Thursday 5 March 2015

பேருந்தில் காதல்..

கல்லூரியில் படிக்கும் போது நிறைய நண்பர்களுக்கு காதலிகள் உண்டு அவர்கள் சந்திக்கும் இடமோ பேருந்துதான். இன்று காதலிக்கும் காதலர்களுக்கு உள்ள தைரியம் அன்று இல்லை சுமார் 15 வருடம் பின்னோக்கி பார்த்தால் அப்போது கல்லூரியில் காதல் என்பது குறைவுதான் எனக்குத் தெரிய பெண்ணிடம் பேசாமல் காதல் செய்து பயத்தால் சொல்லாமல் இருந்தவர்கள் தான் அதிகம்.

தினமும் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில்தான் வருவேன் இன்று ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால் வண்டியை ஸ்டேன்டில் போட்டு விட்டு சொகுசு பேருந்தில் பயணம் செய்தேன். அதுவும் கோவை மாநகரத்தில் இப்ப நிறைய விட்டுட்டாங்க உண்மையிலேயே சொகுசாதான் இருந்தது. ஒரு பெண் டிக்கெட் வாங்குங்க என ஒருவனிடம் பணம் கொடுத்தால் அதை வாங்க

நம்ம பசங்க அடிச்சிக்கறாங்க.. டேய் நான் வாங்கற நீ வாங்கற என்று. நாடு எவ்வளவுதான் வளர்ச்சிப்பாதையில் சென்றாலும் இன்டெர்நெட், மொபைல், பேஸ்புக், ஆர்குட் என எது வந்தாலும் இந்த பேருந்து காதல் சுகம் கொஞ்சம் சுகந்தான்.

பார்க்காத காதல், பழகிய காதல், நட்பு காதல் என பல வகை காதல் இருந்த போதிலும் இந்த பேருந்து காதல் நம் பதிவர்களில் பல பேருக்கு அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்.
நான் முதன் முதலில் 6ம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் போது பஸ்ஸில் தான் செல்வேன் அப்போது எல்லாம் பின் படிக்கட்டில் தான் ஏறுவேன். அதனால சைட் அடிக்கவும் முடியல, லவ் பண்ணவும் முடியல. என் குறும்பு கொஞ்சம் அதிகமானதால் என்னை கோபியில் விடுதியில் சேர்த்துவிட்டனர். அப்புறம் கல்லூரி செல்லும் போது தான் பேருந்தில் தினமும் முன் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தொங்கினாலும் யாரும் என்னை லவ் பண்ணல என்ன பன்றது நா கொடுத்து வைத்தது அவ்வளவுதான். தினமும் பேருந்தில் செல்லும் போது என் நண்பன் ஒரு பொண்ண காதலிச்சான் (ஒன் சைடு தான்) நம்ம ஆளு அந்தப் பொண்ணு இவனப்பார்க்க மாமாவ (கண்டக்டர், டிரைவருக்கு பசங்க அன்பா இப்படித்தான் கூப்பிடுவாங்க) ஐஸ் வைச்சுக்குவான் அப்பதான் முன்னாடி படியில் ஏறமுடியும், டிக்கெட் கொடுக்கற சாக்கில் பேசமுடியும், தினமும் பேருந்தில் பாடும் அனைத்து பாட்டுக்கலும் காதல் பாட்டுக்கல் தான் இதுல ஒருத்தன் அவ ஆள் கூட சண்டைனா உடனே அடுத்த நாள் சோகப்பாடலாப் பாடும்.
இவனுக காதலிக்கரத விட செய்யற சேட்டைய நான் தினமும் ரசிப்பேன் (வேற என்ன செய்ய முடியும்), இந்த பேருந்து காதலைப் பொறுத்தமட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து தினமும் ஒரே பேருந்தில் இருவரும் வந்து காதல் பாடல்களாக பாடவிட்டு அந்தப் பொண்ணிடம் பேசும் போது ஒரு வருடம் முடிந்து விடும். அடுத்த வருடம் இதே கதை தான் அப்புறம் கொஞ்சநாள் கழித்த அந்த பெண் பேருந்தில் ரெகுலராக வருபவர்களிடம் அண்ணா இந்தாங்க என் கல்யாணப் பத்திரிக்கை நீங்க கண்டிப்ப வரணும் என கொடுப்பாள் நம்ம ஆள் சோகம் ஆகிவிடுவான். அடுத்த நாள் புதுசா ஒரு பொண்ணு வர ஆரம்பிச்சிட்டா மீண்டும் அதே கதைதான் அந்த கால கட்டத்தில் காதலை பேருந்தில் சொன்னவர்கள் அதிகமில்லை ஆனால் கல்லூரி போகும் போது காதலிப்பவர்கள் பேருந்து காதலராகத்தான் இருப்பார்கள்.(எங்க ஊர்ல இருபாலரும் படிக்கும் கல்லூரி அதிகம் இல்லை அப்ப பெண்கள் கல்லூயில் தான் கூட்டம் இருக்கும்).
தினமும் வரும் பெண்களிடம் பேசுவதற்காகவே நம்ம ஆளுக ஆரம்பித்தது தான் பேருந்து தினம் அன்றைக்கு யார் வேண்டுமானலும் யார்கிட்ட வேண்டுமானலும் பேசிக்கொள்ளலாம் நம்ம ஆளுங்க சைக்கிள் கேப்ல அன்னைக்கு லவ்வ சொல்லிடுவானுக அப்புறம் கொண்டாட்டம் தான்...
பேருந்தில் செல்லும் எல்லா நாளுமே ஒரு சுகமான நாட்கள் தான் ஆனால் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருந்திருக்கும் அதனால் இதை தொடர் பதிவாக நினைக்கிறேன்.
இத்தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என யோசித்து நம் நட்புக்கள்  ஒவ்வொருத்தருக்கும் நிச்சயமாக பேருந்தில் காதல் அனுபவம் இருக்கும் அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் ஒரு 10 பேரை இப்போது அழைக்கிறேன்.

பிரபாகர்
பலாபட்டறை ஷங்கர்
சித்ரா
திவ்யாஹரி
டி.வி.இராதாகிருஷ்ணன்
வீடு திரும்பல் மோகன்
வித்யா
பனித்துளி சங்கர்
கண்ணகி
தீபா
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment