகனும் கல்வி ,அறிவியலை வளர்க்க வில்லை.ஆனால் நீங்கள் வசதியாக அறிவியலை உங்கள் பக்கம் எடுத்து கொள்வது சரியல்ல.ஆன்மீகம் ஒரு போதும் அறிவியலை நம்பாதே என்று போதிப்பது அல்ல.

      நான் இறைவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான்.உங்களுக்கு நன்மை,பணம் கொழிக்க வேண்டுமென்றால் ஆட்டை பலியிடுங்கள்,மொட்டை போடுங்கள்.என்று சொல்லவில்லை.நான் அறிவியலை குறிப்பாக இயற்பியலை,வானியலை மிக அதிகம் விரும்புகிறவன்.

      மாதத்தின் பெயரால் மனிதனை பிளவுபடுத்துவது தவறு என நீங்கள் சொல்வது மிக சரியானது.அதை யாரும் நியாய படுத்த முடியாது.நாங்களும் ஏற்று கொள்கிறோம்.இப்பொழுது நடைமுறையிலும் அப்படிதானே உள்ளது.

      ஆனால் நான் ஆத்திகன் என்று சொல்லிக்கொண்டு தமிழகத்தில் இந்து கடவுளை மட்டும் கேவலமாக விமர்சிக்கும் சில விசா ஜந்துகளை என்ன சொல்வது.

      நீங்கள் அறியாமையை,மூட நம்பிக்கையை மக்களிடம் விளக்க வேண்டும் என்றால் பல பள்ளிகளை திறந்து திறமையான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வியை இலவசமாக வழங்கி உங்கள் சேவையை செய்யலாம்.

      அதை தவிர்த்து நாங்கள்தான் பகுத்தறிவாளிகள் என சொல்லி கொண்டு விநாயகரை செருப்பால் அடிக்கும் செயல் நன்று என்று எந்த அறிவியல் சொல்கிறது?

      ஆன்மீகத்தில் அறிவியல் உண்மையோடு கூடிய செயலே அதிகம்.வேண்டு மென்றால் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம்ன் எனும் நூலை படித்து பாருங்கள்.
    20. கால கோடு என்பது இந்தியகாலக்கோடு என்பதும் வேறுவேறு ...ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அதன் வரிசை கிராமத்தை அடிப்படையாகக்கொண்டு இது வரலாற்று தகவல் களஞ்சியத்தின் பொருளடக்கம் போல் அதாவது எளிதில் ஒரு வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள வரிசை படுத்தி தெரிந்து கொள்ள இது உதவுகிறது...பாட புத்தகத்தில் இது ஒரு பாடமாக இருப்பதற்கு மாணவர்கள் இதை சரிவர கையாளும் பழக்கத்திற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே....அது மட்டுமில்லாமல் தகவல்களை மனதில் இருத்திக்கொள்ள இது எளிய முறை என்றே கருதுகிறார்கள்...இன்னும் இதை பற்றிய விளக்கம் வேண்டுமா....

      அடுத்து நான் விகடனில் வெளிவரும் தகவல்களை தான் இங்கு பதிகிறேன் உண்மையில் விகடன் பதிப்பிற்கு முன் நான் ஒரு சில நேரங்கலில் பதிவிட உண்மை காரணம் .....செந்தூர் முருகன் , சரவணன் பெருமாள் ,கதிரவன் ..பகிரும் செய்திகள் கொண்டு பதிவிடுவதால் தான் .....இதில் எனக்கு எதும் தவறாக தெரியவில்லை எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்கிறேன்...அவ்வளவு தான்...

      நானாக சொந்தமாக ஆராய்ச்சி செய்து தகவல் தருமளவு நான் ஒன்று பெரிய அறிவாளி கிடையாது...அந்த அளவு எனக்கு போதிய நேரமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...

      ஏன் நீங்கள் கூட N.ராமதுரை அவர்களின் அறிவியல் புரம் என்ற வலைத்தளத்தில் இருந்து பல தகவலை தான் இங்கு மறு பதிவு செய்கிறீர்கள்...

      அடுத்து ஆரியர்களை பற்றிய விளக்கம் கேடீர்கள் அவர்களை பற்றிய வரலாற்றை சொல்லுமளவிற்கு பதிவிட இங்கே நேரத்தையும் உழைப்பையும் நான் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதினேன் ...இணையத்திலே இதற்க்கான பல தகவல்கள் உள்ளன...சரி நீங்கள் ஆசை படுகிறீர்கள் ....ஆரியர்கள் எங்கிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவினர் என்றால் அவர்களது பூர்வீகமாக சிரியா அல்லது பாரசீக நாட்டைக் சேர்ந்தவர்கள் என்ற இருவேறு கருத்துக்கள் உள்ளது , ஈரான் நாட்டிலுள்ள Esfarayen என்ற பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவும் முன் வாழ்ந்து வந்தார்கள்...
      இந்தியாவிற்குள் வந்தபின் தான் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள்.. என்று சொல்லபடுகிறது...இதனால் தான் சமஸ்கிருதத்தை ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்தது இல்லை என்ற கருத்து ..பாரசீக மொழியுடன் அதிகமாக பொருத்தி போவது சமஸ்கிருதம்.....

      ஆரியர்கள் மேய்ச்சல் நிலங்களை நாடிதான் இந்தியாவிற்கு வந்தனர் என்பது எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தின் மூலமே தெரிந்திருப்போம்...இவர்களின் முக்கிய கடவுளாக பசு இருந்ததற்கு இதுவும் ஒருகாரணம்...

      பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் அதிக ஒற்றுமைபெற்ற ஒன்று..

      இந்திரன், வருணன் போன்ற கடவுள் வழிபாடும் கடவுள் பெயர்களும் பாரசீகத்தில் காணலாம்....

      ஜலம் என்கிற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று அர்த்தம் என்பது நாம் அறிந்த ஒன்றே... ஆரியர்கள் இன்றும் ஜலம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்....

      பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கைஆரியமயமாக்குதல்.... இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.ஆரியர்களை விட அப்போது அதிகம் அறிவில் சிறந்தவர்களாக யூதர்கள் இருந்தார்கள் என்ற கருத்தும் இதற்க்கு காரணம்....
    21. எனக்கு உங்களிடம் ஒரு சந்தேகம் உள்ளது வள்ளுவரை எப்படி ஆரியர் என்று சொன்னீர்கள்...??????
    22. ஆரியர் பற்றிய தகவல்களுக்கு வலைத்தளத்தில் உள்ள மின் -நூல் புத்தகத்திலோ அல்லது ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்று ஆசிரியரின் “HISTORY” என்ற வரலாற்று நூலை கொண்டு அதிகம் தெரிந்து கொள்ளலாம்.....

