Monday 5 October 2015

சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள்

சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள் மாமேதைக்கும் இந்துமத ஆன்மிக வாதியும் உலக அமைதிக்கும் போறாடும் ரவிசங்கர் குருஜிக்கும்  இடையில் “கடவுள் கோட்பாடு”  எனும்  தலைப்பில் நடைபெற்ற விவாதத்தை பார்த்து இருப்பீர்கள்.

இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி  இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை.  இதனை அறியாத பைத்தியக்கார  கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர்.




இப்படி எத்தனை பொய்யத்தான் சொல்லி மதம் மாற்றி இருப்பார்களோ தெரியல. அதர்மம் தலை தோங்கும் இடத்தில் தர்மம் நிலை காக்கும் என்றத்துக்கு அமைய சாகீர் நாயருக்கு "செருப்படி" கொடுக்கும் பதிவாக இது காணப்படுகின்றது. இப்படி பொய்யை சொல்லி மதம் மாற்றுபவர்கள் தான் இவ்வுலகில் நிறைய பேர். உமக்கு தைரியம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் அதை விரும்பி மதம் மாறட்டும். இப்படி பொய் சொல்லி வெக்கம் கெட்டு மதம் மாற்றுகின்ற அவசியம் உமக்கு அழகல்ல எமக்கும் அவசியம் இல்லை.

விடயத்துக்கு வருவோம்

சமய உட்கட்சி மனப்பான்மையோ அடிப்படையான தனிக் கருத்துப்போக்கோ அற்றதுதான் சனாதன தர்மம். கிரிஸ்துவம், இஸ்லாம்  போல் சனாதன தர்மம்.ஒரு சமயக் கோட்பாடு இல்லை. அடிப்படையில்,  அது  எல்லையற்ற ஆன்மீகத்தை உட்படுத்திய  நன்நெறியும், பயன் வள மதிப்பும்  கொண்டது.  எல்லையற்ற ஆன்மீகத்தை ஏற்கும் எந்ததொரு வழியையும், ஆன்மீக நோக்கையும்  சனாதனதர்மத்தின் ஒரு கூறு எனலாம். சனாதன தர்மமானது முதலில் அனாதியும்  (அதாவது ஆரம்பம் இல்லாதது)  அபுருஷேயும்  (அதாவது மனிதரால் உண்டாக்கப்படாடது). அதை  நிர்ணயிப்பது  பிரபஞ்ச  தேடுதலில் காணும் உண்மை.  இயற்பொருள் சார்ந்த தேடல் அறிவியலுக்கு இட்டு செல்லுதல் போல  இதை பற்றிய புரதான  செய்திகளை,  ரிக்வேதாவில்  ரிஷிகள்  தங்களால் இயன்ற மட்டும்,  மனிதனுக்கும்  அண்டத்துக்கும் உள்ள பந்தத்தை  பற்றிய உண்மைகளை  கண்டறிந்து பதிவு செய்தனர். அவர்கள் இயற்கையை - உயிர் உள்ளதும் உயிரற்றதுமானவற்றை - கண்டனர்.  இவை பிரபஞ்சத்தின் ஒரே கூர்தான், ஒரு உயர் விழிப்பு நிலை ஊடுருவல்தான்  என்றறிந்தனர்.   சரித்திரதில், இந்த தேடலுக்கு துவக்கமோ, அதை தோற்றுவித்தவரோ இல்லை.


இணையத்தில் சனாதன தர்மத்தை தேடும்போது  இணைய கருத்தரங்குகளில்   நாஸ்திகர்கள், கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ  மதமாற்ற  ஊழியர்களை எதிர்கொள்ள நேரும்.    அவர்கள் இலக்கு  ஒரு பில்லியன் இந்துக்களை தம் மத மீது நம்பிக்கை இழக்க வைத்து, அவர்கள் மதம்தான் உண்மையானது  அவர்கள் கூறும் செய்திதான் இறுதியானது  என்று நம்ப வைத்து இந்துக்களை தங்கள் மதத்திற்கு இழுப்பது.

