Thursday 3 September 2015

உண்மை தானே?

அவ்வளவு உறுதியான மதம் என்றால், எதற்கு மற்ற மதங்களைக் கண்டு அஞ்சவேண்டும்? மதம் மாறுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும்?? மதம் மாற்றுவதற்கு உயிர்பயம் காட்டவேண்டும்? அரபு நாடுகளில் ஒரு நாளைக்கு எத்தனை கிறிஸ்துவர்கள் மதமாற மறுப்பதால், கொல்லப்படுகிறார்கள் என்று தெரியுமா? மிகவும் பெருமையான மதம் என்றால், யாருடைய தூண்டலும் இல்லாது அவர்களே வந்து இணைந்து கொள்வார்கள். பெருமைமிக்க மதம் என்றால், எத்தகைய சூழ்நிலையிலும் அந்த மதத்தில் உறுதியாக இருப்பார்கள்.
மலேசியாவில் எல்லா மதத்தவர்களும் இஸ்லாமிய பாடங்களையும் வரலாறுகளையும் படிக்கவேண்டியது கட்டாயம். பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் இஸ்லாமிய பாடங்களைக் கட்டாயமாக போதித்து, அதில் தேர்ச்சிப் பெறவேண்டியதையும் கட்டாயமாக்குகிறார்கள். இதுதான் நிறைய முஸ்லீம் நாடுகளின் நிலை. இதை எந்தவகையில் சேர்ப்பது? யோகா கலை இவர்களின் உரிமையை அபகரிக்குதாம்; பசுக்கொலை தடுப்பு இவர்களின் உரிமையைப் பறிக்குதாம். மற்றவர்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவது முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களின் மதத்திற்கு அச்சுறுத்தல். இதனால் அச்சமடையும் அவர்கள், பயத்தின் காரணாம பயங்கரவாதிகளாகி மற்ற மதத்தினரை வேட்டையாடுதலும், ஷியா அஹ்மதியர்களை வேட்டையாடுதலும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சுருங்க கூறின், முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாட்டில் தங்கள் உரிமை பறிபோகிறது என்று ஆரவாரம் செய்வதும், பெரும்பாமையாக இருக்கும் நாட்டில் மற்றவர்களுக்கு உரிமையே கொடுக்காததும் வழக்கமாகும்.

ok

இந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்களா??


இந்துதர்மத்தைப் பற்றிய பல தவறான தகவல்களில் ஒன்றுதான் இந்த 33 கோடி தெய்வங்கள். இது ‘கோடி’ எனும் சொல்லுக்கு பிரம்மாண்டம் என மற்றொரு பொருள் இருப்பதை மறந்ததால் ஏற்பட்ட குழப்பமாகும்.
வேதங்களில் 33 தெய்வங்களைப் பற்றி குறிக்கப்படுகின்றது. இந்துதர்மத்தில் குறிக்கப்படும் 33 பெருந்தெய்வங்களைப் பற்றி “த்ரயஸ்த்ரிம்ஸ தேவ” என்று பௌத்த மத சாஸ்திரங்களான திவ்யவதனம் மற்றும் சுவர்ணபிரபஸ சூத்திரமும் கூட குறிக்கின்றன.
’கோடி’ என்றால் மிகச்சிறந்த, ஒப்புயர்வற்ற, நேர்த்திவாய்ந்த எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இதேபோல் தான், 725ஆம் ஆண்டு மஹாவைரோசன சூத்திரம் எனப்படும் பௌத்த மதம் சூத்திரத்தை சீன மொழியில் மொழிப்பெயர்க்கும் போது சப்தகோடி புத்தர்கள் என்பதை ‘7 கோடி புத்தர்கள்’ என்று மொழிப்பெயர்த்து விட்டனர். உண்மையில், சப்த கோடி புத்தர்கள் என்பது 7 தலைச்சிறந்த புத்தர்களைக் குறிக்கும். பின்னர், திபெத்திய பௌத்தர்கள் ‘கோடி’ எனும் சொல்லுக்கு வகை எனும் பொருள் கொண்டு, 7 வகையான புத்தர்கள் என்று மொழிப்பெயர்த்தனர்.
பிரகதாரண்யக உபநிடதத்தில் (சுக்ல யஜுர்வேதம்), 3ஆம் அத்தியாயத்தில் 33 பெருந்தெய்வங்களை யாரென்று விவரமாகக் குறிக்கப்படுகின்றது. 33 பெருந்தெய்வங்கள் – 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வின்கள். ஆகவே, 33 கோடி (330 மில்லியன்) தெய்வங்கள் என்பது தவறு. 33 பெருந்தெய்வங்கள் என்பதே சரியாகும்.
* 8 வசுக்கள் – பிரித்திவீ (பூமி), அக்கினி, ஆபம் (நீர்), வாயு, அந்தரிக்‌ஷம் (அண்டவெளி), சூரியன், சந்திரன், ஆகாயம். இந்த அஷ்டவசுக்களுக்கும் அதிபதியானவர் விஷ்ணு.
* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்
* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்‌ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்
* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி

ok

Wednesday 2 September 2015

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.



அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும்.

அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ?

குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ?

அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து பகிரவும் ....
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

ok

Tuesday 1 September 2015

மனுவில் பெண் உரிமை



1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக் கூடாது. (மனு 2-52)

2) எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)

3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)

4) நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)

5) கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)

6) குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண் இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394)

7) இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)

8) எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)

9) கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10) அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57)

11) பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)

12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)


ok