  4. நான் உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.புத்தர், மகாவீரர் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள் அவர்களின் . ,.,
    Reply

    Replies






    1. புததரும்,மகாவீரரும் கிமு 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் மிகப் பெரிய பகுத்தறிவாளிகள் தான்.ஆனால் அவர்கள் மட்டுமே அல்ல

      கண்பூஷியஸ், சாக்ரடீஸ்,பிளாட்டோ,அரிஸ்டாட்டில், போன்றவர்கள் புத்தரை மகாவீரரை விட சிறந்த உண்மையான பகுத்தறிவாளர்கள்.அவர்கள் அன்றைய சூழ்நிலையில் கண்டறிந்த பகுத்தறிவு(அறிவியல் கண்டுபிடிப்புகள்-இயற்கையின் ரகசியங்கள்) செயல்களே இன்றைய விண்ஞானத்தின் முன்னோடி.

      புத்தரும்,மகாவீரரும் இவரகளை விட புகழ் பெற்று இருப்பதற்கு காரணம் அவர்கள் இந்து சமயத்தில் சில சீர்திருத்தங்கள் செய்து உருவாக்கிய புத்த,ஜைன மாதங்களே காரணம் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  5. பெண்களை மெட்டி அணிய வேண்டும், தாலி அணிய வேண்டும் எனக்கூறும் மதம்அது அவர்களுக்கு பிடிக்கிறதா என்று எண்ணியதுண்டா மதம் நல்வழிப்படுத்த என்றால் கடவுள் நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவர் என்றால் அனைவரும் சமம் ஏற்றதாழ்வுகள் இல்லா சமுதாயத்தை உருவாக்கி இருக்கவேண்டும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இது அனைத்தும் அவரவர் வசதிகளுக்காவும் வாழ்வாதாரங்களுக்காக உருவாக்கப்பட்டவை.நல்ல சிந்தனைகள் எழவேண்டும் அதில் மற்றவர்களின் நலன் இருக்கவேண்டும்.
    Reply
  6. நமது மனித சக்கித்திக்கு மேலான சக்கி உண்டு அதை மறுக்கயாராலும் இயலாது ஆனால் அந்த சக்கி மனிதனையோ மற்றஉயிர்களையோ எதுவும் செய்ய போதில்லை.எப்பொழுஎல்லாம் மனிதன் இந்த இயற்கைனின்று விலகுகின்றானோஅப்பொழுஎல்லாம் ஒட்டுமொத்த ஊயிர் கோளத்திற்கே பாதிப்பு ஏற்படூகிறது இயற்கை என்பது வழிபடுவதற்கன்று மாறாக ரசிப்பதற்க்கும், மகிழ்வதற்கும் தான்.கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் எந்த செயலை எந்த மதம் செய்தாலும் அதை கடுமையாக எதிர்பவன் தான் பகுத்தறிவாளன்.என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
    Reply

    Replies






    1. உறுதியாக....மத்தின் பெயரால் ..இனத்தில் பெயரால் ...நிறத்தின் பெயரால்...ஜாதியின் பெயரால் மனிதரில் வேறுபாடு கிடையவே கிடையாது....

  7. மாபெரும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் கடவுள் சக்தியை நம்பும் ஆத்திகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
    Reply

    Replies






    1. ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர் ஆனால் அவர் கடவுளின் பெயரால் மனிதர்கள் செய்யும் பண கொள்ளை மற்றும் முட்டாள் தனமான சடங்குகளையும் எதிர்த்தவர்...கடவுளை நம்பு கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றும் ...கடவுளின் பெயரை சொல்லி வழக்கை நடத்தும் மனிதரை நம்பாதே....
    2. முட்டாள்தனமான சடங்கு என்பதை எதை சொல்கிறீர்கள். ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் திருமணம் கூட நாத்திகளின் வாழிவில் முட்டாள்தனம்.

      திருமானத்தின் பொது சடங்கு வேண்டாம்,திருவிழா வேண்டாம்,இறப்பின் பொது ஈம கிரியை வேண்டாம் இவை அனைத்தும் முட்டாள் தனம் என ஒதுக்கினால் வாழ்வில் போராடித்து விடும்.

      எல்லாம் முட்டாள் தனம் என்றால் நீங்கள் எதைதான் புத்திசாலிதானம் என சொல்கிறீர்கள்?
    3. ரொம்ப எளிமையான திருமண முறையான தமிழர் திருமண முறை....அது எளிமையாக அதிக செலவில்லாமல் கடைபிடிக்கப்படுவது அது சிறந்தது..இப்போது பலர் அதை வரவேற்கின்றனர்..அந்த முறையில் திருமணமும் செய்துகொள்கின்றனர்...பெரியவர்கள் வீட்டில் உள்ள பெற்றோர் முன்னிலையில் திருக்குறள் வாசித்து பெற்றோர் முன்னிலையில் நடக்கும் திருமணங்கள் சிறந்ததாகவே உள்ளது அது தமிழர் பண்பாட்டு முறையில் நடப்பது .....

      தமிழர் முறையில் பார்த்தல் மனிதரின் இறுதி சடங்கு அவர்களுக்கு பிடித்த பொருட்களுடன் புதைப்பது இதில் அதிக சடங்குகளும் சம்ப்ரதாயங்களும் இல்லை....நம் முன்னோர்களின் நடுகல் வழிபாடே இதற்க்கு எடுத்துகாட்டு...
      வாதத்திற்கு வேண்டுமானால் சடங்குகள் நியாயம் என்றெல்லாம் பேசலாம் அதற்க்கு பின் வருகின்ற பொருளாதார பிரச்சினைகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.... அதன் மூலம் என்ன நாம் அடைந்தோம் என்பதையும் நினைத்து பார்க்கவேண்டும்....