“Dharmo Rakshati Rakshita”
வேத நூல்களில் அவ்வளவு பாண்டித்தியம் இல்லாததால் அவர்கள் மற்ற மதங்களுக்கு இரையாகின்றனர். ஒரு ஹிந்து என்கிற கடபாட்டில் நம் நம்பும் "தர்ம ரக்ஷதி ரக்ஷிதா" (Dharmo Rakshati Rakshita) என்கிற  தர்மத்தை காக்க வேண்டியது நம் பொறுப்பு.
நம் தர்மத்தின் பாதுகாப்பில்தான் நம் பாதுகாப்பு உள்ளது.


ஜாகிர் நாய்க் உபநிஷத்தின் சில வாசகங்களுக்கு எப்படி மாற்றீடு  கொடுத்துள்ளார் என்பதை பாருங்கள்.

"ஹிந்து" என்கிற சொல்லுக்கு  ஜாகிர் நாய்க் கொடுக்கும் விளக்கத்தை பார்போம்.

ஜாகிர் நாய்க் : "ஹிந்து" என்பது ஒரு பாரசீக சொல். அது சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களை குறிக்கும்.

உண்மை: இந்து (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. (உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.

செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரகாஸ்பதி ஆகமத்தில்
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।

ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..

பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.

ஆதாரம்:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

ஜாகிர் நாய்க் அவர்களே, இந்து வேதங்களை தயவு செய்து முதலில் படியுங்கள்.

ஜாகிர் நாயக்: "ஏகம் ஏவம் அத்விதயம்"
பொருள்: அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)

உண்மை: "ஏகம் ஏவம் அத்விதயம் பிரம்மா"
பொருள்:  பிரமன் ஒருவனே, ஒருவனேயன்றி வேறில்லை.
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)

அவன் நிகரில்லாத ஒருவனே. தயவு செய்து சரியான வாசகத்தை முழுதாக இடவும். அத்தோடு அவனை "பிரமன்" என்று குறிப்பிடவும்.

ஜாகிர் நாய்க்:  “Na casya kascij janita na cadhipah.”
பொருள்: அவனுக்கு பெற்றோர்களோ ஆண்டவனோ இல்லை.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)

உண்மை:  “na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ
                         sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ”
பொருள்: அவனுக்கு இவ்வுலகில் தலைவனோ  ஆட்சியாளனோ போன்ற அதிகாரம் செலுத்தும் யாரும் கிடையாது. அவனே மூலகாரணம்,  அவனே உறுப்புகளின் தலையாயவன்.  அவனுக்கு மூதாதையரோ,  கட்டளையிடுவோரோ இல்லாதவன். அவனுக்கு எந்த சின்னமும் இல்லை. எந்த சின்னத்தையும் கொண்டு அவனை குறிக்க வேண்டாம்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)

ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் அறிவுரை  கூறுகிறோம்  முழு வாசகத்தையும் பயன்படுத்தவும்.

ஜாகிர் நாயிக்:  “Na tasya pratima asti”
பொருள்: அவனை போல் உருவமில்லை
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)

உண்மை:  “nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ”

பொருள்: மேலிருந்தோ, பக்கமிருந்தோ நடுவிலிரிந்தோ அவனை யாரும் பிடிக்க முடியாது. அவனை போல் உருவமில்லை. அவன் நாமம் மகா கீர்த்தி. (Mahad Yasah).
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)

ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் அறிவுரை  கூறுகிறோம்  மகாத் யசாவில்  உள்ள வாசகங்களையும் அப்படியே கூறவும். மகாத் யசாவின் பெயரையும் சொல்லவும்.

ஜாகிர் நாய்க்   “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.”
பொருள்: அவன் உருவம் தெரியாது. யாரும் அவனை தம் கண்ணால் காண முடியாது.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)

உண்மை: “na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti “
பொருள்: அவன் உருவம் காண்பதற்கான பொருள் அல்ல. யாரும் அவனை கண்ணால் காண முடியாது.  கூர்மையான  அறிவாற்றலும்,  ஆழ்ந்த சிந்தனை தரும் ஒருமித்த ஞானமும் கொண்டோர் அவன் நெஞ்சத்தில் குடி இருப்பதை உணர்ந்து மரணமில்லாமல் வாழ்வர்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)

முழு வாசகத்தையும் மேற்கோள் காட்டி உண்மையை வெளிபடுத்தவும்.

