Tuesday 14 April 2015

இஸ்லாமியர்கள் இலட்சக்கணக்கில் கிறிஸ்தவர்களாகும் ஆனந்தமான ஆதார செய்தி


உலக முழுவதிலும் உள்ள திருச்சபைகளில் இந்த வருடம் கடந்த சில வருடங்களாக ஆண்டவருடைய உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட புதிதாக இலட்சக்கணக்கான மக்கள் சேர்ந்து ஆராதித்து உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்களெல்லாரும் கிறிஸ்தவர்களல்ல, ஏனென்றால் அவர்களெல்லாரும் மசூதிக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
ஆம், தேவன் இந்த கடைசி காலத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடையே வல்லமையான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறுத்து பேச இயலாத ஆதாரத்துடன் காண்கையில் உள்ளம் பேரானந்தம் கொள்ளாமல் இல்லையே.

இஸ்லாம் வாட்ச் (ISLAM WATCH) என்ற இணைய தளத்தின் செய்திப்படி கடந்த வருடம் 2010 ல் மட்டும் ரஷ்யாவில் இரண்டு மில்லியன் பாரம்பரியமிக்க இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறியுள்ளனர். மேலும் 10,000 பிரஞ்சு(FRANCE) இஸ்லாமியர்களும் துருக்கிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவத்திற்கு மாறியுள்ளனர். ஏறத்தாழ ஒரு லட்சம் இந்திய இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எப்பிசெண்டர்(EPICENTER) என்னும் புஸ்தகத்தின் ஆசிரியர் ஜோயல் ரோஸன்பர்க்(JOEL ROSENBERG), இவர் தன்னுடைய புஸ்தகத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவரும் ஆச்சர்யமான செய்திகளை கூறியுள்ளார். அதென்னவென்றால் அல்ஜீரியாவில் சில வருடங்களாக 80,000 த்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். இதன் காரணமாக இஸ்லாமிய தலைவர்கள் இதை கண்டித்து அவர்கள் சுவிசேஷத்தை எதிர்த்து சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். மொராக்கோவில் உள்ள ஒரு செய்திதாள் வெளியிட்ட செய்தி என்னவென்றால் 95,000த்திலிருந்து 1,20,000 இஸ்லாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் அதிகக் காரியங்கள் நடந்துள்ளது. அதென்னவென்றால் 1996 ம் ஆண்டு மத்திய கிழக்கில் எகிப்து வேதாகம சங்கத்தில் “இயேசு” என்ற வீடியோ பேழை(Video Cd) 3000 சீடிகள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் 2000 ம் ஆண்டில்  ஆச்சர்யமாக அது ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
1990 ம் ஆண்டிலிருந்தே சூடானில் 20 மில்லியன் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சூடான் அரசாங்கம் கிறிஸ்தவத்தை பயங்கரமாக எதிர்த்தது.
இஸ்லாம் வாட்ச் என்ற இணையதளம் கூறுவதாவது, ஈராக்கில் மட்டும் 85,000 ற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறியுள்ளனர்.
2001-ம் ஆண்டு ஷேக் அகமது அல் கத்தானி, சவுதி தலைவர்களில் இவரும் ஒருவர், இவர் ஒரு செய்தியை அல் ஜெசீரா தொலைக்காட்சியில் கூறியதாவது ஒவ்வொரு நாளும் 16000 முஸ்லீமள் கிறிஸ்தவர்களாக மாறி வருகின்றனர், ஒவ்வொரு வருடமும் ஆறு மில்லியன் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறி வருவதாக மிகவும் உக்கிர கோபத்துடன் செய்தி வெளியிட்டு உள்ளார். எது எப்படியோ நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கிடையே கர்த்தர் ஒரு அசைவை நடத்தி வருகிறார். இஸ்மவேலின் வம்சத்திடையே கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் மகத்துவம் வெளிப்பட்டு வருகிறது, இந்த கடைசி காலத்தில் அந்த ஜனங்களையும் கர்த்தர் தாம் நேசிப்பதை வெளிப்படுத்தி வருகிறார், அல்லேலூயா, கர்த்தருக்கே மகிமை.

No comments:

Post a Comment