      ஆரிய சமுதாய சடங்குகள் தான் இப்போது அதிகம் தலை தூக்கி உள்ளது ...அதிகம் செலவு பிடிக்கும் சம்ப்ரதாயமாகவும் இது உள்ளது...தமிழர் முறைப்படியான செயல்முறைகளை தமிழர்களே இப்போது கடைபிடிப்பதில்லை....
    4. எது எப்படியோ ஒருவருக்கு நம்பிக்கை எதில் அதிகம் உள்ளதோ அதனை பின்பற்றினால் தான் அவர்களின் மனதில் ஒரு திருப்பதி ஏற்படும்... மன திருப்தி என்ற ஒரு வார்த்தையின் முன் இவற்றில் எதுவும் சரியான ஒன்று தான்....
    5. ஆனால் ஒன்று ஆசிரியர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்கலாம்....ஆனால் அவரின் கடவுள் நம்பிக்கையை பள்ளியில் ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒன்று என்ற கருத்தை மட்டும் மனதில் நிறுத்த வேண்டும்....மத நம்பிக்கை என்பதுடன் வருணாசிரம தர்மத்தையும் சேர்த்து தான் ...இப்போது மத சார்பான பார்வையை விட ஜாதி ரீதியிலான பார்வை எப்போதும் எங்கேயும் இல்லாமல் இருப்பது மனித சமுகதிற்க்கே நல்லது...
    6. ஆத்திகவாதிகளின் சடங்கு சம்பிரதாயங்கள்தான் ஊரும், உலகமும் சிரிக்கிறதே….
      பெண்களை அடிமைப்படுத்தியதிலும், பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டதும், உடன்கட்டை ஏற வைத்ததிலும், கணவனை இழந்த பெண்களுக்கு இரவு சடங்கு என்று மனதளவில் கொள்வதும், மறுமணம் செய்துகொள்ள மறுத்ததும், சொத்துரிமை மறுத்ததும், வெள்ளை சீலைக்கொடுத்து மூளையில் உடகார வைத்ததும், ஜோதிடத்தை காரணம்காட்டி முதிர்கன்னிகள் பெருக வைத்திருப்பதும் எத்தனை எத்தனை சாதனை செய்தார்கள் என்று நினைவிருக்கிறதா…..
      பூமிக்கும், தேசத்திற்கும், ஆறுகளுக்கும் பெண்களின் பெயர்களை வைத்தால் மட்டும் போதுமா….. பெண்களை சுயமரியாதையோடு வாழவிட்டீர்களா…….
      தேசத்தின் பெருவாரியான மக்களாக உள்ள உழைப்பாளி மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டதும், பொது இடங்களில் வாழ்வாதாரமான தண்ணீர் எடுக்கக்கூட தடை விதித்ததும் மறந்து போய்விட்டதா திருவாளர்களே….
      இதற்கான மாற்றத்தை விதைத்ததும், விதைப்பதும் நாத்திகவாதிகளே…. இதுவரை ஒரு பகுத்தறிவாளனால் ஒரு உயிர் துன்பப்பட்டது என்று கூறமுடியுமா உங்களால்….. பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் பகுத்தறிவாளர்களே…… 
    7. பெண்களை அடிமை படுத்த சொல்லியும் கல்வியறிவு மறுக்க சொல்லியும் உடன் கட்டை ஏற சொல்லியும் பெண்கலுக்கு சொத்துரிமை தர கூடாது என்று எந்த மதத்தின் புனித நூலிலும் இடம் பெறவில்லை.

      இப்படிபட்ட செயல் அனைத்து மதங்களிலும் நடைபெறுகிறது.இப்படை பட்ட செயலை மேற்கொள்பவர்கள் ஏதேனும் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்த மதத்தையே குறை சொல்வது என்ன நியாயம்.

      ஒரு வீட்டில் உள்ள சிறுவன் அறியாமையால் பக்கத்து வீட்டில் கோழியை திருடிவிட்டான் என்பதற்காக அந்த குடும்பமே திருட்டு குடும்பம் என்று சொல்வது எப்படி நியாயம்? நீங்கள் மதத்தை குறை சொல்வதும் அப்படிதான் உள்ளது.

      நீங்கள் கேட்கும் விதம் கிமு 2000 ஆம் ஆண்டிலேயே ஏன் கணிப்பொறியை கண்டுபிடிக்க வில்லை என்பது போல் உள்ளது.அப்போது உள்ள காலச் சூழலில் அது போன்ற சீர்கேடுகள் நடைபெற்று இருக்கலாம்.ஆனால் update version il அந்த குறை சரிசெய்யப் பட்டு உள்ளது.

      எந்த ஒரு செய்தியும்,செயலும் முதல் முயற்சியிலேயே 100% வெற்றி கிடைக்காது.தொடர்ந்து மாற்றம் தேவை.அதன் பெயர்தான் update.மதத்திலும் அப்படிதான் அவ்வப்போது அதிலுள்ள குறைகள் கலையப்பட்டு முழுமையாக்கப் படுகிறது.
    8. உலகில் பல மதங்கள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு விட்டன ஆனால் இந்து மதம் இன்னும் மமாற வில்லை மாறபோவதும் இல்லை.ஷத்திரியன் என்று சொல்லிகொள்கிறவன் என்று பறையனையும், பல்லனையும் தாழ்த்தபட்டவர்களூடன் கலக்கிறானோ அன்று,

  8. "உங்களால் பறக்கமுடியாவிட்டால் ஓடுங்கள்..
    ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..
    நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள்..
    இலக்குகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது"
    என்ற பொன் வாசகங்களுக்கு சொந்தக்காரனான ஹிட்லர் பிறந்ததினம் இன்று.. ஏப்ரல் 20!
    Reply
  9. எல்லா புகழும் இறைவனுக்கே.
    Reply
  10. அனைவருக்கும் அனைவருக்காக மரித்து 3 ம் நாள் உயிர்த் தெழுந்த கடவுளின் ஒரே சொந்த குமாரனாகிய இ ர ட் ச க ர் இ யே சு வினை நினைவு கூரும் பண்டிகையில் நினைவு கூர் ந் து மகிழ்ந் து அனைவருக்கும் இ ர ட் ச க ர் இ யே சு வின் பெயரால் டெட் எக்ஸாம் 2013 ல் 90 & ABOVE எடுத்து பாஸ் ஆனாவர்க்கள் , நண்பர்கள் , உறவினர்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என கர்த்தருடைய பெயரை பயபக்தியுடன் உரிமையாய் எடுத்து வாழ்த்துகிறேன்
    Reply

    Replies






    1. Thanakagaum, thanni pondravarvagal (90 & above ) matum vaalvil sirakka vendi kolum ungalai ninaikum pothu rommmmmmmmmmmmba sirumaiya iruku angal tet.

  11. முதலில் உங்கள் கடவுளை கூட்டிக்கொண்டு தொலைந்த மலேசியன் விமானத்தை கண்டுபிடியுங்கள் அப்புறம் நாத்திகத்தை பற்றி பேசலாம்.இவ்வளவு பேசும் மணி ரெங்கநாதன் நீங்கள் எந்த அணுவை பிளந்து எதைகண்டறிந்த பகுத்தறிவாளர்.RSSலிருந்து கிளம்பி மோடிக்கு வாக்குவாக்கு சேகரிப்போரோ நீங்கள்.
    Reply

    Replies






    1. இது என்ன மொட்ட தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சி போடும் கேள்வி?