ஜாகிர் நாய்க் முழு வாசகங்களை மேற்கோள் காட்ட மாட்டார். அப்படி செய்தால் அவருடைய ஆதரவாளர்களை அவர் இழந்து விடுவார் ஏனென்றால் முழு வாசகங்கள் அவருடைய மதத்திற்கு எதிராக இருக்கும்.

சனாதன தர்மபடி  வாழ்பவர்களே,  இந்த ஜாகிர் நாயக்கை தூற்ற வேண்டாம். அவர்போலுள்ள மனிதர்கள் என்ன செய்வார்களோ அதைதான் அவர் செய்கிறார், அதாவது அதுதான் அவர் பணி. நம் கடமை அவர் பரப்பும் பொய்களை களைவது.  இந்த ஏமாற்று ஆசாமியின் முகத்திரையை கிழிப்பதற்கும், நம் சனாதன தர்மத்தை பரப்புவதற்கும்  நாம் வேதங்களை நன்கு கற்க வேண்டும்.

”தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ” அதாவது தருமத்தின் பாதுகாப்பே நமது பாதுகாப்பாகும்.

ஜாகீர் நாயக்: “நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி”
பொருள்: அவனுக்கு(இறைவனுக்கு) உருவம் கிடையாது
(யஜூர் வேதம் 32:3:5)

உண்மை: ”நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம் மஹாத்யாஷ்
ஹிரண்யகர்ப் இதெஷ்ய மா மா ஹின்ஸிடித்யேஷ்ய யாஷ்மன்ன ஜத் இதேஷா”

பொருள்: "ஹிரண்யகர்ப், யஸ்மான்ன ஜட், மா மா ஹின்சிட்" போன்ற வாசகங்களில் முதன்மையான  கடவுளின்  பெயரும் புகழும் அதிகமானவை. ஆனால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை - (இதன் பொருள் - கடவுளுக்கு எந்த குறிப்பிட்ட கட்டமைப்பும் இல்லை ஆனால் உன்னுடைய தியான ஆற்றல் மூலம் அந்த கட்டமைப்பை உணரலாம். (இங்கே பிரதிமா என்கிற சொல் பிம்பத்தை குறிப்பது இல்லை கட்டமைப்பை குறிக்கின்றது)
(யஜூர் வேதம் 32:3:5)

ஜாகீர் நாயக்: “ ஷுதம போவாவிதம்”
பொருள்: அவன் உடம்பில்லாதவன், பரிசுத்தமானவன்
(யஜூர் வேதம் 40:8:6)

உண்மை: “ஸ பர்யகாசுக்ரம்கயம்வ்ரன்மஸ்னவீர் ஷுத்தம்பப்வித்தம் கவிர்மனிஷி பரிபுஹ் ஸ்வயம்புர்யதட்த்யடொர்தான் வ்யட்ஜச்ஹாஷ்வடிப்யாஹ் ஸமப்யாஹ்”

அவன் எங்கும் வியாபித்துள்ளான், அற்புதமானவன். அவனுக்கு உடம்பில்லை. நரம்பில்லை. தோல் துவாரங்கள் இல்லை. அவன் பரிசுத்தமானவன் பாவமற்றவன். அவன் கவிஞன் (இங்கே கவிஞன் என்பது அவன் நினைக்கிற எதையும் உருவாக முடியும் என்று பொருள்) அவனே மொழி  ( சொற்கள் உதிக்கும் மனதை ஆட்சி செய்பவன்), வெற்றியாளன், தானே சிருஷ்டிதுக்கொண்டவன்(ள்). காலம் துவங்கியதிலிரித்து எல்லோரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தகுதியானவன்.
(யஜூர் வேதம் 40:8:6)

ஜாகீர் நாயக்: “அந்தடம ப்ரவிஷாந்தி யெ அசும்பூதி முபஸ்தே”
பொருள்: இயற்கையை(நீர்,நிலம், நெருப்பு போன்றவை) வணங்குபவர்கள் இருட்டிற்கு செல்கின்றனர். சம்பூதிகளை வணங்குபவர்கள் மேலும் ஆழ்ந்த இருட்டிற்கு செல்கின்றனர்.
குறிப்பு: சம்பூதி என்பது உருவாக்கப்படும் பொருள். எ-கா: மேஜை, நாற்காலி, சிலை போன்றவை.
(யஜூர் வேதம் 40:9:7)

