Saturday 28 March 2015

இந்து மதம் ஒரு பொக்கிசம்

இந்த மதம் தான் இந்து மதம் என்றில்லை, எல்லா மதமும் இந்து மதம்தான் என்பதே என் கருத்து. 2010ம் ஆண்டு இந்த களம் பற்றிய சிந்தனை வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் மதம் பற்றி அறிந்திருந்தைவிட இப்போது பன்மடங்கு அதிகமாக அறிந்திருக்கிறேன். அப்போது பெருந்தெய்வங்களை மட்டுமே அறிந்திருந்த நான், இப்போது நாட்டார் தெய்வங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்திருக்கிறேன். அத்துடன் தத்துவார்த்த நிலைகளைப் பற்றிய புரிதல்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். என்னிடமிருந்த மாற்று மதங்களின் மீதான வெறுப்புணர்வு அம்மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டமையால் குறைந்திருக்கிறது. அப்பாவிடம் இருந்து வந்த கடவுள் மறுப்பும், இப்போது திராவிட நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெரும் பகுத்தறிவும் என்னுடைய கட்டுரைகளை செம்மையாக்க உதவும் என நினைக்கிறேன். என்நிலை வர்ணனை இதோடு போதும் கட்டுரைக்கு செல்வோம்.
கோவில் நிகழும் பாகுபாடு -

உயிர்களின் பரிணாமத்தினை விளக்கும் தசவதாரம்

பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்
****************************************************************
உலகில் உள்ள பிற மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த  அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள். வடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள். மஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள். அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள். இப்படி இந்து மதத்தில் நிறைய

இறந்த பின் எங்கு செல்கிறோம்?

முற்பிறப்பு நினைவுகள்
எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.

இஸ்லாமிய மதத்தில் 'ஆத்மீகத் தேடலுக்கு' அங்கு இடமிருக்கவில்லை

இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”

தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..



        காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.

கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
      ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

 நம்மவர் எந்த இடம் போனாலும் தம் பெயரை ஏதோ ஒரு வகையில் பொறித்திருப்போம் அதில் ஒன்று தான் நாம் பார்க்கப் போகும் இக் கோயிலாகும் இதன் பெயர் அங்கோர்வாட் (Angkor Wat ) என்பதாகும்.
                இது கம்போடியாவில் அமைந்துள்ளது. அங்கோர் என்பது தலை நகரம் அல்லது புனித நகரம் என பொருள்படும். கி.பி 12 ம் நூற்றாண்டில் 2 ம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள் நிலத்திலிருந்து ஏறத்தாள 64 மீட்டர் உயரமானவை.  2 ம் சூரியவர்மன் இந்து அரசானாக இருந்தவன்

Sunday 22 March 2015

இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணம்


karuda-puraanamஇந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும்.
இந்த கருடபுராணத்தில் விஷ்ணுவும், பறவைகளின் அரசன் (கருடன்) உரையாடுவார்கள்.

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!


10420362_807734832597985_8832963805986637600_nஇறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

கோயிலில் வழிபடும் முறை!


கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!
தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.
ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.

சிவபுராணம்


சிவபுராணம் பொருள் / விளக்கம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

கீதாசாரம்

எது நடந்ததோ, 
அது நன்றாகவே நடந்தது. 
எது நடக்கிறதோ, 
அது நன்றாகவே நடக்கிறது. 
எது நடக்க இருக்கிறதோ, 
அதுவும் நன்றாகவே நடக்கும். 
உன்னுடையதை எதை இழந்தாய்? 
எதற்காக நீ அழுகின்றாய்? 
எதை நீ கொண்டு வந்தாய், 
அதை இழப்பதற்கு? 
எதை நீ படைத்திருந்தாய், 
அது வீணாவதற்கு? 
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, 
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. 
எதை கொடுத்தாயோ, 
அது இங்கேயே கொடுக்கப்பட்டது. 
எது இன்று உன்னுடையதோ, 
அது நாளை மற்றொருவருடையதாகிறது. 
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். 

இதுவே உலக நியதியும், 
எனது படைப்பின் சாராம்சமுமாகும். 

                                                           பகவான் கிருஸ்ணர்