      இதுதான் ஒரு பகுத்தறிவாளன் கேட்கும் கேள்வியா?

      இன்னும் கொஞ்சம் போனால் உங்கள் வீட்டிற்கு வந்து கடவுளை தினமும் சமையல் செய்ய சொள்ளுவீர்கள் போல.

      அது ஒரு நம்பிக்கை,உணர்வு, மனிதன் ஒற்றுமையுடன் இருக்க ,தழைத்தோங்க மேற்கொள்ளப் படும் நிகழ்வ அதை பற்றி நிறைய பேசிக்கொண்டே போகலாம்.

      நீங்கள் இறை நம்பிக்கையை வெறுக்கிறீர்கள் என்பதற்கு தெளிவான,உறுதியான ஒரு காரணத்தை கூறுங்கள். நீங்கள் நாத்திகரானால் apr 17 ஆம் தேதியன்று ஆசியர் தகுதி தேர்வு 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்ற தலைப்பில் "கணியன் பூங்குன்றன்" என்ற பெயரில் நாத்திகரிடம் சில கேள்விகளை கேட்டுள்ளேன். அதற்கு உங்களின் பதிலை எழுதுங்கள்.

      ஆமாம் நான் இந்து மதத்தை சேர்ந்தவன். என் மதத்தை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.என் மதத்தின் மேன்னையான கோட்பாடுகள் எனக்குத் தெரியும்.


    2. தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினாரே.நெற்றி கண்ணிருந்து கிளம்பிய தீ நக்கீரரை எரித்ததே.ஏன் என்வீட்டில் சமயல் செய்யமாட்டார் தோழரே.
    3. நீங்கள் இப்படி பதிலை எழுதாதீர்கள்,உங்களின் நாத்தீகம் எந்த வகையில் ஆத்தீகத்தை விட சிறந்தது என்பதை கூறுங்கள்.

      நாத்திகம் குறித்து நானும் உங்களால் பதிலே சொல்ல முடியாத அளவுக்கு கேள்விகள் கேட்பேன்.ஆனால் அது முறையாகாது நண்பரே.
    4. நாத்திகன் கேள்விகேட்டு திருப்தி அடைவான்.ஆத்திகன் நம்பிக்கை கொண்டு திருப்திஅடைவான்.
    5. ஆத்திகவாதிகளின் சடங்கு சம்பிரதாயங்கள்தான் ஊரும், உலகமும் சிரிக்கிறதே….
      பெண்களை அடிமைப்படுத்தியதிலும், பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டதும், உடன்கட்டை ஏற வைத்ததிலும், கணவனை இழந்த பெண்களுக்கு இரவு சடங்கு என்று மனதளவில் கொள்வதும், மறுமணம் செய்துகொள்ள மறுத்ததும், சொத்துரிமை மறுத்ததும், வெள்ளை சீலைக்கொடுத்து மூளையில் உடகார வைத்ததும், ஜோதிடத்தை காரணம்காட்டி முதிர்கன்னிகள் பெருக வைத்திருப்பதும் எத்தனை எத்தனை சாதனை செய்தார்கள் என்று நினைவிருக்கிறதா…..
      பூமிக்கும், தேசத்திற்கும், ஆறுகளுக்கும் பெண்களின் பெயர்களை வைத்தால் மட்டும் போதுமா….. பெண்களை சுயமரியாதையோடு வாழவிட்டீர்களா…….
      தேசத்தின் பெருவாரியான மக்களாக உள்ள உழைப்பாளி மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டதும், பொது இடங்களில் வாழ்வாதாரமான தண்ணீர் எடுக்கக்கூட தடை விதித்ததும் மறந்து போய்விட்டதா திருவாளர்களே….
      இதற்கான மாற்றத்தை விதைத்ததும், விதைப்பதும் நாத்திகவாதிகளே…. இதுவரை ஒரு பகுத்தறிவாளனால் ஒரு உயிர் துன்பப்பட்டது என்று கூறமுடியுமா உங்களால்….. பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் பகுத்தறிவாளர்களே…… 
    6. இந்து மதம் சொன்ன நால்வர்ணத்தில் நீங்கள் எந்த வர்ணம் என்று அறிவீர்களா திரு.மணியரசன். இந்து மதத்தில் உங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்று தெரியுமா…. திருமணச்சடங்கின்போது பாடப்படும் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா திரு.மணியரசன். கீதையில் சொல்லப்பட்ட விசயங்களை முழுமையாக தெரிந்துகொண்டீர்களா……
    7. எனக்கு நான்கு வர்ணங்களும் தெரியும்.நான் சத்ரியன்.எனக்கு விதிக்கப் பட்டுள்ள முதல் கட்டளை மற்றவர்களிடம் அன்பு செலுத்துதல்.

      கீதையில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன்.அது ஒரு கடல்.

      உங்களுக்கு அறிவியல் குறித்த அத்தனை தத்துவங்களும் தெரியுமா? என்பது போன்ற கேள்வி இது.
    8. திருமணச்சடங்கின்போது ஓதும் மந்திரம் மாங்கல்யம் தந்துனானேனா இந்த பாடலுக்கு என்ன அர்த்தம். அதில் சில வரிகள் பாடலைப் பாடுவர் சொல்கிறார். நான் மணப்பெண்ணை கட்டி அனைப்பேன் அவளின் அந்தரங்க பாகங்கள் என்னை தழுவும்படி வானத்து தேவதைகளாகிய தாங்கள் அருள்புரிய வேண்டும் என்கிறது, அந்த பாடல் வரிகள். அந்த வரிகளை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
      இதைவிட ஒரு பெண்ணை, ஒரு மணமகனை இழிவுபடுத்த முடியுமா…. அந்த பாடலின் அர்த்தம் தெரிந்தால் திருமண மண்டபம் மண்டபமாக இருக்குமா… இதுதான் மதமா…….
      கடவுள் பற்றிய கருத்துக்களும், இவர்கள் குறிப்பிடும் கடவுள் ஒவ்வொன்றும் தோன்றிய விதமாக சொல்லும் கதைகளெல்லாம் அநாகரிகமாகவும், படுகேவலமாகவும் உள்ளது. மகாபாரதத்தில் குந்திதேவி குளக்கரைக்கு சென்ற இடத்தில் சூரியனை பார்க்கிறாள் கர்ணன் பிறக்கிறான், பார்வதிதேவி தனது மேனி அழுக்கையெல்லாம் ஒன்றாக திரட்டி பிடிக்கிறாள், பிள்ளையார் அங்குதான் பிறக்கிறார். பெருமாள் பெண் அவதாரம் எடுத்து சிவபெருமானிடம் கலக்கிறார், ஐயப்பன் பிறக்கிறார். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன் பிறக்கிறார். தீபாவளிக் கதையில் பன்றிக்கும், பூமாதேவிக்கும் நரகாசுரன் பிறக்கிறான் இன்னும் மோசம் தமிழ் வருடங்கள் பிறந்ததாக சொல்லப்படும் கதை. இதனாலயே தமிழ் வருடபிறப்பை தை முதல்நாளில் மாற்றிய வரலாறு உண்டே….. இன்னும் ஆயிரம் கதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி அறிவுக்கு பொருந்தாத கதைகள்தான் ஆன்மீகத்தில் ஆயிரம் உள்ளது. மறுக்க முடியுமா தங்களால்….
      இன்றும் மதம் ஒருதுளி கூட தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. பழமைவாதமே பேசிக்கொண்டு வருகிறது. மதமும், கடவுளும் எதையும் மாற்றவில்லை. மாற்றம் செய்தவர்கள் நீங்கள் நாத்திகவாதிகளாக சித்தரிக்கும் மனிதர்களே…..
      மாற்றம் தேடிய மனிதர்களால் இனியும் இவர்களிடத்தில் கோலோச்ச முடியாது என மதவாதிகள் ஓட்டம் பிடித்தார்கள்….. அவ்வளவே…..