உண்மை: “அந்தம் தமஹ ப்ர விஷாந்தி யேஷம்பூதியுபஸ்தே
த்தோ புய இவ தே தமோ ய ஓ சம்புத்யம் ரத”
பொருள்: எவரெல்லாம் பிரிவுகளையும் அழிவுகளையும் வணங்குகிறார்களோ, அதை மட்டுமே விளையாட்டாக செய்கிறார்களோ, அவர்கள் இருட்டிற்கு (இருட்டு என்பது அறியாமை)  செல்கிறார்கள். அந்த அறியாமையில் மூழ்கி அதில் உருவாக்கப்படும் பொருட்களை வணங்குகிறவர்கள் மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர்.
(யஜூர் வேதம் 40:9:7)

குறிப்பு: இங்கு வழிபாடு என்பது எப்போதும் பக்தியில் மூழ்கி இருப்பதாகும். சம்பூதி என்றால் கூடுவது,  அசம்பூதி என்பது பிரிவு மற்றும் புறவாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்க மறுப்பதாகும். இங்கே எங்கேயும்  இயற்கை (காற்று, தண்ணீர், அக்னி போன்றவை) வணக்கம் பற்றி சொல்லவே இல்லை.

ஜாகீர் நாயக்: யசூர் வேதத்தில்  இந்த வாசகம் உள்ளது. "நம்மை நல்ல பாதையில் அழைத்து செல். தப்பான பாதையில் சென்று குழம்புவதற்கு காரணமாக இருக்கும் பாவத்தை நீக்குவாயாக."
(யஜூர் வேதம் 40:16:8)

உண்மை: "அக்னே நய சுபத ராய அஸ்மன்விஷ்வாணி தேவ்வாயுனானி வித்வான"
பொருள்: இறைவனே!! எங்களது அனைத்து செயல்களும் உங்களுக்கு தெரியும். தயவு கூர்ந்து எங்களை நல்வழிப்படுத்தி , வளமான ஆன்மீக பாதையில் எங்களை இட்டுச்செல்வாயாக..
(யஜூர் வேதம் 40:16:8)

ஜாகிர் நாய்க்: “Dev maha osi”
பொருள்: "கடவுள் மகத்தானவர்"
(அதர்வண வேதம் 20:58:3:9)

The truth: baṇ mahāṃ asi sūrya baḍ āditya mahāṃ asi
mahas te sato mahimā panasyate ‘ddhā deva mahāṃ asi .
உண்மையாக. இறைவனே! நீ உண்மையில் மகத்துவம் வாய்ந்தவன்.  ஆதித்ய நீ மகா வல்லவன், கடவுளே!

(அதர்வண வேதம் 20:58:3:9)

ஜாகிர் நாய்க்: ரிக் வேதத்தில் சொல்லபடுவது  "ரிஷிகள் (வேத பண்டிதரர்கள்)  இறைவனை பல  பெயர்களில் அழைக்கின்றனர்.
(ரிக் வேதம் 1:164:46)

உண்மை: índram mitráṃ váruṇam agním āhur /
átho divyáḥ sá suparṇó garútmānékaṃ sád víprā bahudhâ vadanty /
agníṃ yamám mātaríśvānam āhuḥ
பொருள்: இந்திரா, மித்ரா, வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யமா, மாட்ரிஷ்வா போன்ற பெயர்கள் அவனுக்கு உண்டு. இறைவன் ஒருவனே. அறிவுள்ளோர் பல பெயர்களில் அழைப்பர்.

(ரிக் வேதம் 1:164:46)

குறிப்பு: மேலே உள்ள வரிக்கு ஜாகிர் நாய்க்   கொடுத்துள்ள மொழிபெயர்ப்பு அந்த வசனத்துக்கான பொருளே கிடையாது என்று தெரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால் ஜாகிர் நாய்க் இந்த வசனத்துக்குக்கு பொருளை கூறினால் அவர் தம்முடைய ஆதரவாளர்களை இழந்துவிடுவார் என்பதற்காக இறைவன் (அல்லாவை தவிர) இந்திரா, மித்ரா வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யம, மாட்ரிஷ்வா போன்ற பெயர்களை பயன்படுத்தவில்லை.
.

