Saturday 28 March 2015

இறந்த பின் எங்கு செல்கிறோம்?

முற்பிறப்பு நினைவுகள்
எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.
முற்பிறப்பு அனுபவங்கள் நமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் நம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்தைய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது.. பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.
முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக நமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.
அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
Irantha-Pin---18.png
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரைடி மர்ஃபி (Bridey Murphy) என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்று அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன. இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்து சில முற்பிறப்பு சம்பவங்கள் பார்க்கலாம்.


நன்றி ஜீவா அண்ணா, தொடர்ந்து இணையுங்கள்.

இறப்பு என்பது உடல் எனும் இயந்திரம் நின்று விட்டதாக கொள்வதா அல்லது ஆன்மா உடலை விட்டு பிரிந்து வேறெங்கோ செல்வதாக கொள்வதா என்பதில் எனக்கு நிறையவே குழப்பம் உள்ளது.

மரண தறுவாயில் இருக்கும் சிலர் ஏற்கனவே இறந்த தமது உறவுகளின் பெயரை சொல்வார்கள். அதனால் அவர்கள் ஆவி வந்து இவரை அழைக்குதோ என நினைத்ததுண்டு.  :) ஆனால் மரண தறுவாயில் பழைய நினைவுகள் மனதில் சுழலும் என கேள்விப்பட்டிருக்கிறேன். :rolleyes: பழைய சம்பவங்களை நினைக்கும் போது அதில் அவர்கள் பெயர் சம்பந்தப்படுவதால் கூறியிருப்பார்கள் என பின்னர் நினைப்பதுண்டு. :unsure: இதனால் ஆவிகள் இருப்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனால் இல்லை என உறுதியாக கூறவும் முடியவில்லை. :rolleyes:

ஒரு உருவம் தன்னை துரத்திக்கொண்டு வருவதாக எமது குடும்பத்தில் ஒருவர் இறப்பதற்கு சிறிது நேரத்தின் முன் கூறினார் என கேள்விப்பட்டேன். அது உண்மையா அவரின் மன பிரம்மையா என தெரியவில்லை. அதே போல் இறப்பு நடப்பதற்கு முன் நாய்கள் குரைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது தற்செயலாக குரைக்கிறதா அல்லது எதையாவது பார்த்து குரைக்கிறதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

(சில பகுதிகளே வாசித்துள்ளேன். மிகுதியும் வாசித்தால் சிலவேளை இவற்றுக்கு பதில் கிடைக்கலாம்.)

விஞ்ஞான ரீதியாக ஆவிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும்,
தேவகணம் உள்ளவர்கள் "தாம் இறந்தவர்களை ஆவியாக கண்டதாக" கூறினாலும் அதை எந்த அளவில் நம்புவது என தெரியவில்லை. எனவே என்னை பொறுத்தவரை மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதை நான் மரணிக்கும் போது தான் கண்டு கொள்வேன். :unsure:


வர்ணசிறி அதிகாரி என்பவர் 9.11.1957இல் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் பிறந்தான். இவனுக்கு நாலு வயது ஆகும் பொழுது தான்,  கடந்த பிறப்பில் “கிம்புல்கொட” என்ற கிராமத்தில் மஹிபால என்பவருக்கு மகனாயிருந்ததாகவும், அப்பிறப்பில் தனது பெயர் “ஆனந்தா மஹிபால” என்றும் கூறினான். தனது முற்பிறப்பில் நடைபெற்ற சில நகழ்ச்சிகளும், உற்றார், உறவினர், உடைமைகள் ஆகியவற்றின் விபரங்களும் அவனால் கூறப்பட்டு பிறான்சிஸ் ஸ்ரோறி என்பவரால் நுணுக்கமாக விசாரணை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனந்தா மஹிபால 26.10.1926ல் பிறந்து 26.10.1956இல் சடுதியாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்குப் பின்னர் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் வர்ணசிறி பிறந்ததாகக் கூறப்பட்டது.
கண்டியில் இருந்து இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள “உடுபோகவ” என்ற கிராமத்தில் 26.4.1959இல் பிறந்த பெண்குழந்தை “டிஸ்னாசமரசிங்க” என்பவள் ஒன்றரை வயதாகியதும் முற்பிறப்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். மூன்று வயதைத் தாண்டியவுடன் முற்பிற்பு விபரங்களைத் துல்லியமாகத் தெரிவித்தாள். “வெற்றாவ” என்னும் கிராமத்தில் 63வயது வரையிலும் வாழ்ந்து 15.01.1958ல் இறந்து போன “பபானோனா” என்னும் வயோதிக மாது பதினைந்து மாதங்களின் பின் “உடுபோகவ” என்னும் கிராமத்தில் பிறந்த “டிஸ்னாசமரசிங்க” என்பது தக்க ஆய்வுகளின் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் இலங்கை, இந்தியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிறைய இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆசைகள், பாசங்கள் காரணமாகவும் தனி ஒதுக்க (Insular) சிந்தனைகள் காரணமாகவும் மறுபிறப்புகள், முற்பிறப்புக்குத் தொடர்புள்ள சூழலிலேயே, அதே இனம், அதே மொழி பேசுபவர்கள் மத்தியிலும் அண்மித்த கிராமங்களிலும் பெரும்பாலும் நிகழ்வதாகத் தெரிகிறது. அதே நேரம் தூர தேசங்களில் போய் பிறப்பவர்களும் உண்டு. 
அம்பலாங்கொடையில் பிறந்த ரமணி செனிவரத்னா என்ற சிறுமி தான் முற்பிறப்பில் வட இந்தியாவில் மணிப்பூரில் நாட்டியக்காரியாக இருந்ததாகக் கூறினாள். முற்பிறப்பில் அவள் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியாக நாட்டியக் கலையில், குறிப்பாக இந்திய நாட்டியங்களில் அபூர்வமான தேர்ச்சி பெற்றவளாகக் காணப்பட்டாள். நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பார்த்து அதிசயிக்குமளவுக்கு அவள் நாட்டியக் கலையில் திறமைப் பெற்றவளாகத் திகழ்ந்தாள்.
Irantha-Pin---19.png
“இங்கு எப்படி வந்து பிறந்தாய்?”என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவள் “எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆறு இருந்தது. அதில் எனது அண்ணன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு உயரமான பாறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென பாறையில் இருந்து தவறி கீழ் ஒரு கற்குவியல் மீது விழுந்து படுகாயமுற்றேன். பின்னர் வைத்தியசாலைக்கு என்னை எடுத்துச் சென்றது தெரியும். அதன் பின்னர் இங்கு வந்துவிட்டேன்” என்றாள்.
முற்பிறப்பில் இங்கிலாந்து வாசியாக இருந்தவர் இலங்கையில் வந்து பிறந்த நிகழ்ச்சியும் தெரியவந்துள்ளது. கோட்டை (Kotte) யில் பிறந்த “ரஞ்சித் மாலகந்த” என்ற சிறுவன், மூன்றரை வயதை அடைந்தபொழுது தனது முற்பிறப்பு விபரங்களைக் கூற முற்பட்டான். இங்கிலாந்தில் வசித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அந்நாட்டு சீதோஷ்ண நிலை, பழக்க வழக்கங்கள் யாவற்றையும் மூன்றரை வயது சிறுவன் துல்லியமாக விவரித்தான். மேலும் கிறிஸ்தவ மரபில் நாட்ட முள்ளவனாகவும் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் ஆங்கிலேய உணவு வகைகளை விரும்புவனாகவும் அவன் காணப்பட்டான். இலங்கை வானொலியில் ஆங்கில ஒலிபரப்பில் பெண் அறிவிப்பாளரால் செய்திகள் வாசிக்கப்பட்டதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு “இப்படித்தான் எனது மம்மி பேசுவாள்”என்று கூறினான்.
சிலர் பிறவிக்கூறான உருச்சிதைவுகளுடனும் அடையாளங்களுடனும் பிறக்கிறார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் காண இயலாதிருக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் முற்பிறப்பின் சிந்தனையும் உடலும் சார்ந்த (Psychosomatic Reaction) விளைவுகள் எனத் தெரிய வருகின்றது. தாய்லாந்தில், “பிறாசொம்” என்ற புத்தகுரு தனது முற்பிறப்பின் நிகழ்வுகளைத் தெரிவித்தார். இவர் 3.11.1939ல் “பான்சாய்” என்ற கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு மூன்று வயது நிரம்பியவுடன் முற்பிறப்பு விவரங்களைக் கூற ஆரம்பித்தார். “பாக்லாட்” என்ற கிராமத்தில் “நாசொய்” என்ற பெயரில் தான் முற்பிறப்பில் இருந்ததாகவும், தனது 45வது வயதில் ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்திய பொழுது, அவள் கத்தியால் தனது நெஞ்சில் குத்தியதன் விளைவாகத் தான் இறந்து விட்டதாகவும் கூறினார். இவர் பிறந்த பொழுது இவருடைய நெஞ்சில் கத்திக்குத்தினால் ஏற்பட்டது போன்ற ஒரு வடு காணப்பட்டது. பிறாசொம்மின் தாயார் இவர் பிறந்தபொழுது இவருடைய நெஞ்சில் வெட்டுக்காயம் போன்ற ஆறாத புண் ஒன்று காணப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த விவரங்கள் எல்லாம் ஒப்பு நோக்கப்பட்டு சரியாக  இருக்கக் காணப்பட்டன.
முற்பிறப்பில் நமது மனதை பலமாக அழுத்தி ஆக்கிரமித்து இச்சையை அடைவதற்காகவென்றே சில சமயங்களில் நாம் மறுபிறப்பு எடுப்பதுண்டு. பர்மாவிலும் தாய்லாந்திலும் ஆய்வு செய்யப்பட்ட முற்பிறப்பு சம்பவங்கள் பல இதங்கு ஆதாரமாக எடுத்துக் கூறக் கூடியனவகையில் நிகழ்ந்துள்ளன.
முற்பிறப்பில் ஆணாக அல்லது பெண்ணாக இருந்த ஒருவர் அடுத்த பிறப்பில் மாறி பிறக்க வாய்ப்பிருக்கிறதா?
அடுத்து பார்க்கலாம்.