    9. அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அறிவுக்கு பொருந்தாத விசயங்கள்தான் ஆன்மீகம்.
      மனிதன் தோன்றிய வரலாறு பற்றி பல்வேறு கோட்பாடுகள் கூறப்பட்டாலும் இரண்டு கோட்பாடுகள் முக்கியமானவை. ஒன்று கடவுள் படைப்பு கோட்பாடு, பல்வேறு மதங்களில் மனிதனை கடவுள் படைத்ததாக கூறப்படுகிறது. இந்து மதத்திலும், கிருத்துவத்திலும் அவ்வாறே கூறப்படுகிறது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மற்றொன்று மனிதக்குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய வரலாறு. இதற்கு வழிநெடுகிலும் ஆதாரத்தை விட்டுச்சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். இதற்கான ஆதாரங்களை இன்றும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அடிப்படையிலேயே அறிவியலும், ஆன்மீகமும் முரன்படுகிறது. ஆரம்ப காலகட்டத்திலிருந்தே அறிவியலை புறக்கனித்தே வந்துள்ளது மதங்கள். உலகம் தட்டையில்லை உருண்டை என்றவர்களை கல்லால் அடித்தே கொன்றவர்களும், கலிலியோவை வீட்டுச் சிறையில் அடைத்தவர்களும், உயிரினங்களை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது கடவுள் இல்லை, மனித உடம்பில் உள்ள ஜீன்கள் (அல்லீல்கள்) என்றவரை எள்ளி நகையாடியதும், பலருக்கு பயித்தியக்காரன் பட்டம் கட்டியதும், ஆரம்ப காலகட்டங்கள் நாத்திகம் பேசியவர்களுக்கு மரணதன்டனை வழங்கியவர்களும் மதவாதிகளே அன்றி அறிவியல் இல்லை.
      அன்றைய குருகுலக் கல்வியில் கற்பிக்கப்பட்ட வான சாஸ்திரம் என்ற அறிவியல் துறையை, சோதிடம் என்ற காசு பார்க்கும் துறையாக மாற்றிய பாவிகள் இவர்களே…..
      இனியொருமுறை அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக பேச வேண்டாம்.
    10. எங்கே சென்றுவிட்டீர்கள் திரு.மணியரசன்…… கேள்விக்கான பதில் எங்கே……
    11. சரியாய் சொன்னீர்கள் அசோக் தோழரே.இன்று இவர்கள் இப்படி பேச காரணம் தீராவிட இயக்கம்.பெரியார் இயக்கம் செயல்படாமல் இருப்பததையே காட்டுகிறது.
    12. நான் எங்கேயும் செல்லவில்லை.இப்பொழுதான் உங்களின் கமெண்ட் பார்த்தேன். சிறு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு உங்களை ஆத்திகனாக மாற்றுகிறேன்.

  12. பாபர் மசூதியை இடித்தவர்கள் கரசேவகர்கள்.குருகோவிந் சிங்கை.அர்சுன் சிங்கை கழத்தறித்து கொன்றவர்கள் மொகலாயர்கள்.சுனாமியில் இறந்தவர்கள் பல மதத்தை சார்ந்தவர்கள் ஏங்கே போனான் அந்த கடவுள்.பெருமால்?ஏசு?அல்லா? யார் காப்பாற்றினார்கள்.ஒருவேளை எல்லோரும் உரங்கிவிட்டார்களோ.என்ன தோழரே.
    Reply
  13. "பகவத் கீதை ஒரு இந்துவையோ,
    திருக்குரான் ஒரு முஸ்லீமையோ,
    பைபிள் ஒரு கிறித்தவரையோ,
    உருவாக்கக் கூடாது! மனிதனை உருவாக்கவேண்டும்"
    Reply

    Replies






    1. சரியாய் சொன்னீர்
    2. நிட்சாயமாக, அப்படித்தான் மேலே உள்ள மூன்றும் எழுதப் பட்டுள்ளது.

      இந்த மூன்றிலுமே அன்பே,பிறருக்கு உதவி செய்யும் எண்ணமே பிரதான செய்தியாக இடம் பெறுகிறது.

      முஸ்லிம் மதத்தில் ஹலால் என்ற ஒரு சொல் பயன்படுத்துவதுண்டு.இந்து மதத்தில் எப்படி உயிரை கொள்ளுதல் பாவம் என்கிறதோ அதே போன்று இஸ்லாத்தும் சொல்கிறது.

      அனைத்து மதங்களும் அன்பையும் சகோதரத்துவத்தையுமே போதிக்கின்றன.
    3. அன்பையும் சகோதரத்துவத்தை போதிக்கிறது இஸ்லாம். ஆன்மா இல்லை, உயிர்களிடத்தில் அன்பு, கொல்லாமை.சொல்கிறது புத்தம்,கிறிஸ்தவம் அனைவரையும் அன்புசெய்என்கிறது.காதலித்தால் குற்றம் கலாச்சாரசீரழிவு என்பார்கள்.கீழ்சாதிகாரன் படிப்பதே குற்றம் மீறி படித்தால் காதில் ஈயத்தினை காய்ச்சீ ஊத்துவார்கள்.அவன் இவன் தெருவில் நடக்க கூடாது.இதெல்லாம் தான் அன்பு சகோதரத்தும்
    4. நான் ஒரு செய்தியை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

      நாம் தமிழன் என்ற முறையில் கரிகால் பெருவளத்தானை மிக புகழ்ந்து பேசுகிறோம்.

      ஆனால் அவனும் போர்க்களத்தில் பல கொலைகளை செய்தவன் தான். அதற்காக கரிகாலன் குற்றவாளியா?
      ஒரு மாதம், செயல்முறை, வாழ்க்கை முறை என்றால் நிறைகளோடு குறைகளும் இருக்கத்தான் செய்யும். அது உலக நியதி.

      அதுபோல்தான் இந்து மத வழிபாடு முறையில் சில செயல்கள்(பலியிடுதல்) இருக்கலாம். அதற்காக அதனை குறை சொல்லுதல் கூடாது.
    5. போர்களத்தி கொலை செய்வது என்பது இருதரப்பிலும் நிகழும் இங்கே பாதிப்பு இரண்டு பக்கத்திலும் இதில் மற்றவரை எய்த்து ஏமாற்றி பிழைக்கவில்லை ...
      தமிழ் பண்பாட்டின் வழிமுறைப்படி ...அவங்க வீராத நிலைநாட்டுறோம் எங்கள் நாட்டை காக்கின்றோம் என்ற எண்ணத்தில் செய்ததை தயவு செய்து வருணாசிரம அடிப்படையிலான ஜாதிய பாகு பாட்டுடன் ஒப்பிட்டு அசிங்க படுத்த வேண்டாம்....
    6. போர்க்களத்தில் கொலை செய்தால் மட்டும் அது கொலை இல்லையா? அதுவும் உயிர்தானே.

      அரியனை ஏற வேண்டும் என்பதற்காக தம் தந்தையை, தமையனை,தாயை கொலை செய்த வரலாற்று சம்பவம் நம் மன்னர்கள் செய்துள்ளார்கள் என்பதை மறவாதீர்கள்.

      நான் தமிழன் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் இந்து மதத்தை வழி நடத்தி சென்றவர்கள் இந்த ஆரியர்கள் என்பதை மறுக்க முடியாது.

      வள்ளுவனில் ஆரம்பித்து உ வே சாமிநாத ஐய்யர்,பாரதி போன்ற ஆரியர்களே இந்த தமிழ் சமூகமும் தமிழும் நிலைத்திருக்க பாடுபட்டவர்கள்.

      தமிழ் பண்பாடு என்பது இந்து மதத்தோடு இரண்டற கலந்தது. இந்து மதம் இல்லாமல்,தமிழ் பண்பாடு இல்லை.தமிழ் பண்பாடு என்பதே இந்து மதத்தின் செயல்பாடு தான்.

      வருணாசிரம அடிப்படையிலான பாகுபாடு என்பதை யாரும் ஆதரிக்கவில்லை.

      உண்மையில் செய்யும் தொழில்,உணவு பழக்க வழக்கம்(veg&non.veg)அடிப்படையில் தான் சாதியம் பார்க்கப் பட்டது.
    7. வள்ளுவன் ஆரியரா?....
    8. This comment has been removed by the author.
    9. போர்க்களத்தில் கொலை செய்தால் மட்டும் அது கொலை இல்லையா? அதுவும் உயிர்தானே என்றால் என்ன சொல்வது புராணங்களில் இல்லாத போர்களா...இல்லை கொலைகளா...அணைத்து மத புராணங்களிலும் இது உள்ளது...இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது என்று தான் சொன்னேன்...
      அரசனின் நீதி தான் குடிகளை காப்பது.....
      தொழில் அடிப்படையில் என்று தான் வருணாசிரமம் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று இது இங்கு தவறான ஒன்றில்லை ஆனால் அவர்கள் அந்த தொழிலைத்தான் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தலும்....அதை தொடர்ந்து வந்த அடிமை முறையும் ஏற்று கொள்ள கூடியதா...? ஒருவரை ஏமாற்றி பிழைக்கும் உழைப்பை திருடும் பழக்கம் கண்டிக்க தக்கது...
    10. நீங்கள் ஆரியர்கள் என்பது யாரை குறிக்கிறது என நினைக்கிறீர்கள் என்பதை முதலில் எழுதுங்கள்?

      வள்ளுவன் தெலுங்கை சேர்ந்தவர் என ஆந்திர சொந்தம் கொண்டாடியாதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
    11. ஏன் பிராமணன் சொந்தம் கொண்டாடி பூநூல் போட்டுவிட்ட தமிழகம் உண்டு நாத்தீக தமீழன் இல்லை என்றால் அதையும் சொநதம் சொல்லியீருப்பர் ஆரியர்
    12. ஸ்ரீ நீங்கள் சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டூ பின்பு நான் அதை சொல்லவில்லை.இப்படி சொன்னேன் என்று எழுதுகிறீர்கள்.

      அடுத்தவர்களின் உழைப்பை திருடி தின்பது,ஏமாற்றி பிழைக்கும் செயல் ஆகியவை கண்டிக்கத் தக்கது தான்.

      அப்படி கண்டிக்க பட வேண்டியவர்கள் இன்றைய அரசியல்வாதிகளும் வணிகர்களும், இடைத்தரகர்களும், பேரு முதலாளிகளும் தான்.

      அவர்கள்தான் முறையே குடிமக்களை,நாட்டை,விவசாயிகளை வயிற்றில் அடித்து பிழைக்கின்றனர்.

      நீங்கள் அடிக்க வேண்டியா ஆள் அம்பானி குடும்பத்தையும்,டாடா குடும்பத்தையும்,சோனியா காந்தி குடும்பத்தையும்,கருணாநிதி கூடம்பத்தையும்,ஆ ராசாவையும் தான்.
    13. வள்ளுவனை தெலுங்கர் மட்டுமல்ல பலமாநிலத்தவர் சொந்தம் கொண்டாடினார்கள்....

