Wednesday 4 March 2015

தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய பதிவர்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இப்போதெல்லாம் இணையப்பக்கம் எட்டிப் பார்க்கவே சரியாக நேரம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மெயில்களை பார்ப்பதோடு காலம்கழிகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இந்தப் பதிவானது இஸ்லாமிய சகோதரர் பலருக்கு கடுப்பை ஏற்றும் ஆனால் ஒரு முறை ஆறுதலாக படித்த பின்னர்
கருத்துக்களையும் உங்கள் தொடுப்புக்களையும் இடுங்கள்.

தமிழ் நாட்டு பதிவுலகத்தில் ஒரு சில அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகள் மற்றைய மதங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு அலைந்து திரிவது பலரும் அறிந்ததே.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது போல இந்தளவு நாளும் மதங்களைத் தாக்கி வந்தவர்கள் இன்று ஒரு இனத்தின் பண்பாட்டை கொச்சபை்படுத்தும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.

இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் இதைக் கண்டும் காணாமல் விட்டு இருப்பது எதிர்காலத்தில் அம் மதத்தின் மீதான ஒரு பெரும் காழப்புக்கு வழிவகுக்கும் என்பது அசைக்கமுடியாத கருத்தாகும்.
பல பண்பாடுகளுக்கு பெயர் போனது எம் தமிழ் இனம். செம்மொழிகளுக்குள் அங்கீகரிக்கப்பட்டதுடன் தொல்காப்பியம் என்னும் பெரும் இலக்கணவிளக்கம் கொண்ட நூலையும் கொண்டிருக்கிறது. இவையனைத்தையும் கொண்டிருக்கும் எமக்குள் உள்ள பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் என்ற பண்பாடாகும்.
அதில் உணவு பரிமாறல் என்பது மேற்கத்தையவரே வியக்கும் ஒரு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இப்படியான இடங்களில் வாழை இலை போட்டு பரிமாறுகையில் உணவு அருந்தி முடிந்ததும் ஒரு பழக்கத்தை கையாள்வார்கள். அதாவது திருமணம், பூப்புனித நீராட்டு விழா போன்ற சந்தோசமான இடங்களில் உணவருந்தி முடிந்ததும் தம் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள். அதே போல துக்க சம்பவம் நடந்த இடங்களானால் பரிமாறியவர் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள்.
 
இதன் விளக்கம் என்றால் சந்தோசத்தை நாங்களும் பெற்றுக் கொள்கின்றோம் அதே போல துக்க நிகழ்வென்றால் இப்படி ஒரு சம்பவம் இனியும் உங்களுக்கு வேண்டாம் என்பதற்காக இப்படிச் செய்வோம்.
இந்தச்சம்பவத்துக்கான ஆரம்பம் சென்னைப் பதிவர் சம்பவத்துடன் ஒரு சிறிய புகைப்படத்துடன் பிலேசபி பிரபாகரன் எதற்கோ போட்டதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை மகேந்திரன் அண்ணா கொடுத்திருந்த போது தரவிறக்கப்பட்ட அந்த குழு என்னவொரு வில்லங்கம் பண்ணுகிறது தெரியுமா?
துக்க வீடுகளில் இப்படி செய்வதால் செத்தவர் உயிர் கிடைத்து விடுமா? இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அஞ்சா சிங்கம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ”அப்படியானால் நீங்கள் போகும் இடம் எல்லாம் சாந்தியும் சமாதானமும் நிலவுக” என்கிறீர்களே நீங்கள் சொன்னதும் அப்படியே நடக்குமா?” என்றதற்கு யாருமே பதிலளிக்கவில்லை.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் மூடநம்பிக்கை என்பது வேறு, பண்பாடு என்பது வேறு. இதையே ஒரு வேற்று மொழிக்காரன் சொல்லிருந்தால் பேசாமல் விட்டு விட்டு போகலாம். இல்லாவிடில் நீங்கள் அரபையோ அல்லது உருதையோ பேசிக் கொண்டு சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்களே பேசும் ஒரு மொழியின் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் தகுதி உங்களுக்கு துளி கூட வழங்கப்படவில்லை. எத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் தமிழுக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைக்கிறார்கள் என்பது தெரியுமா?
இன்று கூட இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கான அதிகளவு நூலை எழுதியவர் கூட ஒரு இஸ்லாமிய ஆசான் தான்.
அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகளே உங்கள் மதப்பரப்பல் மொக்கதை் தனத்துக்காக உங்கள் இனத்தவரின் உழைப்பையே கேள்விக்கிடமாக்காதீர்கள்.

இப்படி நீங்கள் செய்வதால் எங்கள் பண்பாடு என்றைக்குமே சீர்குலையாது. 1050 வருசமாக ஆடும் உங்களுக்கு இந்தளவு தார்ப்பரியம் என்றால் இதை விட பல மடங்கு தார்ப்பரியம் கொண்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
படங்கள் - நன்றி கூகுல்
.....................................................................................


முஸ்லிம் மதவாதிகள் அரேபியாவின் கலாசாரத்தையும், அங்கு செய்யப்படும் பழக்கங்களையும் தூக்கிப்பிடித்து அவை மட்டுமே கடவுளுக்கு உகந்தது என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல. இவர்களுக்கு மொழிப்பற்று,இனப்பற்று,குடும்பப்பற்று போன்றவைகளைவிட மதப்பற்று ஒன்றே பிரதானம்.தமிழை வெறுப்பார்கள்.ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டார்கள். (காரணம் பெரும்பான்மையான தமிழர்கள் இந்துக்களாக இருப்பதால்).ஒரு மண்ணின் பண்பாட்டை நக்கலடிக்கும் இந்த வினோத மதவெறியர்கள் உலகின் எந்த மக்களின் பண்பாட்டையும் விரும்பமாட்டார்கள்.இவர்களின் மனம் பூரா இருப்பது மதம் மட்டுமே.மதத்தால் நிறைந்த மனிதர்கள்.இப்படி இல்லாமல் இருக்கும் இயல்பான முஸ்லிம்களை இவர்கள் ஒரு முஸ்லிம் என்றே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு இஸ்லாமிய பதிவாளர் எ ஆர் ரகுமான் இசை அமைப்பதை கடுமையாக் சாடி இது அல்லாவுக்கு பிடிக்காத ஒரு தொழில் என்றும் ரகுமான் இசை துறையை விட்டு விலகி அல்லாவுக்கு விருப்பமானதை செய்ய வேண்டும் என்றும் எழுதிஉள்ளார். உலகமே இஸ்லாமிய மயமாக ஆக வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம். இப்படி எழுதும் இஸ்லாமிய பதிவர்களை ஓரம் கட்டினால் நல்லது.

No comments:

Post a Comment