Saturday 14 March 2015

"மாவீரன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?" என்று ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்

கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்பு பட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுதியிருந்தேன் .
சரி தென் அமெரிக்க நாஸ்கா மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் விமானங்களைப் பாவித்தனரா என்றும் , அதற்கான ஆதரங்களையும் சற்று ஆராய்வோம் .
(ஆய்வாளர் நிராஜ் டேவிட் அவர்களின் ஆக்கத்தைத் தழுவி பயணிக்கின்றேன் )
தென்னமெரிக்க நாடான இன்றைய பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனம் என்றொரு பாலைவனம் அமைந்துள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுப்பகுதியில் ,

சாதாரணத் தரைப்பகுதியில் இருந்து பலநூறு மயில்களுக்கு அப்பால் அதாவது இலகுவில் மனிதர்களால் சென்றடைய முடியாத பாலைவனத்தின் உள்ளே ஒரு பாறைகளால் ஆன மலைத்தொடர் காணப்படுகிறது .
இந்தப் பாறைகளால் ஆன நீண்ட மலையைச் சீர்செய்து அதாவது மட்டமாக வெட்டி 500 சதுர கி மீ பரப்பளவில் ஒரு இறங்குதளம் போன்ற சதுர வடிவிலான தளமொன்று அமைக்கப்பட்டுள்ளது . இத்தளத்தில் 23 கிமீ ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு தளத்தை இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கூட அமைப்பது என்பது மிகவும் சவாலானது என்று கூறப்படுகிறது.
இந்த சதுர வடிவ 500 கிமீ பரப்பளவுள்ள தளத்தில் பல மையில்கள் நீளமான கோடுகள் வரையப்பட்டுள்ளது . இக்கோடுகள் பறையைத் துளையிட்டு சிலிக்கன் துகள்களால் நிரப்பி வரையப்பட்டுள்ளது . எனவே இக்கோடுகள் வானிலிருந்து பார்க்கும்போதும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. தவிர இக்கோடுகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது .
இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இவை விமானிகளுக்கு வழிகாட்டும் குறியீடுகளாக (signals ) இருக்கலாம்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள்
விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.
இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.
இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது.காரணம் இச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உதைப்பந்தாட்ட மைதானம் அளவுக்குப் பெரியவை . இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.
ஆக இந்தத் தளம் நாஸ்கா மக்களின் விமானம் இறங்குதலமாகவே இருக்க சாத்தியமுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .அப்படியாயின் அவர்களிடம் விமானமும் இருந்திருக்க வேண்டுமல்லவா ?
அதுபற்றி அடுத்தப் பதிவில் ஆராய்வோம் .
இந்தப்பகுதியை ஆய்வு செய்ய பெரு அரசாங்கம் தடை விதித்து விட்டது. . இந்தப் பகுதியை தங்கள் நாட்டு மக்கள் புனிதப் பிரதேசமாகப் பார்ப்பதால் ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பேரு அரசு கூறினாலும், உண்மையில் மேலை நாட்டவர்கள் ஆய்வு என்று புகுந்து ஆய்வு செய்துவிட்டு , எவ்வளவு விசயங்களை வெளியிட வேண்டுமோ அவ்வளவை மட்டுமே வெளியிட்டு விட்டு , முக்கியமான இரகசியங்களை வெளியிடாமல் திருடிக்கொள்வது வழமை.
உதாரணமாக மாயன்களின் நாகரீகம் , சுமேரிய நாகரிகம் , எகிப்திய , பாபிலோனிய நாகரீகங்கள் , சிந்துவெளி நாகரீகம் , ஆரியர் நாகரிகம் , கிரேக்கர்களின் நாகரீகம் என்று எல்லா நாகரீகங்களையும் ஆராய்ந்து அங்கிருந்து திருடிய இரகசியங்களைக் கொண்டே இன்று இலுமனாட்டிகளால் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.
இவற்றையெல்லாம் பெரு அரசு நன்றாக அறிந்து வைத்துள்ளது.






No comments:

Post a Comment