      கருணாநிதி வள்ளுவர் படத்தை வேணுகோபால் சர்மாவிடம் வரைய சொன்னதற்கு காரணமும் மற்ற மாநிலதவர்கள் வள்ளுவரை சொந்த கூண்டாட கூடாது என்பதற்காகத்தான்....படத்தில் வள்ளுவருக்கு பூ நூல் வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலையில் தான் வள்ளுவருக்கு சலவை போர்த்தப்பட்டது....என்ன கொடுமை என்றால் வள்ளுவன் என்ற இனம் தாழ்தப்பட்ட பிரிவில் உள்ளது....
    14. நான் சொன்னதை இங்கு மறுத்து பேசவேண்டிய அவசியம் இல்லை...நான் சொன்னதாக நீங்கள் கருதும் உங்கள் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல...
    15. அம்பானி ,சோனியா காந்தி ,கருணாநிதி,ராசா,கனிமொழி ,மோடி ,மன்மோகன் இவர்கள் செய்த தவற்றை திருத்த நல்ல அரசியல் வாதிகள் தேவை...ஆனால் அந்த நபர் எப்போது இந்தியாவிற்கு கிடைப்பார் என்று தெரியவில்லை....ஆனால் இவர்களும் இந்த ஜாதி,,மத பிரிவுகளை தங்க அரசியல் சுய லாபத்திற்காக ஏதாவது ஒரு வகையில் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள்....
    16. இந்து மதம் சொன்ன நால்வர்ணத்தில் நீங்கள் எந்த வர்ணம் என்று அறிவீர்களா திரு.மணியரசன். இந்து மதத்தில் உங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்று தெரியுமா…. திருமணச்சடங்கின்போது பாடப்படும் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா திரு.மணியரசன். கீதையில் சொல்லப்பட்ட விசயங்களை முழுமையாக தெரிந்துகொண்டீர்களா……

  14. புதன் மேடு.சுக்கிரன். செவ்வாய் தோசம். இதெல்லாம் சொல்கிற சோதிடம்.சுனாமியை முன்கூட்டி சொல்லி இருக்கலாமே.இல்லை எத்தனை தொகுதிகள் தி.மூ.க.அ.தி.மு.க சொல்ல முடியுமா.இல்லை மத்தியில் எவ்வளவு சீட் பா.ஜா.க சொல்ல முடியுமா தோழரே
    Reply

    Replies






    1. நீங்கள் ஆத்திகத்திற்கும்,மூட நம்பிக்கைக்கும் இடயே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வில்லை.

      மூட நம்பிக்கை என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது.முஸ்லிம்,புத்த மதத்தில் சற்று அதிகமாகவே உள்ளது.

      இறைவழி பாடுகளில் சிறு தெய்வ வழிபாட்டில் பல மூட நம்பிக்கைகள் காலங்காலமாக பாமர மக்களிடம் உள்ளன.

      நீங்கள் இந்து மாதம் எனும் ஆலமரத்தின் நுனி இலையை கூட தெரிந்து வைத்திருக்க வில்லை.

      19 ஆம் நூற்றாண்டில் இந்து மாதம் என்றாலே பாம்பாட்டி மதம், சந்நியாசி மதம் என நினைத்து கொண்டிருக்கையில், 1897 இல் சிகாகோ நகரில் விவேகானந்தரை ஏதோ போனால் போகிறது என்ற ரீதியில் தான் இந்து மதம் சார்பாக பேச அனுமதிதார்கள்.

      கடைசியில் அங்கு நடைபெற்ற உரைகளிலேயே இந்து மதம் சார்ந்த உரைதான் சிறப்பானதாய் அமைந்தது.

      என் ஊர் திருவண்ணாமலைக்கு 30 km தொலைவில் அமைந்துள்ளது. ஒரு முறை திருவண்ணாமலைக்கு வந்து பாருங்கள் எத்தனை வெளிநாட்டவர்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது புரியும்.
    2. தோழர் ரரெங்நாதன் அவர்களே நீங்கள் ஒரே கண்னோட்டத்தில் அனைத்தையும் பார்க்கீறிகள்.பலகண்னோட்டத்தில் பார்பதற்கு மறுக்கிறிர்கள்.கோவில்நுழைவு போராட்டம்.தீண்டாமை கொடுமை உலகில் எந்த மதத்திலும் இல்லை.நீங்கள் சௌகரியமான இடத்தில் இருந்து கொண்டு சிந்திக்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
    3. நான் ஒரே கண்ணோட்டத்தில் அனைத்தையும் பார்க்கவில்லை. எது குறித்தும் எனக்கு விசாலமான பார்வை உண்டு.

      நானும் சிறிது காலம் கிறித்துவ பள்ளியில் படித்த காரணத்தினால் கிறித்துவனாகவே மாறியதுண்டு.விரதத்தின் பொது எங்கள் வீட்டில் திருநீறு வைத்தாலும் அவர்களுக்கு தெரியாமலேயே அதை அழித்து விடுவேன்.

      பின்பு சிறிது காலத்திற்கு பின்பு அறிவியலின் சிறிய பார்வை தெரிந்தவுடன் சுத்தமான நாத்திகனாக இருந்தேன்.

      இன்னும் சற்று அனைத்தையும் விசாலமாக பார்க்கும் போதுதான் மதம், அறிவியலின் உண்மை தன்மை புரிந்தது.

      நீங்கள் தான் இந்து மாதத்தில் காணப்படும் சில குறைபாடுகளை மட்டும் எடுத்து கொண்டு, அந்த குறைபாட்டின் காரணமாக மதம், இறைவனை ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்.

      படிக்கத் தெரியாத பாமர விவசாயிடம் அறிவியலின் செயல்பாடுகளை விளக்கி அதன் அடிப்படையில் விவசாயம் செய்யுங்கள் என்று எடுத்துரைத்தால் அதில் உங்களால் வெற்றி பெற முடியாது.

      ஆனால் காலையில் 4 மணிக்கு எழுக்கு வயலுக்கு போகவில்லை என்றால் லட்சுமி வீட்டுக்கு வரமாட்டாள் என்று சொல்லி அந்த செயலை செய்வதில் எளிதில் வெற்றி பெறலாம்.

      ஒரு இந்து காலையில் எழுந்து சாணம் தெளிப்பதில் இருந்து,கோலமிட்டு,குளித்து,சமையல் செய்து விரதம் இருப்பது வரை பால் அறிவியல் செய்திகள் கடவுளின் பெயரால் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

      இங்கே தான் ஒரு மதத்தின் நன்மை இருக்கிறது.

      எந்த ஒரு மதமும் மாந்தர்களுக்கு தேவையான செயல்முறைகளை உரைப்பதால் தான் இன்னும் இந்த உலகில் மதம் என்பது நிலைத்திருக்கிறது.

      உங்களுக்கு மதம் குறித்த செயல்களை எழுத வேண்டுமானால் ஒரு பக்கம் அல்ல 100 பக்கம் என்னால் எழுத முடியும் ஆனால் நாத்திகம் குறித்து உங்களால் சில பக்கங்ககளை கூட தாண்ட முடியாது.

