Wednesday 1 April 2015

இந்து மதம் என்பது மானுடத்தை உய்விக்க

இந்து மதம் என்பது மானுடத்தை உய்விக்க வந்த ஒரு உண்மை மதம்.
அதன் தத்துவங்கள் எல்லாமே அ(றி)வியலுக்குட்பட்டது.

அவற்றை படிப்படியாக இங்கு நான் உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.
தினமும் நீங்கள் உட்கொள்வதற்கு இந்த அவியல் பயன்படும் என நான் எண்ணுகிறேன்.

இந்து மதத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காகவே சொல்லப்ப்பட்டது.
இதைப் புரிந்து கொள்ல எல்லாராலும் முடியாது.
உண்மைப் பக்தியும் ஆண்மீக அனுபவமும் உள்ளவர் மட்டுமே இதை புரிந்து கொள்வார்கள்.

முதலில் இந்துமதக் கடவுளர்களுகு நான்கு கைகள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா....?

இந்த விசயத்தை ம்யூட்டேசன் என்னும் ரீதியில் ஒரு பதிவர் எமது கள்த்தில் தரக்குறைவாக எழுதியிருந்தார்.
அப்படிப்பட்ட அறிவிலிகளுக்கெல்லாம் இதன் அர்த்தங்கள் புரியப் போவது இல்லை.
உண்மையில் இந்து மதக் கடவுளர்க்கு நான்கு கைகள் நான்கு திசைகளையும் குறிக்கிறது.
அதாவது இறைவன் நான்கு திசைகளிலும் நிறைந்து இருக்கிறான் என்பதை குறியீடாக அது சொல்கிறது.

இப்போது நீங்கள் ஏன் முருகனுக்கு பன்னிரண்டு கைகள் என்றுகேட்கலாம் .
அது நான்கு பிரதான திசைகளுடன், உபதிசைகளான எட்டுத் திசைகளையும் குறிக்கும்.

இதிலிருந்து முருகன் மிகவும் நுண்ணியமாக எம்மைக் கவணித்துக் காத்துவருகிறான் என்பது தெளிவாகும்.

இப்படிப்பட்ட அறிவியல் கருத்துகளை மேலும் தொடர்ந்து எழுதலாம் என நினைக்கிறேன்.
அதற்கு உங்கள் ஆதரவு தேவை. உங்கள் பதில்களிலிருந்து அதை நான் தெரிந்து கொள்வேன்.

தினமும் ஒரு அவியல் தொடரும் வரை......... 

No comments:

Post a Comment