ஜாகிர் நாய்க்: அடுத்து பயன்படுத்துவது "பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் தன்மையான படைத்தல், காத்தல் மட்டுமே."
(ரிக் வேதம் 2:1)

மேலே உள்ள பொருளுக்கு ஏன் வசனம் காட்ட வில்லை? பதில் கீழே உள்ள வரியில்.

உண்மை:  tvamaghna indro vṛṣabhaḥ satāmasi tvaṃ viṣṇururughāyo namasyaḥ |
tvaṃ brahmā rayivid brahmaṇas pate tvaṃ vidhartaḥsacase purandhyā ||
வீரனுக்கு வீரனே, அக்னி நீதான், இந்திரன் நீயே, பீடு  நடையுள்ளவனும் பெருமைக்குரியவனும் நீயே, நீயே செல்வமிக்க  பிரமனஸ்பதி, பிரமன். காப்பவனே, உன் ஞானம் கொண்டு எங்களை அருள்வாய்.
(ரிக் வேதம் 2:1)

ஜாகிர் நாய்க்: “Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata"
"அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன்.
(ரிக் வேதம் 8:1:1:10)

உண்மை: mā cidanyad vi śaṃsata sakhāyo mā riṣaṇyata |
indramitstotā vṛṣaṇaṃ sacā sute muhurukthā ca śaṃsata ||
பொருள்: "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். அதனால்  எந்த துயரமும் உங்களை அணுகாது. நீர் (தண்ணீர்) கொட்டும் போது  வல்லமை பொருந்திய இந்திராவை புகழவும். உங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சொல்லவும்.
(ரிக் வேதம் 8:1:1:10)

ஜாகிர் நாய்க் என்ன சொல்ல நினைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இரண்டாவது வரியினை மிகவும் தந்திரமாக மறைத்து முதல் பாடலை மட்டும் காட்டி இருக்கிறார். ஜாகிர் நாய்க், இரண்டு வரியினைமுழுதாக பயன்படுத்த ஏன் பயப்படுகிறீர்கள்?

ஜாகிர் நாய்க்: “Devasya samituk parishtutih”  
பொருள்: உண்மையாக, புனித படைப்பாளனின் பெருமை மகத்துவமே.
(ரிக் வேதம் 5:1:81:11)

உண்மை: yuñjate mana uta yuñjate dhiyo viprā viprasya bṛhato vipaścitaḥ |
vi hotrā dadhe vayunāvid eka in mahī devasya savituḥ pariṣṭutiḥ ||
பொருள்: துதி பாடல்களில் தேர்ச்சிமிக்க அவனுடைய குருமார்கள் ஆன்மாவையும் புனித எண்ணங்களையும் ஒன்று குவிப்பார்கள். அவனுக்கு பணிவிடை ஒன்றே  அவர்களுடைய திருப்பணி.  இறை சவிதாவிற்கு கம்பீர பாராட்டுகள்.
(ரிக் வேதம் 5:1:81:11)

ஜாகிர் நாய்க்: "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
பகவத் கீதை 7:20

வசனம் 7:20 பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு

(அப்துல் கலாம் அவர்களை ஆசீர்வதித்தவருமான சிவானந்தர், வைணவர்கள் போற்றும் இராமானுஜர் இருவரையும் எடுத்துக் கொண்டுள்ளேன்) இவ்வாறு கூறுன்றனர்.

7.20  இந்த ஆசை அந்த ஆசை என்றும், இந்த வழிபாடு அந்த வழிபாடு என்றும், தம் அறிவில் தடுமாறுகிறவர்கள்  இயல்பாகவே மற்ற தெய்வங்களிடம் சேர்வர். (சிவானந்தா)

7.20 இவ்வுலகில் உள்ள எல்லா   மனிதர்களும் ஒரு கட்டுபாட்டில் இயங்குகின்றனர். அதாவது அவர்களுடன்  எப்போதும் கூட இருப்பது, அவர்கள் புற பழக்கங்கள் வழி  ஒட்டிய  குணங்கள் ஏற்படுத்திய வாசனாக்கள் (நுண்மையான பதிவுகள்) அவர்களுக்கு என்னை (கிருஷ்ணன்) பற்றிய அவசியமானவற்றை  அறிந்து கொள்வதனின்று  பல கர்மாக்கள் அவர்களை கொள்ளை இடுகின்றன. இவை வாசனாக்கள் (நுண்மையான பதிவுகள்) போன்று, கர்மாவில் விளைந்து குணங்களால் உருவாகுவது.  இந்திரா போன்ற என்னை (கிருஷ்ணன்) தவிர்த்த தெய்வங்களை வணங்குவோருக்கும்

கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி – ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.

இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
எனவே, இந்த வசனம் அல்லாஹ் என்ற ஏக இறைவனை குறிக்கிறதா என்பதற்கு இதன் தொடர்ச்சியையும், கவனித்தால் அர்த்தம் விளங்கும். அடுத்த வசனமே இதைச் சொல்கிறது:

7.21 எந்த பக்தர் எந்த உருவத்தை பக்தியுடன் வழிபடுகிறாரோ, அந்த பக்தரின் நம்பிக்கையை நானே நிலைக்க செய்வேன். (சிவானந்தா)

7.21 இந்த தேவதைகளும்  என்னுடலிலேயே சாருகின்றன.   ஸ்ருதியில் சொல்லப்பட்டது போல "சூரியனில் குடியிருப்பவனை சூரியனுக்கு தெரியாது, அவன் உடலே சூரியன்."(Br. U., 3.7.9).

எந்த பக்தர் நம்பிக்கையுடன் எந்த உருவில், (இந்திரன் போல்)  என்னை வணங்குகிறாரோ, அவர் அறியாமல் இருந்த போதும், அதை  என்மீது செலுத்தும் பக்தியாக நான் ஏற்றுக்கொண்டு, அவரின் பக்தியை நிலை நாட்டுவேன். (ராமானுஜம்)

7.22 அந்த தீவிர நம்பிக்கையோடு, அந்த மனிதன்  அந்த உருவத்தை வணங்குகிறான். அவன் வேண்டியது கிடைக்கிறது. அதை அளிப்பவன்  நானே. (சிவா நந்தா)

7.22  நம்பிக்கையோடு அவன் இந்திரன் மற்றும் இதர தெய்வங்களையும் தடங்கல் இல்லாமல் வணங்குகிறான். அவன், இந்திரன் மற்றும் இதர தெய்வங்களிடம் வேண்டியது, என் மூலம் கிடைக்கிறது. அவன் வணங்கும் வேளையில் அவனுக்கு தெரியாது இந்திரனும் இதர தெய்வங்களும் என் உடல்தான் என்று. அவர்களை வணங்குவது உண்மையில் என்னை வணங்குவதுதான். அவனுடைய ஆசைகளை நான்தான் நிறைவேற்றுகிறேன். (ராமானுஜ)

எல்லாமே இறைவன் என்பது ஹிந்து மதம்; இறைவனுக்கே எல்லாம் என்பது இஸ்லாம்.

என்று இவர்கள் எழுதுகின்றார்கள். ஆனால், கீதை தெளிவாக 7:19ல் அதையே விளக்குகிறது. அதாவது எல்லாமே பரமாத்மா தான்.

7.19 எண்ணற்ற பிறப்புகளின் இறுதியில், தான்தான் வாசுதேவன் (உள்ளிருக்கும் ஆத்மா) என்பதை உணர்ந்த ஒருவன் என்னிடம் வருவான்.  அம்மாதிரியான மகாத்மாவை காண்பது கடினம்.

இதுவே (எனது புரிதலில்) அத்வைதம். அதாவது காண்பன யாவுமாய் இருப்பது ஏக இறைதான். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் எல்லாமே இறைதான். அதனாலேயே என் முன்னோர்கள் காளஹஸ்தியில் காற்றை வணங்கினார்கள், காஞ்சியில் மண்ணை வணங்கினார்கள், சிதம்பரத்தில் ஆகாயத்தை வணங்கினார்கள். எதை வணங்கினாலும், இறையை வணங்குவதாக எண்ணி, இறை ஞானத்தை வேண்டி வணங்கினால் அவர்கள் இறையை யே வணங்குகின்றார்கள். விருப்பங்களை நிறைவேற்றச் சொல்லி தெய்வங்களை வணங்கும்போதும், அதே இறையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வணங்குகின்றார்கள்.