      மதம் குறித்த என்னுடைய கருத்தை எழுத எனக்கு போதிய நேரமில்லை.
    4. எத்தனை பக்கங்கள் எழுதுவது என்பது அவரவர் அறிவு பெற்ற தகவலை பொறுத்தது.ஆன்மீகத்தையோ, நாத்திகத்தை பொறுத்து அல்ல.சுகங்கள் பற்றி நூறு என்றால் துண்பங்கள் பற்றி ஆயீரம் பக்கம் எழூதலாம் தோழரே.
    5. அறிவியல் பூர்வமான விவசாயம் 1967 க்கு பிறகு தோழரே.அந்த காலத்தில் யாரும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து வயலுக்கு செல்ல மாட்டார்.வீட்டிற்கு லட்சுமி வரமாட்டால் பிணம் தான் வரும்.அப்பொழுது கொலைக்கார கொடிய விலங்குகள் அதிகம் தோழரே.என்ன போங்க செயல்முறை சிந்தனையாக இல்லையே.
    6. உண்மைதான்.ஆனால் அப்படி எழுதுவதற்கும் செய்திகள் வேண்டுமே.

      ஆத்தீகத்தை ஆதரித்து எழுத நிறைய செய்திகள் உள்ளன.நாத்தீகத்தில் அரைத்த மாவையேதான் அரைக்க வேண்டும்.
    7. யார் சொன்னது அறிவியல் பூர்வமான 1967 க்கு பிறகு என்று.ஒருவேளை இந்தியாவில் 1967 பசுமை புரட்சி ஏற்பட்டதை மனதில் வைத்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.நெல்லுக்கு பிறகு கடலை விதைப்பதும்,பின்பு 2 மாத காலம் கரம்பாக விடுவதும் அறிவியல் முறை விவசாயம் தான்.

      நெல் அறுவடை செய்த பின்பு மண்ணில் நைட்ரஜன் சத்து குறைந்து விடும்.அந்த சத்தை ஈடுகட்டும் செயல் கடலை பயிர் செய்யும் பொது நடைபெறுகிறது.

      அதாவது லெகுமினஸ் தாவர வகைகளிலுள்ள வேர்களின் முண்டுகளில் வாழும் பாக்டீரியம் நைட்ரஜனை நிலைநிறுத்தும் செயலை மேற்கொள்கிறது. அதனால் தான் இக்டு போன்ற பயிர் வகைகள் சுழற்சி முறையில் பயிரிடப்படுகிறது.இதுதான் அறிவியல் பூர்வமான விவசாயம்.

      மண்ணில் செயற்கை உரங்களை இட்டு அரிசியில் பூச்சி மருந்தை கலக்கும் செயல் அறிவியல் பூர்வமான விவசாயம் அல்ல.

      உண்மையில் செயற்கை உரங்கள் எவ்வாறு தோன்றின என்ற செய்தியை தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

      இரண்டாம் உலகப் போரின் முடிவில் மீதமிருந்த வெடி உப்பினை பணமாக்க அமெரிக்கா நிகழ்த்திய சதி அது.

  15. raja,
    sinna chilrai payale. Raththa oottam overa unaku ?
    Reply

    Replies






    1. ஐயா. பெரியவரே எனக்கு வயது ஜம்பதுரத்தம் சுண்டி விட்டது

  16. Maniyarasan renganathan You are great man
    Reply

    Replies






    1. thank you friend, i am not great man. but your comment make me feeling good.

  17. Maniyarasan your comment is veey good. Ipa indhu mathathai vida vera mathangal kuripaka kirusthuva matham, muslim ponra mathngalil muda nampikai athigamaka ullathu. Athai en oruvarum vimarsika mudiavillai , indhu matham matum than avarkaluku vimarsan porulaka ullathu
    Reply
  18. im...m . hai , friends , i hve understood , how much s.p raj was sufred fr tis issue , i wil say about christianity , tis is universal truth , many of them dont know abot it , now christianity have proper history from alpha to omega , which donot have any religion , i dont have time to type all this , bye .
    Reply

16 comments:

  1. I feel that is among the so much vital info
    for me. And I am satisfied studying your article.
    But want to statement on few common issues, The web site taste is wonderful, the articles are really excellent : D.
    Excellent activity, cheers
    avast secureline vpn crack
    filmora crack
    fxfactory pro crack
    easeus data recovery wizard pro crack

    ReplyDelete
  2. Hi would you mind stating which blog platform you’re using?
    I’m planning to start my own blog in the near future but I’m having a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and
    I’m looking for something unique. P.S Apologies for
    getting off-topic but I had to ask!
    wonder share v downloader crack
    the surge pc crack
    pdf candy desktop crack

    ReplyDelete
  3. I liked your blog ... very beautiful colors and themes. Did you create this page?
    Did you hire someone or did you hire someone to do that?
    Please reply that I would like to design my own blog
    I want to know where he got this from. Thank you very much

    mcafee livesafe crack

    ReplyDelete
  4. A person should only enjoy it twice.
    A day in memory of a year.
    Another is the wedding day, the day of life.
    teamviewer crack
    zbrush crack
    nch wavepad beta crack
    bluestacks crack

    ReplyDelete

  5. This is very attention-grabbing, You’re an overly skilled blogger.
    I’ve joined your feed and look ahead to seeking more of your great post.
    Additionally, I have shared your site in my social networks

    dbx converter wizard crack
    iobit uninstaller crack
    eset nod32 antivirus
    eset mobile security crack
    city racing 3d apk

    ReplyDelete
  6. Excellent post. I was checking constantly this blog and I am impressed!
    Extremely helpful info specifically the last part
    I care for such info much. I was seeking this particular info for a very long time.
    T vmware player crack
    traktor pro crack
    iobit malware fighter crack
    dvdfab crack
    radmin vpn crack
    easeus video editor crack

    hank you and good luck.

    ReplyDelete
  7. It’s not my first time to pay a quick visit this web
    site, i am visiting this site dailly and obtain fastidious data from here
    daily.

    etasoft sound booster crack
    autocad
    charles proxy crack
    roguekiller
    vidmate apk

    ReplyDelete

  8. I really love your blog.. Great colors & theme.
    Did you develop this website yourself? Please reply
    back as I’m hoping to create my own site and would love to know
    where you got this from or just what the theme is named.
    Thank you!
    pc transfer crack

    ReplyDelete
  9. Its really strong for you generally all window programming establishment. This site is perplexing its article are basic and enrapturing. I enjoyed and bookmark this site on my chrome. This is the place where you can get all break programming in like manner present in clear way.
    https://zzcrack.com/

    ReplyDelete
  10. Its truly solid for you by and large all window programming foundation. This site is baffling its article are fundamental and enchanting. I appreciated and bookmark this site on my chrome. This is where you can get all break programming in like way present in clear manner.
    https://cracksmid.com/

    ReplyDelete
  11. Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. It will always be useful to read content from other authors and use something from other sites.
    superantispyware pro crack
    download microsoft office 2010 crack
    free netflix downloader crack

    ReplyDelete