Sunday 21 December 2014

கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?

ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக் குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.
வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்தான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம்.

Friday 12 December 2014

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் மெல்லத் தொட்டுவிட்டு முழுவதுமாக பின்பு தனியே எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன்.

உள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நான் சொல்லிவிட வேண்டும். இந்த 'இறையுதிர் காலம்' என்ற சொல்லை முதன் முதலில்

நானும் நானும்: கடவுள்: மதம்: இஸ்லாம்

"எல்லா புகழும் இறைவனுக்கே"

இஸ்லாமின் இந்த வாசகங்கள் மிகவும் பிடிக்கும்.
இஸ்லாம் பற்றிய முழு அறிவு எனக்கு இல்லை. அதனால் சொல்லப்பட்டதில் பிழை இருக்கலாம். இவை இஸ்லாம் மதத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகள் அல்ல. இஸ்லாமில் சில விருப்ப பகுதிகளையும், சில சிந்தனைகளை மட்டும் இங்கே சிந்திப்போம். அனைத்தும் சொந்த கருத்துகள் மட்டுமே.

Tuesday 9 December 2014

காதலுக்கும், கல்யாணத்துக்கும்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு 

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

உங்கள் காதலின் அளவு எவ்வளவு?

இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.

இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு

Friday 5 December 2014

ஒரு ஊரில் அழகே உருவாய்...

தோழிகளை கடுப்பேற்றி ரசிப்பதன் சுகமே அலாதி. அதிலும் அவர்களின் "பொஸஸிவ்னஸ்"ஐ சீண்டி ரசிப்பதில் ஆனந்தமோ ஆனந்தம் தான். அப்படி என் தோழியை கடுப்பெற்றி ரசித்த ஒரு SMS நிகழ்வுதான் இது.

நான்: ஹாய் டா....

தோழி: சொல்லு டா செல்லம். என்ன பண்ற? எங்கடா இருக்க? உன்னை பார்க்கணும் போல இருக்கு.

நான்: நான் இப்போ பஸ் ஸ்டேண்ட்’ல இருக்கேன் மா. உன்ன பாக்க தான் கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். :) 

(இந்த அரை மணி நேரம் எவ்ளோ கடுப்பாக போறான்னு தெரியாமலே..)

தோழி: அய்யோ.. ச்ச்சோ ச்ச்வீட் டா.. சீக்கிரம் வாடா செல்லம்.

நான்: வேய்ட்டீஸ்.. இரு பஸ் ஏறிக்கிறேன். அப்புறம் மெசேஜ் பண்றேன்.

Wednesday 3 December 2014

சைவம் & அசைவம்! எது உடலுக்கு நல்லது?


saivamசைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது.அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. அதே சமயம் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவமா என்று கருத்துதொற்றுமை இல்லை.
அப்போ உடல் நலத்திற்கு எது நல்லது?

ஆரோக்­கி­யமாக இருக்க வேண்­டுமா? இதோ தண்ணீர் மருத்­துவம்

சாதா­ர­ண­மாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்­படும் பல்­வேறு பிரச்சி­னை­க­ளுக்கு தீர்­வாக இருக்­கி­றது.
இத்­த­கைய தண்­ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வரு­வதால் நம்மை தாக்கும் பல நோய்­களில் இருந்து விடு­ப­டலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி.
இதை கடை­பி­டிக்கும் ஜப்­பா­னிய மக்கள் எப்­போதும் சுறு­சு­றுப்­புடன் ஆரோக்­கி­ய­மாக இருக்­கின்­றனர். இதை பற்­றிய நன்­மை­களை தெரிந்து கொள்­ளலாம்.
செரி­மா­னத்­திற்கு உதவும்
காலையில் வெறும் வயிற்றில் வெது­வெ­துப்­பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்­ட­பாலிக் விகி­த­மா­னது 24 சத­வீதம் அதி­க­ரிக்கும். இதனால் உண்ணும் உண­வா­னது விரைவில் செரி­மா­ன­ம­டைந்­து­விடும்.
அல்சர் பிரச்சினை நீங்கும்