இங்கே கிருஷ்ணனின் உபதேசத்திற்கும் அல்லாஹ்(வின் பெயரால் முகமது அடித்த ஜல்லியான) ஏகத்துவத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
இந்திரன் முதலான தேவர்களை குறிப்பிட்ட சக்திகளை, செல்வங்களை வேண்டி வணங்கி செய்யப்படும் யாகங்கள், வழிபாடுகளைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறான். பகவத் கீதையில் மற்ற இடங்களிலும் இப்படி இகத்தேவைகளுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறைகள், உண்மையான இறை ஞானத்தை வேண்டி செய்யப்படும் யோகத்துக்கு கீழானவை என்ற உபதேசம் வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் வருகிறது.

ஆனால், இங்கே கூட 'நீ எதை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்' என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறானே தவிர, நீ என்னைத்தவிர (பரமாத்மாவை தவிர) வேறு எதாவது கடவுளை வணங்கினால் உன்னை நரகத்தீயில் இட்டு வாட்டுவேன் என்று சொல்லவில்லை, உன்மீது என் அடியார்கள் ஜிகாத் தொடுப்பார்கள் என்றும் சொல்லவில்லை.

ஜாகிர் நாய்க் தான் ஒரு சமகால சமயங்களின் போதகர் என்று கூறிகொள்கிறார். அப்படியிருக்க, ஏன் அவர் நம் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போது, வாசகங்கள்/வரிகள் முழுதாக பயன் படுத்தாமல் அவர் விருப்பதிற்கேற்ப பகுதிபடுத்தி அவற்றின் பொருள்களை  சிதைக்க வேண்டும்? ஒன்று அவர் திறமையற்றவராக இருக்கவேண்டும், இல்லையேல் அவர் கூச்சமிக்கவராக இருக்க வேண்டும்.



ஜாகிர் நாய்க்கிற்கு ஆலோசனை.

வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள உள்நோக்கத்துடன் கற்கும் நபர்களை அணுக கூடாது. மாறாக, இவர் வேதங்களை, ஒரு தேர்ச்சிபெற்ற ஆன்மீக  வழியில் வந்த குருவிடம் முறையாக கற்க வேண்டும்.

நண்பர்களே, ஜாகிர் நாய்க் தன் தவறான போக்கை அனேகமாக மாற்ற மாட்டார். ஆனால் நம் உண்மை போற்றும், புத்தியுள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள்.  ஜாகிர் நாய்கின் போலியான, விஷமத்தனமான பிரசாரத்தை அப்பாவி மக்கள் நம்பாமல் இருப்பதற்கு இது போன்ற செய்திகளை அவர்களிடையே பரப்ப (share) வேண்டும்.

வாசகத்தின் பாதி வரிகளை பயன்படுத்தினாலும் அதே பொருள்தானே வருகின்றது என்று சொல்வோருக்கு. இஸ்லாமியர்களுடைய குரான் ஸ்லோகங்களே பதிலாகும்.

“இறைவன் என்பவனே இல்லை, அல்லா ஒருவனே இறைவன்; முகமது அவருடைய தூதர் ஆவார்”

இந்த வரியில், முதல் வரியை மட்டும் மேற்கோள் காட்டி “இறைவன் என்பவனே இல்லை” என்று அவர்களால் பிரச்சாரம் செய்ய முடியுமா?

எனவே, இந்து சொந்தங்களே, இவர்களைப்போன்ற பொய்யர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..

இந்த பதிவை எவ்வளவு பேருக்கு சென்றடைய செய்ய முடியுமோ அவ்வளவு முடியுமானவரை கொண்டுசெல்லுங்கள். ஒவ்வொருபேரும் பகிரும் பதிவு சுமார் 100 பேருக்காவது சென்றடைய வேண்டும் அல்லது பொது இடங்களிலும் கோயில்களிலும் கொப்பி பண்ணி கொடுங்கள். அப்போதுதான் முட்டாள் தனமான விவாதங்களையும் பைத்தியங்களையும் குணப்படுத்தி முடியும்.

No comments:

Post a Comment