பிறவிக்கூறான உருச்சிதைவுகளுடனும் அடையாளங்களுடனும் குழந்தை பிறக்காது இருப்பதற்கு, விஞ்ஞான ரீதியாகவும் எற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளையும், அதற்கான விளக்கங்களையும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பின்பற்றுவதில்தான் சிரமமுள்ளது. இதனை உணரும்போது பருவம் கடந்து விடுகிறது. பருவம் உள்ளபோது உணருவதற்கு பொறுமை இருப்பதில்லை. பெரும்பாலும், காம உணர்ச்சியின் உச்சத்தின் செயல்பாடே ஆண் பெண்ணை இணைய வைக்கிறது. ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்ற உணர்வோ, உணர்ச்சியோ அங்கு உச்சம் பெறுவதில்லை. குறைபாடுகளுடன் பிறப்பதற்கு முற்பிறப்பின் செயற்பாடுகள் என்று காரணம்காட்டிச் சமாதானம் அடைவதை, இயலாமையின் செயற்பாடு எனவும் வாதிடலாம். 


மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

மனிதர்களில் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக வருந்துபவர்களோ அல்லது ஆணாகப்பிறந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதோ சிலர் துயர்தரும் சம்பவங்களின் போது “பெண்ணாக ஏன் பிறந்தோம்” என்று நினைத்தாலும், பெண்ணாகப் பிறந்ததற்காக தன்னையே நொந்து கொள்பவர்கள் வெகுசிலரே. பெண்ணாகப் பிறந்ததால் பல நன்மைகளும் உண்டு. ஆணாகப் பிறந்தவர்களுக்குப் பலகஷ்டங்களும் இருக்கவே செய்கின்றன. இயற்கையின் விசித்திரம் என்னவென்றால் ஆண் தனது ஆண்மையை நேசிப்பது போலவே பெண்ணும் தனது பெண்மையை நேசிக்கும்இயல்புணர்ச்சிகள் மனிதர்களிடம் இருக்கின்றன.
மனிதக் கருவுயிரின் (Embryo) மரபுவழித் தனிச்சிறப்புப் பண்புகள் தாய் தந்தையரின் சரிசமனான இனக்கீற்றுக்களில் (chromosomes) இருந்தே உருவாகின்றன. ஆனால் பிறக்கும் உயிரின் “பால்” எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்று விஞ்ஞானம் விளக்குகிறது. இனக்கீற்றுகள் X,Y என பாகுபடுத்தப்படுகின்றன. பெண் உயிரணு (Cell) இரண்டு X இனக்கீற்றுகளை கொண்டதாகவும் ஆண் உயிரணு ஒரு X இனக்கீற்றையும் ஒரு Y இனக்கீற்றையும் கொண்டதாகவும் உள்ளன. கருத்தரிக்கும் பொழுது ஆணின் கருவுயிர் நீர்மத்திலுள்ள உயிரணு பெண் உயிர்மத்துடன் ஐக்கியமாகி ஒருமுழுமையான உயிர்மம் உருப்பெறுகிறது.

Irantha-Pin---20.png
பின்னர் உயிர்மப் பிளவியக்கம் (Mitosis) நடைபெற்று கரு உருவாகின்றது X இனக்கீற்றும் Y இனக்கீற்றும் சேர்வதால் சிசு பெண்ணாகவும் ஏனைய வகைகளில் இனக்கீற்றுகள் சேர்ந்துகொள்ளுமிடத்து ஆணாகவும் உருப்பெறுகின்றன. இவ்வாறாக இனக்கீற்றுகள் சேர்ந்து ஆணோ, பெண்ணோ உருவாவது தற்செயலாக நடைபெறும் காரியம் அல்ல. நமது கர்மாவே இதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.
பெண்ணிடத்தோ ஆணுக்கு இருக்கவேண்டிய குணாம்சங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பிறப்புகள் தோறும் படிப்படியாக பரிணமிப்பது இயல்பு. இதேபோல் ஆணிடமும் பெண்மை மயமான குணாம்சங்கள் தோன்றுவதுண்டு. இந்த நிலைக்கு நமது  சிந்தனைகளும் செயற்பாடுகளுமே காரணங்களாகவுள்ளன.
இப்பரிணாம மாற்றங்கள் முதிர்வடையும்பொழுது இறப்பவர்கள் மறுபிறப்பில் ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் பிறக்கக்கூடும். இந்த மாற்றங்கள் பூரணத்துவம் பெறமுன்னர் இறப்பவர்கள் ஆண்மையுடைய பெண்களாகவும் பெண்மையுடைய ஆண்களாகவும் பிறக்கிறார்கள்.

No comments:

Post a Comment